பகவான் நாமத்தை தைலதாரைப் போல இடைவெளி இல்லாமல் சொல்லும் நாம ஜெபம் சிறந்தது என்று நமது ஞானிகளும் சொல்கிறார்கள் சாஸ்திரமும் அப்பத்தான் பேசுகின்றன
ஆனால் அவ்வளவு உயரிய சிறந்த நாம ஜெபத்தை எப்படிச் சொல்வது?
வாய் விட்டுச் சொல்லலாமா? மனதிற்குள்ளேயே சொல்வதா என்று பலர் குழம்புகிறார்கள்
ஒரு கிறிஸ்துவ பாதிரியார் என்னை பார்க்க வந்தார்.
ஆனால் அவ்வளவு உயரிய சிறந்த நாம ஜெபத்தை எப்படிச் சொல்வது?
வாய் விட்டுச் சொல்லலாமா? மனதிற்குள்ளேயே சொல்வதா என்று பலர் குழம்புகிறார்கள்
ஒரு கிறிஸ்துவ பாதிரியார் என்னை பார்க்க வந்தார்.
உங்களுக்காக நான் ஜபம் செய்யட்டுமா என்று கேட்டார்.
பசுங்கன்றை அணைந்திருக்கும் பாலகிருஷ்ணனுக்கும், ஆட்டு குட்டியை அரவனைத்திருக்கும் ஏசு நாதருக்கும் வேற்றுமை பாராட்டுபவன் அல்ல நான்.
எனவே நீங்கள் ஜபம் செய்யலாம் என்றேன்.
அவர் பைபிளை மார்போடு அணைத்தப்படி கண்களை மூடி மண்டியிட்டு அமர்ந்தார்.
இந்த காட்சி எனக்கு தெய்வீக உணர்ச்சியை தூண்டிவிட்டு என் கண்களை மூட செய்தது.
பசுங்கன்றை அணைந்திருக்கும் பாலகிருஷ்ணனுக்கும், ஆட்டு குட்டியை அரவனைத்திருக்கும் ஏசு நாதருக்கும் வேற்றுமை பாராட்டுபவன் அல்ல நான்.
எனவே நீங்கள் ஜபம் செய்யலாம் என்றேன்.
அவர் பைபிளை மார்போடு அணைத்தப்படி கண்களை மூடி மண்டியிட்டு அமர்ந்தார்.
இந்த காட்சி எனக்கு தெய்வீக உணர்ச்சியை தூண்டிவிட்டு என் கண்களை மூட செய்தது.
அடுத்த வினாடி அந்த பாதிரியிடம் இருந்து ஏசுவே என்ற பெரும் சத்தம் வந்து என் காதுகளையும் நெஞ்சையும் ஒரே நேரத்தில் அசுர வேகத்தில் துடிக்க செய்தது.
சுமார் அரை மணி நேரம் அவர் எனக்காக ஜபித்தார்.
அத்தனையும் பேரொலி, பேரோசை, பேரிரைச்சல், காதுகள் எல்லாம் புண்ணாகி விட்டது.
ஏன் இப்படி பெரும் சத்தத்தில் அவர் ஜபம் செய்தார் என்று எனக்கு புரியவேயில்லை.
சுமார் அரை மணி நேரம் அவர் எனக்காக ஜபித்தார்.
அத்தனையும் பேரொலி, பேரோசை, பேரிரைச்சல், காதுகள் எல்லாம் புண்ணாகி விட்டது.
ஏன் இப்படி பெரும் சத்தத்தில் அவர் ஜபம் செய்தார் என்று எனக்கு புரியவேயில்லை.
ஒரு வேளை கடவுள் வானத்தில் இருக்கிறார். வானம் வரையில் தன் குரல் கேட்க வேண்டும் என்று செய்தாரா?
அல்லது கடவுளின் காது மந்தமாகயிருக்குமோ என்று சந்தேகப்பட்டு அப்படி செய்தாரா? ஒன்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
சத்தமாக செய்யும் எந்த பிராத்தனையும், ஜபமும் எதிர்பார்த்த பலனை தரவே தராது.
