Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீங்களும் பிராமணன் ஆகலாம் !

இந்துமத வரலாறு கேள்வி பதில் 2



   சுவாமிஜி நீங்கள் தொடர்ச்சியாக எழுதிவரும் இந்துமத வரலாற்று தொடரை தவறாமல் படித்து வருகிறேன் மிக கடினமான தத்துவ விளக்கங்களை கூட சுவாரஷ்யமான முறையில் எளிமையாக விளக்குகிறீர்கள் சிலர் மதம் மற்றும் தத்துவங்களை விளக்கும் போது படிப்பவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைக்க வேண்டுமென கருதி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி புரியாதவண்ணம் எழுதுவார்கள் நல்லவேளை நீங்கள் அப்படி எழுதவில்லை உங்கள் எழுத்து கூற வருகிற விஷயங்களை ஒரு சித்திரம் போல எளிமையாக தன்னை வெளிபடுத்தி கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது அதை பாராட்டுவதற்கு வயதும் அனுபவமும் எனக்கு போதாது என்றாலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை ஆனாலும் பாராட்டுகிறேன். 

நீங்கள் எழுதிவரும் கருத்துக்கள் சம்மந்தமாக எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கிறது அதற்கு நீங்கள் விளக்கம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கடிதம் எழுதுகிறேன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களில் வழிபாடுகளை நடத்தி வைக்க அது சம்மந்தமான விவரங்கள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் இன்ன சமூகத்தை சார்ந்த இந்த குடும்பத்தை சார்ந்த மனிதர்கள் மட்டுமே வழிபாடுகளை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் இந்துமதத்தை விஷாலமானது சுகந்திரமானது உயர்வானது என்று போற்றி புகழ்கிறீர்கள் ஆனால் அந்த இந்து மதத்தில் தான் இன்ன சமூகத்தை சார்ந்தவர் மட்டுமே வழிபாடுகள் நடத்த வேண்டும் மற்றவர்கள் நடத்த கூடாது மீறி நடத்தினால் சாஸ்திர விரோதம் ஏற்பட்டுவிடும் என்று கட்டு திட்டம் இருக்கிறது.

கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமம் உலகில் உயிரினமாக தோன்றிய ஒவ்வொரு ஜீவனுமே கடவுளின் குழந்தைகள் என்றே அனைத்து மத சான்றோர்களும் அறிஞர்களும் சொல்கிறார்கள் நிலைமை அப்படி இருக்க ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் தான் பூஜைகள் செய்ய வேண்டும் என்ற நியதி இருப்பது எந்த வகையில் நியாயம்? ஒளிவு மறைவு இல்லாமலையே கேட்கிறேன் பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் வேதங்களை கற்க கற்பிக்க வேண்டும் என்பது நியாயமான முறையாக உங்களுக்கு தெரிகிறதா? மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே இதில் பிராமணன் மட்டுமே எப்படி உயர்ந்தவன் ஆவான். தயவு செய்து கேள்வியை தவிர்க்காமல் பதில் தாருங்கள் என்னை போன்று பலரும் உங்கள் பதிலால் தெளிவு அடையலாம் 


இப்படிக்கு 
நவநீத கிருஷ்ணன் 
செங்கல்பட்டு.


        னுதர்ம சாஸ்திரம் என்ற ஒரு நூல் இருப்பதும் அதுவே இந்து சமூகத்தின் வாழ்கை முறை சட்டமாக இருப்பதும் அனைவரும் அறிந்ததே மற்ற மதத்தவரும் இந்து மதத்தவரும் மத நம்பிக்கையே இல்லாதவரும் அந்த நூலை தான் மிக அதிகமாக விமர்சனம் செய்து திட்டுவார்கள் காரணம் அந்த நூல் பிராமணர்களின் பிறப்பையும் சமூக அந்தஸ்தையும் மிக உயர்வாக காட்டுகிறது மற்ற ஜாதியினரை விட பிராமணர்களுக்கு அதிகமான சலுகைகள் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறது என்று கூறுகிறார்கள். உண்மையாகவே அந்த நூல் பிராமணர்களுக்கு சலுகைகள் கொடுக்கிறதா? அவர்களை  உயர்ந்த பிறவிகளாக காட்டுகிறதா என்று மனுதர்ம சாஸ்திரத்தை விமர்சனம் செய்யும் பலர் நேரடியாக அறிய மாட்டார்கள். அதில் அப்படி இருப்பதாக அவர் கூறுகிறார் இவர் கூறுகிறார் என்று பலரை கைகாட்டுவார்களே தவிர அறுதியிட்டு கூற பலரும் முன்வர மாட்டார்கள்.

மனுதர்ம சாஸ்திரத்தில் அப்படி இருக்கிறது நான் அதை படித்திருக்கிறேன் என்று கூறுபவர்கள் கூட ஒருசில வார்த்தைகளை முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல் நடுவில் பிடித்து கொண்டு தங்களது தேவைக்கேற்ப வளைத்து நெளித்து பேசுவார்கள். அவைகளை நம்பி நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் உண்மையாகவே மனுதர்ம சாஸ்திரம் மனிதர்களை பிறவியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து கீழ்மை படுத்துகிறது என்று நம்பிவிடுகிறோம் இது முற்றிலும் தவறுதலான மனபோக்காகும். உள்ளதை உள்ளபடி கூறுகின்ற மனமிருந்தால் மட்டுமே பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் முடியும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தவும் முடியும். 


