Store
  Store
  Store
  Store
  Store
  Store

பில்லி சூன்யம் விலகுவது எப்படி...?

   னது முன்னோர்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்றாலும் என் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் சிங்கப்பூரில் தான் வாழ்ந்து வருகிறோம் 

நான் மலேயா மற்றும் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்துவருகிறேன் தொழில் நிமித்தமாக பலருடன் கொடுக்கல் வாங்கல் இருப்பது சகஜம் 


அத்தகைய சூழலில் சீன இனத்தை சேர்ந்த ஒருவருக்கு 25.000 டாலர் கடன் கொடுத்தேன் அவர் குறிப்பிட்டப்படி பணத்தையோ பொருளாகவோ என்னிடம் எதையும் திருப்பி தரவில்லை வெகுநாட்கள் தருகிறேன் தருகிறேன் என்று ஏமாற்றி வந்தார் 


ஒரு நாள் கோபத்தில் அவரை பேசிவிட்டேன் என்னை தரக்குறைவாக பேசியதற்கு நீ விரைவில் வருத்தப்படுவாய் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று போய்விட்டார் 


இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதத்தில் ஒரு நாள் மாலைவேளையில் திடீர் என்று ஜுரம் வந்தது அரைமணி நேரம் என்னை வாட்டிய ஜுரம் திடீர் என்று நின்று விட்டது 


அன்று முதல் இன்று வரை சுமார் ஒருவருட காலமாக அதே ஜுரம் தினசரி வந்து என்னை வாட்டிவதைக்கிறது எல்லாவிதமான சோதனைகளும் செய்துபார்த்தாகி விட்டது உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் 


கணக்கற்ற மருந்தும் சாப்பிட்டேன் குடல் புண்ணாகியதே தவிர பயன் இல்லை

இது நோய்யல்ல ஆவிகள் தொல்லையாகவோ ஏவல் பில்லி சூனிய பிரச்சனையாகவோ இருக்கலாம் என்று என் வீட்டில் உள்ளோர் கருதுகிறார்கள் 

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அவர்களின் திருப்திக்காக பல மந்திரவாதிகளையும் சந்தித்து விட்டேன் எந்த பலனும் இல்லை அரைமணி நேர ஜுரம் வந்துகொண்டேதான் இருக்கிறது 

சில நாட்களாக உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் ஒரு நண்பர் தான் உங்கள் இணையதள முகவரியை கொடுத்தார் நீங்கள் எழுதும் பல விஷயங்கள் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் அதே நேரம் நம்பும் படியும் இருக்கிறது 

என் பிரச்சனைக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அதனால் என் ஜாதகத்தையும் உங்களுக்கு இணைத்து அனுப்பியுள்ளேன் நன்றாக கணித்து பார்த்து எனக்கான தீர்வை சொல்லுங்கள் 

தினம் வரும் ஜுரம் என் உடலை உருக்குகிறது மனதுணிச்சலை கெடுத்துவிட்டது பல லட்சம் ரூபாய் நஷ்டமும் உண்டாகிவிட்டது இதிலிருந்து மீள்வதற்கு வழிதெரியவில்லை பாதாளத்தில் வீழ்ந்தவன் போல் துடிக்கிறேன் தயவு செய்து உதவுங்கள்.


சிவதாசன் சிங்கப்பூர்



 ன்பார்ந்த சகோதரர் சிவதாசன் அவர்களே இறைவன் என்பவன் கருணைமிகுந்தவன் அவன் நமக்கு தரும் சோதனைகளுக்கும் எதாவது ஒரு காரணம் இருக்கும் எனவே யார் உங்களை கைவிட்டாலும் கருணை கடலான கண்ணபெருமான் கைவிடாமல் காப்பாற்றுவான் 

ஒரு போதும் மனதுணிச்சலை இழந்து விடாதிர்கள் எப்படியும் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவேன் என்று நம்புபவனால் மட்டுமே வெற்றி பெற முடியும் 

நீங்கள் அனுப்பிய உங்கள் ஜாதகத்தை ஆழமான முறையில் கணித்து பார்த்தேன் ஆயுள் பாவமான எட்டாம் இடம் வலுவாக இருக்கிறது எனவே உங்கள் உயிருக்கு எந்த கண்டமும் கிடையாது அதே நேரம் ஆரோக்கிய பாவத்தில் இது வரை இருக்கும் சனி கிரகம் விரைவில் விலகப்போகிறது இதனால் உங்கள் உடல் நலம் நல்லப்படியாக தேறுவதற்கு வழிவகை ஏற்படும் 

உங்கள் ஜாதகத்தை ஜாதக அலங்காரம் நூல்கொண்டும் வராகி மிகிரர் ஜைமினி போன்றோரின் நூல்கொண்டும் ஆராய்ந்து பார்த்தேன்

 பொதுவாக ஒரு மனிதனின் ஜாதகத்தில் ராகுவின் தன்மையை வைத்து அவன் ஏவல் பில்லி சூனியம் என்ற அபிசார பிரயோத்திற்கு ஆளாவான மாட்டானா என்பதை கணித்து விடலாம் 

உங்கள் ஜாதகத்தில் ராகுவும் மனதை குறிக்கும் சந்திரனும் போர் குணத்தை காட்டும் செவ்வாயும் ஒரே ராசியில் சேர்க்கை பெற்று இருக்கிறது அகத்தியரும் தமது நாடி ஜோதிடத்தில் மீனத்திற்கு ஐந்தாம் வீடான கடகத்தில் ராகு செவ்வாய் அமைந்தால் அமானுஷ்ய சக்திகளால் தொல்லை வருமென்று சொல்கிறார் 

ஆக இவைகளின் அடிப்படையில் சொல்வது என்றால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கான மூல காரணம் சூனியத்தால் என்று துணிந்து சொல்லலாம் இதற்கு நீங்கள் மருந்துகள் மட்டும் எடுத்துக்கொண்டால் பயனில்லை

 தாந்திரிக சாஸ்திரம் சொல்கிரப்படி சில அபிசார தோஷ நிவாரண பூஜைகள் செய்தால் கண்டிப்பாக இந்த தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள் 

உங்களுக்காக அத்தகைய பூஜை முறையை செய்ய நான் சித்தமாக இருக்கிறேன் இந்த பூஜையை அமாவாசை திதியில் துவங்கி ஒரு மண்டலம் தொடர்ந்து செய்ய வேண்டும் 

அப்படி செய்தால் என்னால் உங்களுக்கு நூறு சதவீத உத்தரவாதத்துடன் நன்மையை செய்ய முடியும் கடவுளின் கருணையால் அதை செய்து முடிப்போம் நாராயணன் நன்மையை தருவான் .



Contact Form

Name

Email *

Message *