கத்தியதனால் நமது சக்தி வீணாகுமே தவிர கடவுள் சக்தியை ஒரு துளி கூட பெற்று தராது.
ஆனாலும் இந்த மாதிரியான ஜபங்களை மதபோதகர்கள் செய்வதற்கு முக்கியமான காரணம் மனிதர்களை கவரத்தானே ஒழிய கடவுளை கவர அல்ல.
நமது சாஸ்திரங்கள் சத்தமாக செய்யும் ஜபத்தை அதர்மம் என்கிறது.
உதடுகள் அசைந்து மெல்லிய ஓசையில் செய்யும் ஜபத்தை கூட மத்திமம் என்று தான் சொல்கிறது.
உதடுகள் அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் மனம் மட்டுமே செய்யும் ஜபமே உத்தமமானது என்று சொல்கிறது.
அல்லது கடவுளின் காது மந்தமாகயிருக்குமோ என்று சந்தேகப்பட்டு அப்படி செய்தாரா? ஒன்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
சத்தமாக செய்யும் எந்த பிராத்தனையும், ஜபமும் எதிர்பார்த்த பலனை தரவே தராது.
கத்தியதனால் நமது சக்தி வீணாகுமே தவிர கடவுள் சக்தியை ஒரு துளி கூட பெற்று தராது.
ஆனாலும் இந்த மாதிரியான ஜபங்களை மதபோதகர்கள் செய்வதற்கு முக்கியமான காரணம் மனிதர்களை கவரத்தானே ஒழிய கடவுளை கவர அல்ல.
நமது சாஸ்திரங்கள் சத்தமாக செய்யும் ஜபத்தை அதர்மம் என்கிறது.
உதடுகள் அசைந்து மெல்லிய ஓசையில் செய்யும் ஜபத்தை கூட மத்திமம் என்று தான் சொல்கிறது.
உதடுகள் அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் மனம் மட்டுமே செய்யும் ஜபமே உத்தமமானது என்று சொல்கிறது.
கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு கடவுளிடம் நாம் வைக்கும் விண்ணப்பம் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஜபம் செய்வது என்பது கடவுளை தொடர்ச்சியாக நினைப்பது தான்.
நினைப்பை எல்லாம் வெளியில் சொன்னால் அது பக்தியின் அடையாளமாக இருக்காது.
புத்தி மாறாட்டத்தின் அடையாளமாகவே கருதப்படும்.
உண்மையில் கிறிஸ்துவ மதம் கூட சப்தம் இட்டு ஜபம் செய்வதை அனுமதிக்கவில்லை.
உன் அயலானுக்கு தெரியாத வண்ணமே என்னை பிராத்தனை செய் என பைபிள் சொல்கிறது.
ஜபம் செய்வது என்பது கடவுளை தொடர்ச்சியாக நினைப்பது தான்.
நினைப்பை எல்லாம் வெளியில் சொன்னால் அது பக்தியின் அடையாளமாக இருக்காது.
புத்தி மாறாட்டத்தின் அடையாளமாகவே கருதப்படும்.
உண்மையில் கிறிஸ்துவ மதம் கூட சப்தம் இட்டு ஜபம் செய்வதை அனுமதிக்கவில்லை.
உன் அயலானுக்கு தெரியாத வண்ணமே என்னை பிராத்தனை செய் என பைபிள் சொல்கிறது.
இதை உணராத பல கிறிஸ்துவர்கள் பாவம் தாங்கள் செய்வது என்னவென்று அறியாது இருக்கிறாரகள்.
சிலர் மந்திரம் ஜபம் செய்யும் போது விரல்விட்டு எண்ணுகிறார்கள் .
சிலரோ ஜப மாலை பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரண்டுமே சரியான முறையாகாது.
விரல் கணுவை எண்ணி செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது
ஆனால் இது கூட மன ஒரு நிலைப்பாட்டிற்கு இடஞ்சல் தான்.
கடவுள் பெயரை இத்தனை முறை தான் ஜபிக்க வேண்டும் என கணக்கு இருக்கிறதா என்ன.
கணக்கே இல்லாதவாறு சொன்னால் உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் நாராயண வடிவமாகவே ஆகும்.