உண்மையில் மனுதர்ம சாஸ்திரம் பிராமணர்களை உயர்ந்த பிறப்பாளர்கள் என்று கூறுகிறதா? என்பதை ஆராய மனுதர்ம சாஸ்திர நூலுக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது எடுத்த எடுப்பிலேயே அந்த நூல் நமக்கு அதிர்ச்சியை தருகிறது இறைவனது படைப்பில் பிராமணன் மிக உயர்ந்தவன் அவனை பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற மனிதர்களின் தலையாய கடமை என்று அடித்து சொல்கிறது அப்படி சொல்கிற மனுதர்ம சாஸ்திரம் அடுத்தபடியாக பிராமணன் என்பவன் எப்படி இருப்பான்? அவன் யார்?  என்பதை தெளிவாக காட்டுகிறது. பிராமணனின் உண்மையான இலக்கணம் தெரிந்தவுடன் நமக்கு கூட கண்டிப்பாக பிராமணன் உயர்ந்தவனே என்ற நம்பிக்கை வருகிறது.

அமைதியாக சகல உயிர்களையும் நேசிக்கின்ற ஜீவகாருண்யன் போன்ற வேடம் அணிந்து ஒரு பூனை தான் வேட்டை ஆட நினைக்கின்ற எலி பொந்திலிருந்து வெளியில் வருகிறவரை காத்திருந்து வந்தவுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து கதற கதற எலியை கடித்து விழுங்குவது போல தனது சுயநலத்தை மறைத்து மற்றவர்களின் பொருளை பறிக்க நினைத்து பொய்களை பரப்பி கர்வம் கொண்டு பிறர்பால் பொறமை வைத்து வாழ்கின்ற பிராமணன் எவனும் நரகத்தில் வீழ்வான் இவனுக்கு தானம் கொடுப்பவனும் நரக வாழ்வை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்து பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரங்களை நமக்கு தருகிறது. 


வேதத்தை ஓதுவதும் கற்பிப்பதும் மட்டுமே அவனது தொழில் பொருளை எதிர்பார்த்து இதை அவன் செய்ய கூடாது கொடுத்தவனுக்கு அதிகமாகவும் கொடுக்காதவனுக்கு குறைவாகவும் கற்பிக்க கூடாது எந்த நேரத்திலும் அடுத்த வேளை உணவுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாமல் ஒவ்வொரு வேளையும் தானாம் வாங்கியே அல்லது யாசகம் பெற்றே பசியாற வேண்டும் வியாபாரம் செய்வது லாபம் சம்பாதிப்பது அவனுக்கு கூடாது லேவாதேவி செய்வதோ மற்றவர்களிடத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்குவதோ கூடவே கூடாது என்று கட்டளை போடுகிறது அதே நேரம் நாடகம் நடிப்பது இசை முதலிய கலைகளில் ஈடுபடுவது ஜோதிடம் பார்ப்பது போன்றவைகள் பிராமணனால் நடத்த படக்கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது மாறாக இவைகளை செய்பவன் பிராமணனே அல்ல என்றும் அடித்து கூறுகிறது. அதனால் தான் 

சூத்ரோ ப்ராமணதாமேதி 
ப்ராமணஷ்சைதி சூத்திரதாம் 
ஷத்திரியாஜ்ஜாதமேவம் து 
வித்யாத் வைச்சியாத் தைதவச 

என்கிறது அதாவது சூத்திரன் பிராமணன் ஆகலாம் பிராமணனும் சூத்திரன் ஆகலாம் அதை போலவே சத்திரிய வைசிக குலத்தவர்களும் மாறி கொள்ளலாம் அவனவன் தர்மமும் சுயபுத்தியும் மாறும்போது வர்ணமும் ஜாதியும் தானாக மாறுகிறது. இதை நான் கூறவில்லை ஜாதிகளை உருவாக்குகிறது என்று பலரும் குறை கூறுகிறார்களே அந்த மனுதர்ம சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது. 

பிராமணன் என்பவன் அடுத்த வேளை சோற்றை பற்றி சிந்திக்காமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பான் தனக்காகவும் தன்னை சுற்றி உள்ள சமூகத்திற்காகவும் அவனால் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும் வழிபாடு நடத்த முடியும் அதனால் பிராமணனே வழிபாடு நடத்துவதற்கு தகுதியானவன் என்பதே நமது மதத்தின் இறுதியான முடிவு. இந்த இலக்கணத்திற்குள் இல்லாத எவனும் பிராமணன் அல்ல அப்படி பிராமண தர்மத்தை கைவிட்டவனை வைத்து கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கட்டளை போடவும் இல்லை. 

குறைந்தபட்சம் அதிகபட்சம் என்ற வித்தியாசத்தை தர்மத்தை பொறுத்தவரை சலுகைகாட்ட முடியாது. வேதம் ஒதுவதையே தொழிலாக கொண்டவனை மட்டுமே பூஜாரியாக நமக்காக இறைவனிடம் முறையிடுபவனாக வைக்கலாம் மற்றவர்களை வைத்தால் அது அவனுக்கும் பாவம் நமக்கும் பாவம் இப்போது சொல்லுங்கள் பிராமணன் உயர்ந்தவனா இல்லையா? நிச்சயம் தர்மப்படி வாழுகிற பிராமணன் உயர்ந்தவனே காரணம் அவன் மட்டுமே பிராமணன் அந்தண குலத்தில் பிறந்தேன் அதனால் நானும் பிராமணன் என்று எவனாவது சொன்னால் அப்படி கூறுவது கூட பாவம். 






Contact Form

Name

Email *

Message *