வயதான காலத்தில் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள் ஒருபக்கம் என்றால் காங்கிரஸ் கொடுக்கும் நச்சரிப்புக்கள் இன்னொறு பக்கம்
பாவம் கருணாநிதி என்னத்தான் செய்வார்?
தமிழருக்காக ராத்திரி பகல் உழைத்து உழைத்து ஓடாய் போனது தான் மிச்சம்
பாழாய்போன தமிழருக்கு கொஞ்சமேனும் நன்றி இருக்கா ?
ஒரு ரூபாய்க்கு அரிசியை போட்டா தின்னுப்புட்டு சும்மா கிடக்க வேண்டியது தானே
காய்கறி விலை என்னாச்சி மசாலாசாமான் விலை என்ன என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறான்
டி வி கொடுத்தா வாங்கிவைச்சு மெகா சீரியலை பார்த்து மூக்கு சீந்த வேண்டிய பொம்மனாட்டிகள் ராசா இவ்வளவு ஊழல் பண்ணினாராமே ராசாத்தி அம்மாளுக்கும் பணம் போச்சாமே என்று பைப்படியிலும் மீன்கடையிலும் நின்னு பேசுரா
அறிவே இல்லாத குடிகாரப்பயலுக கூட டாஸ்மாக் சரக்கை வாங்கி கக்கத்தில் சொருகி கிட்டு இலவச நிலம் எங்கே? மருத்துவ காப்பீடு எங்க போச்சி? வூடு கட்ட எவ்வளவு கமிஷன் என்று வாய் கூசாம பேசுறான்கள் என்று தமிழினத் தலைவருக்கு மிகவும் கோபம்
இருக்காதா என்ன? அவர் என்ன ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே தன் பெயரில் பட்டா போட்டுக் கொள்ளவா ஆசைப்பட்டார்?
தானும் தனக்கு பிறகு தனது பிள்ளைகள் பேரன் பேத்திகள் மட்டும்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று விரும்பினார்
அது ஒரு தவறா?
ராஜராஜ சோழனும் குலசேகரப் பாண்டியனும் ஆசைப்படலாம் கலைஞர் படக்கூடாதா?
இந்த மன்னர்களை மாதிரிதானே தலைவரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி இருக்கிறார்
அவர்கள் அணைக்கட்டுக்களையும் ஆலையங்களையும் கட்டிய மாதிரித்தான் இவரும் பீர் கம்பெனிகளையும் நக்ஷத்ர ஹோட்டல்களையும் கட்டியுள்ளார்
அவர்கள் பசியால் வாடியவர்களுக்கு அன்னச்சத்திரங்கள் திறந்ததுபோல இவர் போதைக்காக ஏங்கியவருக்கெல்லாம் பிராந்திக் கடை திறந்துள்ளார்
தமிழன் பண்பாட்டுச் சிறப்பை ஊர் உலகமெல்லாம் அறிந்து கொள்ள மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்துகிறாரே அந்த ரசனைக்குப் பக்கத்தில் நிக்கமுடியுமா இந்த மன்னர்களால்...!
இப்படி தமிழருக்காகவே தியாக வாழ்வை நடத்துகின்ற அவர் தனது வாரிசுகள் நாட்டை ஆள நினைப்பதில் என்ன குற்றம்?
பாவம் கருணாநிதி என்னத்தான் செய்வார்?
தமிழருக்காக ராத்திரி பகல் உழைத்து உழைத்து ஓடாய் போனது தான் மிச்சம்
பாழாய்போன தமிழருக்கு கொஞ்சமேனும் நன்றி இருக்கா ?
ஒரு ரூபாய்க்கு அரிசியை போட்டா தின்னுப்புட்டு சும்மா கிடக்க வேண்டியது தானே
காய்கறி விலை என்னாச்சி மசாலாசாமான் விலை என்ன என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறான்
டி வி கொடுத்தா வாங்கிவைச்சு மெகா சீரியலை பார்த்து மூக்கு சீந்த வேண்டிய பொம்மனாட்டிகள் ராசா இவ்வளவு ஊழல் பண்ணினாராமே ராசாத்தி அம்மாளுக்கும் பணம் போச்சாமே என்று பைப்படியிலும் மீன்கடையிலும் நின்னு பேசுரா
அறிவே இல்லாத குடிகாரப்பயலுக கூட டாஸ்மாக் சரக்கை வாங்கி கக்கத்தில் சொருகி கிட்டு இலவச நிலம் எங்கே? மருத்துவ காப்பீடு எங்க போச்சி? வூடு கட்ட எவ்வளவு கமிஷன் என்று வாய் கூசாம பேசுறான்கள் என்று தமிழினத் தலைவருக்கு மிகவும் கோபம்
இருக்காதா என்ன? அவர் என்ன ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே தன் பெயரில் பட்டா போட்டுக் கொள்ளவா ஆசைப்பட்டார்?
தானும் தனக்கு பிறகு தனது பிள்ளைகள் பேரன் பேத்திகள் மட்டும்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று விரும்பினார்
அது ஒரு தவறா?
ராஜராஜ சோழனும் குலசேகரப் பாண்டியனும் ஆசைப்படலாம் கலைஞர் படக்கூடாதா?