சொல்லும் சொல்பவனும் தெய்வமாவது தான் ஜபம்.
சிலர் மந்திரம் ஜபம் செய்யும் போது விரல்விட்டு எண்ணுகிறார்கள் .
சிலரோ ஜப மாலை பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரண்டுமே சரியான முறையாகாது.
விரல் கணுவை எண்ணி செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது
ஆனால் இது கூட மன ஒரு நிலைப்பாட்டிற்கு இடஞ்சல் தான்.
கடவுள் பெயரை இத்தனை முறை தான் ஜபிக்க வேண்டும் என கணக்கு இருக்கிறதா என்ன.
கணக்கே இல்லாதவாறு சொன்னால் உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் நாராயண வடிவமாகவே ஆகும்.
சொல்லும் சொல்பவனும் தெய்வமாவது தான் ஜபம்.
+ comments + 13 comments
வணக்கம் குருஜி. நினைப்பை எல்லாம் வெளியில் சொன்னால் அது பக்தியின் அடையாளமாக இருக்காது. முற்றிலும் சரியே. நாம் சொல்லுகின்ற ஸ்லோகமோ அல்லது ஜெபமோ ஆரம்பத்தில் சத்தம் போட்டு சொல்லுகிறோம். பின்னர் அதை கூர்ந்து சொல்லும்போது நம் மனதில் ஆழப்பதிந்து விடும். பின்னர் மனதில் உதடு அசையாமல் சொல்லும்போது, மனதில் ஒரே எண்ண அலைகளாக குவிந்து ஜபமோடு ஒன்றிவிடும். அப்பொழுது மனதில் அமைதி ஏற்படும். உண்மை தான் குருஜி. ஆனால் பழகுவதற்கு ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். முயற்சி செய்து பார்த்தால் எந்த ஒரு விஷயத்திற்கு பதட்டபடாமல் மனது அமைதி நிலையை எட்டும் என்பதில் சந்தேகமில்லை. நான் முயற்சி செய்து பார்க்கின்றேன் குருஜி. இன்றைய பதிவு மிகவும் அருமை. மிக்க நன்றி குருஜி.
nandri.vegunaal keelvi bathil kidaithathu.
உதடுகள் அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் மனம் மட்டுமே செய்யும் ஜபமே உத்தமமானது என்று சொல்கிறது.
கருத்து சிறப்பாக இருக்கிறது.
ஐயா அடியவன் தங்களது கட்டுரையில் உள்ள தவறை சுட்டிக் காட்டியதிலிருந்து எனது பின்னுட்டங்களை தாங்கள் வெளியிடுவதே இல்லை.. அடியவனுக்கு தங்கள் மீது தனிப்பட்ட விருப்பு வெருப்பு கிடையாது ,, நல்லதை பாராட்டியும் தவறை சுட்டிக்காட்டியும்
பின்னுட்டம் இடுகிறேன் அவ்வளவே,
இன்றை கட்டுரையிலும் ஒரு தவறு இருக்கிறது .. முதலில்
இக் கருத்துக்கு பதில் அளியுங்கள் பிறகு தொடர்கிறேன்..
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களை மதிக்கக்கூடிய
எத்தனையோ வாசக்ர்களில் அடியவனும் ஒருவன்,
கிறிஸ்தவ பாதிரிமார் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும்போது சத்தமஹா பிரதிப்பர்கள் ஆனால் தங்களுக்கஹா மௌனத்தில் பிறர்திப்பர்கள் என்ன்று தெரிகிறது -ச.த.மன்னன்
@Anonymous
Guruji, your answer is very nice and true. But really I don't know what they ( Especialy Christians ) are shouting & disturbing others. It's really touching.
வணக்கம் @எடப்பாடி சிவம்
சுவாமிஜி இன்டர்நெட் பயன்படுத்துவது கிடையாது தினமும் அனைத்து பின்னுட்டங்களையும் படித்துவிடுவார் தனிமனிதர்களை தாக்குவது போன்ற பின்னுட்டங்களை வெளியிடவேண்டாம் என்று தெரிவித்துள்ளாரே தவிர
கட்டுரையில் உள்ள தவறை சுட்டி காட்டும் பின்னுட்டங்களை வெளியிட வேண்டாம் என்று கூறவில்லை தாரளமாக தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்
இப்படிக்கு
சதீஷ் குமார்
சுவாமிஜிக்கு வணக்கங்கள் பல ,,
//சிலர் மந்திரம் ஜபம் செய்யும் போது
விரல்விட்டு எண்ணுகிறார்கள் .
