Store
  Store
  Store
  Store
  Store
  Store

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!

  நெடு நாட்களாக முடிவே இல்லாமல் மனிதனுக்கு தேவையானது விஞ்ஞானமா மெஞ்ஞானமா என்ற விவாதம் நடந்து வருகிறது

ஆன்மிக வாதிகள் தங்களது வாதமே சரி என சண்டை போடுகிறார்கள்

அறிவியல் வாதிகளோ தாங்கள் தான் உலகத்தின் உண்மையான மேய்ப்பர்கள் என்று மார் தட்டுகிறார்கள்

 மனிதனுக்கு உண்மை தேவை எது அறிவியலா? ஆன்மிகமா?


கத்தரி வெய்யில் சுட்டெரிக்கிறது.  உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது.

வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது.

ஆன்ம நேயம், ஜீவ காருண்யம் என்று எல்லாம் பேசுகின்ற ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை.

மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது 


  தவிர கடவுளா வந்து கனப்பு சட்டியில் நெருப்பு வைக்கிறார் என்று நமது மனம் பல நேரங்களில் நினைத்து தடுமாறுகிறது.

 காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம்.

  கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம்.

  இத்தனையும் தந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் போற்றுவதை விட்டுவிட்டு 


  ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்?

  அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும்

வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. 

காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

  குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது.  

 கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது.

    எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும்.

  ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிக்காட்டும். 

  நிரந்தரமான சந்தோஷம் தான் ஆன்மிகத்தின் இறுதி நோக்கம்.

   நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லை.


 மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

 எல்லா துறைகளிலும் விஞ்ஞான மயமாகி கொண்டிருப்பது தான்.  மனிதன் மனதிலுள்ள கருணை நதி வற்றி போனதற்கு காரணமாகும்.

  அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல.

  எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே கருத்தாகும்.


ஒரு வகையில் சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான்.

  மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும்.

  சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறான் ஆன்மிகவாதி. 

  அறிவியல் வாதியோ பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறான். 

  சொல்லுகின்ற முறையில் தான் வார்த்தையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

  அதாவது மெஞ்ஞானி உண்மைகளை தத்துவங்களாக பேசுகிறான்.


விஞ்ஞானி அதே உண்மைகளையே பௌதிகமாக பேசுகிறான்.

மனிதனுக்கு அவனுடைய சுகத்திற்கு அறிவும் வேண்டும்.  உணர்வும் வேண்டும்.

விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.

ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம் ஆன்மிகமா?  விஞ்ஞானமா?  என்பது புரியும்.

Contact Form

Name

Email *

Message *