இந்த மன்னர்களை மாதிரிதானே தலைவரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி இருக்கிறார்
அவர்கள் அணைக்கட்டுக்களையும் ஆலையங்களையும் கட்டிய மாதிரித்தான் இவரும் பீர் கம்பெனிகளையும் நக்ஷத்ர ஹோட்டல்களையும் கட்டியுள்ளார்
அவர்கள் பசியால் வாடியவர்களுக்கு அன்னச்சத்திரங்கள் திறந்ததுபோல இவர் போதைக்காக ஏங்கியவருக்கெல்லாம் பிராந்திக் கடை திறந்துள்ளார்
தமிழன் பண்பாட்டுச் சிறப்பை ஊர் உலகமெல்லாம் அறிந்து கொள்ள மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்துகிறாரே அந்த ரசனைக்குப் பக்கத்தில் நிக்கமுடியுமா இந்த மன்னர்களால்...!
இப்படி தமிழருக்காகவே தியாக வாழ்வை நடத்துகின்ற அவர் தனது வாரிசுகள் நாட்டை ஆள நினைப்பதில் என்ன குற்றம்?
இந்த ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் புத்தி சுத்தமாக கெட்டுப்போய் விட்டது
எதற்காக இப்படி அவசரப்பட்டுக் கூட்டணி அமைக்க வேண்டும்?
நிதானமாக ஏப்ரல் 13 ஆம் தேதிக்குமேல் கூட்டணி வைத்துக் கொண்டால் குடியா முழுகிடப் போறது
எல்லாம் பொறாமை பொச்சரிப்பு
ஆசியாவில் பெரிய பணக்காரர் என்ற நிலையிலிருந்து எங்கே உலகப்பணக்கார வரிசையில் கலைஞர் இடம்பிடித்து விடுவாரோ என்ற ஆதங்கம்!
ஒரு தாழ்த்தப்பட்டவர் உலகப் பெயர் எடுத்துவிடப் போகிறாரே என்ற பதபதைப்பு எரிச்சல்
போச்சி போச்சி எல்லாம் போச்சி
பாளையங்கோட்டை சிறையில் பாம்பும் தேளும் நடுவில் தமிழருக்காக கிடந்த தியாகம் போச்சி
ஓடும் ரயிலை இடமறித்து தமிழுக்காக தலை கொடுத்த வீரம் போச்சி
ஆறாவது முறையும் அரியணை ஏற வேண்டுமென்ற கனவு போச்சி
ஸ்ரீரங்கமும் மதுரையும் கூட்டாச்சேர்ந்து ஒதுக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட திருக்குவளையை தெருவில் நிறுத்த சதி செய்து விட்டார்கள்
ஊழல் என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த உத்தமரை
அதிகார துஷ்பிரயோகத்துக்கு திலகமிட்டு பவனிவரச் செய்த தத்துவ வித்தகரை
அரவணைப்பதுபோல் கழுத்தறுப்பது எப்படி என்று புதுப்பாடம் உருவாக்கிய சத்திய சீலரை
குப்புறத்தள்ள கைகோர்த்து விட்ட இவர்களை கடவுள் கவனித்துக் கொள்ளட்டும்
எதற்காக இப்படி அவசரப்பட்டுக் கூட்டணி அமைக்க வேண்டும்?
நிதானமாக ஏப்ரல் 13 ஆம் தேதிக்குமேல் கூட்டணி வைத்துக் கொண்டால் குடியா முழுகிடப் போறது
எல்லாம் பொறாமை பொச்சரிப்பு
ஆசியாவில் பெரிய பணக்காரர் என்ற நிலையிலிருந்து எங்கே உலகப்பணக்கார வரிசையில் கலைஞர் இடம்பிடித்து விடுவாரோ என்ற ஆதங்கம்!
ஒரு தாழ்த்தப்பட்டவர் உலகப் பெயர் எடுத்துவிடப் போகிறாரே என்ற பதபதைப்பு எரிச்சல்
போச்சி போச்சி எல்லாம் போச்சி
பாளையங்கோட்டை சிறையில் பாம்பும் தேளும் நடுவில் தமிழருக்காக கிடந்த தியாகம் போச்சி
ஓடும் ரயிலை இடமறித்து தமிழுக்காக தலை கொடுத்த வீரம் போச்சி
ஆறாவது முறையும் அரியணை ஏற வேண்டுமென்ற கனவு போச்சி
ஸ்ரீரங்கமும் மதுரையும் கூட்டாச்சேர்ந்து ஒதுக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட திருக்குவளையை தெருவில் நிறுத்த சதி செய்து விட்டார்கள்
ஊழல் என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த உத்தமரை
அதிகார துஷ்பிரயோகத்துக்கு திலகமிட்டு பவனிவரச் செய்த தத்துவ வித்தகரை
அரவணைப்பதுபோல் கழுத்தறுப்பது எப்படி என்று புதுப்பாடம் உருவாக்கிய சத்திய சீலரை
குப்புறத்தள்ள கைகோர்த்து விட்ட இவர்களை கடவுள் கவனித்துக் கொள்ளட்டும்