சிலரோ ஜப மாலை பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரண்டுமே சரியான முறையாகாது.
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,,//
அது சரியா எனத் தெரியவில்லை ..
ஆனால் ஜப மாலை கொண்டு இறைவனது திருநாமத்தை கணிக்கும் மரபு எப்போதிருந்தோ இருக்கிறது ,,
ஜபமாலை தந்த சத்குரு நாதா - என்று
அருணகிரிநாதரும்.
நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்னுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே
என்று திருஞானசம்பந்தரும் அருளிச் செய்திருப்பதால்
ஜப மாலை வழிபாடு நமக்கு உடன்பட்டதே என்பது
அடியவனுடைய கருத்து,
என்று
அவர்கள் வழிபாட்டு முறை அவர்களுக்கு நம் வழிபாட்டு முறை நமக்கு
நீங்களா அனுமதித்த பின் அதை குறை சொல்வது நியாயம் இல்லையே
இன்னொன்று, இந்த பிரார்த்தனையால் கடவுள் பலன் கொடுப்பதில்லை, மனமாற்றம் நிகழும். கிட்டத்தட்ட ஒருவகை ஹிப்னாட்டிசம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...
சொல்லும் சொல்பவனும் தெய்வமாவது தான் ஜபம்.மிகவும் சரியான கருத்து
(கடவுளிடம் நாம் வைக்கும் விண்ணப்பம் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.)இது மாட்டு சந்தையில் கையில் துணி போட்டுக் கொள்வார்களே அப்படியா?
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
உலகில் வாழும் அனைத்தையும் படைத்த்து ஒரே இறைசக்தி என்கிற உண்மை பலருக்கும் தெரியும்.அந்த மாபெரும் சக்தி தன்னை வழிபடச்சொல்லி யாரையும் பணிக்கவில்லை.
அப்படியே மனிதர்கள் தங்களுக்குள் ஒரு கொள்கை வகுத்துக்கொண்டு வழிபட்டாலும் தனித்தனி வழிபாட்டு முறை எதற்கு? இந்த இடத்தில்தானே மனித இனத்தில் பிரிவினைகள் தோன்றுகிறது. அவர் வழிபாடு அவருக்கு இவர் வழிபாடு இவருக்கு என்ற நிலை என்று ஒழிந்து என்று எல்லோரும் ஒரே முறையில் வழிபடுகிறார்களோ அன்றுதான் மனித இனத்துக்கு விடிவு. Smile
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
திரு.குமரன் அவர்களின் கருத்து தவறு.இறைவனை எந்த வடிவில் எந்த முறையில் வழிபட்டாலும் ஏற்று அருள்புரிகிறான். அவரவர் மனநிலைக்கும் ஆன்மீக நிலைக்கும் ஏற்ற ஒரு வழிபாட்டை பின்பற்றுவதற்காகத்தான் பலவித வழிபாட்டு முறைகள். ஒருவர் ஜோதி வடிவிலும், ஒருவர் அருவமாகவும், மற்றொருவர் அருவுருவமாகவும், மற்றொருவர் உருவமாகவும் வைத்து வழிபடுவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தான் வழிபடும் முறையே சரி. மற்றதெல்லாம் தவறு. தன் வழியில்தான் மற்றவர்களும் வழிபட வேண்டும் என்று நினைப்பது தான் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. எனக்கு இனிப்பு பிடிக்காது. மற்றொருவருக்கு கசப்பு பிடிக்காது. கசப்பு பிடிக்காத ஒருவரை கசப்பு சாப்பிட சொல்வதை போல் ஒருவா் விரும்பாத முறையில் வழிபடச் சொல்வது தவறு.
@எடப்பாடி சிவம்
To
Shivathiru Edapadi Shivam
please contact me at my e-mail: namahshivayam@gmail.com