Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாதா சிலைக்கு மட்டும் உயிர் உண்டா...?


  ந்து மத வேதங்களும் உபநிசதங்களும், சிருஷ்டி காலத்திற்கு முன்பு கடவுள் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்ததாக சொல்கிறது.

 அப்படி இருந்ததனால் கடவுளுக்கு நாராயணர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  கிறிஸ்த்துவ மத வேத நூலான பைபிளில் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் முதல் இரண்டு வசனங்களில் ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார்.  பூமியானது ஒழுங்கில்லாமலும், வெறுமையாகவும் இருந்தது.  ஆழத்தில் இருள் கவ்வியிருந்தது.  தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைந்தாடி கொண்டிருந்தார் என்று சொல்கிறது.


  ஆதியாகமம் உருவாவதற்கு முன்பே வேதங்கள் உருவாகி விட்டதினால் பைபிளுக்கு இந்த கருத்தை தானமாக கொடுத்தது நிச்சயம் வேதங்களாகத் தான் இருக்க வேண்டும்.

  கர்த்தரின் முதல் படைப்பான ஆதாம் தனது நூற்றி முப்பதாவது வயதில் பிள்ளை பெற்றான் எனவும் தொள்ளாயிரத்து முப்பதாவது வயதில் இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆதாமுக்கு பின் வந்த சந்ததியினர் அவ்வளவு நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்ததாக தெரியவில்லை.


  ஆதியாகமம், ஆறாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் என் ஆவி என்றைக்கும் மனிதர்களோடு போராடுவதில்லை அவன் வெறும் மாமிசம் அவன் பூமியில் இருக்க போகும் நாட்கள் நூற்றி இருபது வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 இந்து மத புராணங்களும் ஜோதிட சாஸ்திரமும் மனிதனின் நிகர வயது நூற்றி இருபதே என்கிறது.

 மேலும் பைபிளில் பல இடத்தில் ராமா என்ற பெயர் அடிக்கடி பேசப்படுகிறது.

 உதாரணமாக நோவாவின் வம்ச வரலாற்றை பேசும் போதும் ஆதியாகமம் துவங்கி மத்யோயி வரை சுமார் முப்பது அத்தியாயங்களில் பல இடத்தில் ராமா என்ற வார்த்தை மனித பெயர்களாகவும் அரச பெயர்களாகவும் பரம்பரை பெயர்களாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளன 


 புதிய ஏற்பாட்டில் இயேசு தனது பன்னிரெண்டாவது வயதில் யூத தேவாலயத்தை சேர்ந்த புரோகிதர்களிடம் சில கேள்விகள் கேட்டார் என்பதோடு நிறுத்திவிட்டு தனது முப்பதாவது வயதில் ஞான ஸ்தானம் பெற்றார் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

 பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையிலுள்ள பதினெட்டு ஆண்டுகளை அவர் எங்கு வாழ்ந்தார் என்ன செய்தார் என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

  பத்தொன்பதாவது நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் நோடாவிக் என்ற ரஷ்ய அறிஞர் தாம் எழுதிய இயேசு கிறிஸ்த்துவை பற்றிய நூலில் அவர் அந்த பதினெட்டு வருஷ காலத்தை இந்தியாவில் கழித்தார்.  இந்துக்களிடம் யோக பயிற்சி பெற்றார் என்று கூறுகிறார்.


  இயேசு கிறிஸ்த்துவின் மலை பிரசங்கத்தை ஆழ்ந்து படிக்கும் போது அது இந்து மத கருத்தாகவும், பௌத்தர்களின் தத்துவமாகவும் இருப்பதை காண முடிகிறது.

 இயேசு கடலையும் பெருங்காற்றையும் கட்டளையிட்டு நிறுத்தியதை பார்க்கும் போது ராமன் இலங்கைக்கு படையுடன் செல்லும் முன்பு சமுத்திர ராஜனை எச்சரித்தது போலவே இருக்கிறது.

