Store
  Store
  Store
  Store
  Store
  Store

முஸ்லிம்களால் சிதைந்த இந்திய மருத்துவம்


   டிக்கடி விளையாட்டாக ஒரு கருத்தை நான் சொல்வேன்.  வெள்ளைக்காரர்கள் வேட்டையாடி விலங்குகளின் பச்சை மாமிசத்தை தின்று கொண்டிருந்த போது இந்தியர்கள் மிருகங்களுக்கான மருத்துவமனைகளை கட்டிக் கொண்டிருந்தார்கள் என்று.

 இது வேடிக்கையான கருத்து அல்ல.  சரித்திர ஆதாரப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தனித்தனி மருத்துவமனை இருந்ததை அசோகரின் கல்வெட்டுகள் எடுத்து சொல்லுகின்றன.

  தற்போதைய ஆங்கில வழி மருத்துவம் எனும் அலோபதி முறை தோன்றுவதற்கு பல்லாயிர வருஷத்திற்கு முன்பே காச நோய்க்கும் பாரிச வாயுவிற்கும் அஜீரணத்திற்கும் விஞ்ஞானப் படியிலான மருந்துக்களை கண்டுபிடித்தவர்கள் நாம் தான்.


   உடல் வளம் பெற, நலம் பெற டானிக் சாப்பிடுகிறோமே அந்த டானிக் முறையை உலகிற்கு அறிமுக படுத்தியதே இந்துக்கள் தான்.

  மூக்கின் வழியாக மயக்க மருந்து கொடுக்கும் முறையை உருவாக்கியதும் நாம் தான்

  நமது பழங்கால மருத்துவ ஞானிகளில் மிகச் சிறந்தவர்கள் என கருதப்படும் சரகரும், சுஸ்ருதரும் அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள்.

  இவர்கள் காலத்திற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை முறை இந்தியாவில் நடைமுறையில் இருந்திருக்கிறது.

 இவர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் அஸ்வினி குமாரர்கள் என்ற மருத்துவ தேவதைகள் மூளை மாற்று அறுவை சிகிச்சையை கூட திறம்பட செய்ததாகவும் அதன் வழிமுறைகள்  இது தான் எனவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


  அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் சர்ஜரி என்று அழைக்கிறோம்.  சர்ஜரி என்ற வார்த்தை சால்ய என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது ஆகும்.

 சால்ய என்றால் உடம்பில் தைத்த அம்பு மற்றும் வேறு வகை ஆயுதங்களை அகற்றுதல் என்பதாகும்.

  நவீன அறுவை சிகிச்சைக்கும் பண்டைய கால அறுவை சிகிச்சைக்கும் பெருமளவு வேற்றுமைகள் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்.

  உடலில் உள்ள கட்டிகளை அகற்றுதல் அழுகிய சதைப் பகுதிகளை நீக்குதல் எலும்புகளை வெட்டி எடுத்தல் உடல் பாகங்களை நீக்குதல் முதலிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக அப்போது நடத்தப்பட்டுள்ளது.

 மனித உடலின் ரகசியங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை பிளந்து உள்ளமைப்பை ஆராய வேண்டுமென சுஸ்ருதர் சொன்னவைகளை அக்கால வைத்தியர்களில் பலர் பின்பற்றியிருக்கிறார்கள்.


   இந்த முறையானது உடலமைப்பை பற்றிய அறிவை மருத்துவனுக்கு சேதமில்லாமல் விளக்கி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உதவியது.

 அக்கால ஆப்ரேஷன் தியேட்டர்களில் வாட்கள், சிறிய ரக ஈட்டிகள், ஊசிகள், கத்திகள் உட்பட 127 ரக கருவிகள் இருந்திருக்கின்றன.

 மனித உடலில் மாதிரிகள் அரக்கினாலும் வெள்ளரிக்காய், சுரக்காய் போன்றவற்றாலும் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

  உணவு ஜீரணமாகும் முறைகள் கருவளர்ச்சிகள் ஆகியவற்றை தற்கால மருத்துவர்களை போலவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மருத்துவரகள் அறிந்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

 ஐந்து வகையான மூலப்பொருட்களை தனக்குள்ளே கொண்ட உணவு பிராண வாயுடன் கலந்து உயிர் இயக்கத்திற்கு எப்படியெல்லாம் ரத்தமாகவும் சத்துப் பொருளாகவும் மாறுகின்றன என்று சரகசம்ஹிதை வர்ணிப்பதை பார்க்கும் போது மிகவும் முன்னேற்றமடைந்துள்ள நவீன மருத்துவத்தின் மாபெரும் நிபுணர்கள் வர்ணிப்பது போலவே இருக்கிறது.  


 தமணிகளின் வேலை, கல்லீரலின் வேலை, இதயத்தின் வேலை, நுரையீரல், முதுகு எலும்பு, மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நல்ல முறையில் அறிந்து அதற்கான சிகிச்சைகளை கொடுத்து வந்தார்கள்.

 எகிப்திய பிரமிடுகளில் உள்ள மம்மிகளின் உடலை அறுத்து ஆராய்ந்த போது அதன் சிறுநீரகங்களில் பெரிய அளவிலான கால்ஷிய கற்கள் இருப்பதை அறிய முடிகிறது.

 பெருவாரியான மம்மிகள் சிறுநீரக கற்களுடனே காணப்படுகின்றன.  இதை வைத்துப் பார்க்கும் போது அக்காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்க வைத்தியர்கள் சிறுநீரகங்களை பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

ஆனால் இந்திய மருத்துவர்கள் சிறுநீரக சிகிச்சை முறையில் கெட்டிக்காரர் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய திரவங்களை நோயாளிகளை அதிகம் குடிக்க வைத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.

 
   சில வைத்திய நூல்களை நுணுக்கமாக ஆராயும் போது சிருநீரக கற்கள் அறுவை சிகிச்சையின் மூலம் கூட அகற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

 இன்று நோயின் மூலம் மற்றும் தன்மையை ஆராய முடிவு செய்ய ஸ்கேன்கள் எப்படி பயன்படுகிறதோ அதே போல மனித நாடிகளின் ஓட்டத்தை துல்லியமாக கணக்கிட்டு நோய்களை பற்றிய சரியான இறுதி முடிவை செய்திருக்கிறார்கள்.

 உடல் ஆரோக்கியம் பற்றி அக்கால மக்களுக்கு விழிப்புணர்வு இருந்ததோ இல்லையோ வைத்தியர்களுக்கு தெளிந்த ஞானமும் அனுபவமும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

  பழங்கால வைத்திய முறை முஸ்லிம் மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பின்னரே காலரா போன்ற கொள்ளை நோய் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.


 

Contact Form

Name

Email *

Message *