  இயேசு தீய ஆவிகளை ஓட்டிய விதம் ஊமைகளை பேச வைத்தல், குருடர்களை பார்க்க வைத்தல்.  முடவர்களை நடக்க வைத்தல், தனது ஆடையை தொட்ட மாத்திரத்திலேயே நோயை குணப்படுத்தியது, ஐந்து அப்பங்கள் மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு விருந்தளித்த விதம் எல்லாமே இந்து புராணங்களை அடிப்படையாக கொண்டது எனவும் ஒரு யோக பயிற்சியாளரின் நடைமுறை வாழ்க்கையெனவும் சொல்லத் தோன்றுகிறது.

   இந்து மதத்தில் பிரம்மா என்பது படைக்கும் கடவுளை குறிப்பது போல் கிறிஸ்த்துவர்களின் கர்த்தரும் படைக்கும் கடவுளையே குறிப்பதாகும்.

 கர்த்தா என்றாலே உருவாக்குபவர் என்பது தான் அர்த்தமாகும். 

மேலும் கிறிஸ்த்துவ மதத்தில் ஆதியில் விக்கிரக ஆராதனையே இருந்தது.

 காலம் செல்ல செல்லத் தான் அதன் ஒரு பிரிவினர் அதாவது மார்டின் லூதர் வழியை பின்பற்றுவர்கள்  சிலை வழிபாட்டை கைவிட்டனர்.

   இன்றும் உலகம் எல்லாம் பெருவாரியாக இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்த்துவர்கள் சிலை வழிபாடுகளையே நடத்துகிறார்கள்.

 இந்து மதத்தில் எப்படி தாய் தெய்வ வழிபாடு என்ற பெண்மை வணக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே போலவே கிறிஸ்த்துவ மதத்தில் அன்னை மரியாளின் வழிபாடு சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

 வழிபாட்டு முறையில் கூட தூபம் காட்டுதல், தீபம் ஏற்றுதல், மணியோசை செய்தல் முன்னோர்களை வழிபடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவைகள் இந்து மதத்தினரை போல உலகம் முழுவதும் கிறிஸ்த்துவ மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

 இந்தியாவிலுள்ள கத்தோலிக்கர்கள் தலைக்கு மொட்டையடித்தல், கெடா வெட்டுதல், பாத யாத்திரை போகுதல், தேர்த் திருவிழா நடத்துதல், சப்பரம் தூக்குதல், புனித நீராடுதல், விளக்கு பூஜை நடத்துதல் போன்றவைகளை இந்துக்கள் போலவே செய்கிறார்கள்

 வாடிகனிலுள்ள மாதா சிலைக்கு அபிஷேசம் செய்து கற்பூர ஆரத்தி மட்டும் தான் காட்டப்பட வில்லையே தவிர மற்ற எல்லா விதமான வழிபாடுகளும் இந்து மதத்தை பின்பற்றியே நடக்கிறது.

ஆனால் இதை அறியாத அல்லது அறிய விரும்பாத உண்மையை மறைக்கும் கிறிஸ்தவ பாதிரிகளில் பலர் மனம் திரும்புங்கள் என இந்து மக்களை தங்கள் மதத்திற்கு இழுக்கிறார்கள்

 இவர்கள் சொல்லும் முக்கியமான குற்ற சாட்டு நீங்கள் கல்லையும் மண்ணையும் வணங்குகிறிர்கள்

 அவைகளுக்கு உயிர் இருக்கிறதா? உங்களை காப்பாற்றும் ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்

 நம் தெய்வ சிலைகளுக்கு சக்தி இருக்கிறது இல்லை என்பதை பிறகு பார்க்கலாம்

நம் மாரியம்மனை கல்லால் செய்தால் வராத சக்தி கன்னி மரியாளாக செய்தால் வந்து விடுமா?

 எனவே உருவ வழிபாடு தாழ்மையானது விரும்ப தகாதது என சொல்லும் கிறிஸ்தவர்கள் முதலில் தங்களை சீர் படுத்தி கொள்வது நல்லது

ஏன் என்றால் ஏசுநாதர் முதலில் உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்துவிட்டு மாற்றான் கண்ணை பார் என்று சொல்கிறார்

அதை முதலில் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்



 

 

Contact Form

Name

Email *

Message *