Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருமணத்தடை விலக பரிகார பூஜை !



     ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரியமான உஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.


வெகுநாட்களுக்கு பிறகு உங்களோடு பேச கிடைத்த இந்த நல்ல வாய்ப்புக்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்களும் உங்கள்குடும்பத்தாரும், உங்களது நண்பர்களும், நலமோடு வாழ்வதற்கு இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.


சென்ற ஆண்டு வரையிலும் பித்ரு பூஜை என்பதை மிக குறைவான நபர்களுக்காக செய்து வந்தேன். இந்த வருடம் அதை விரிவுபடுத்திசெய்யலாமே என்ற எண்ணம் வந்தவுடன் உங்களிடத்தில் தெரிவிக்கச்சொன்னேன். உண்மையில் உங்களிடமிருந்து கிடைத்த நல்லதொடர்புகளுக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் கடவுளுக்கு நன்றி சொல்லலாம். முன்னோர்களுக்கு சாந்தி, பித்ருக்களுகானபரிகாரங்கள் என்றவுடன் அதை இந்து மதத்தவர் மட்டுமே நம்புவார்கள், செய்வதற்கு துணிவார்கள் என்று நேற்றுவரை நினைத்திருந்தேன்.


ஆனால் இன்று கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏன் நான் தமிழில் எழுதியதை படிக்க தெரியாத ஹிந்தி பேசும் ஜைனர்களும், பஞ்சாபிசீக்கியர்களும் கூட தங்களது தமிழ் நண்பர்கள் மூலம் விஷயத்தை அறிந்து தங்களது முன்னோர்களுக்கு நன்றி செலுத்தவும், சாந்திசெய்யவும் முன்வந்ததை பார்த்தவுடன் மெய்சிலிர்த்து விட்டது. உயிரோடு இருக்கும் போதே மனிதர்களை பற்றி நினைக்காதவர்கள், இறந்தபிறகு நினைப்பார்களா? நன்றி செலுத்துவார்களா? செத்த உறவினர்களுக்காக நேரத்தையும், உழைப்பையும் செலவிடுவார்களா? என்றுஉலகத்தில் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியர்கள் அதை செய்வார்கள் இன்னும் அவர்கள் நன்றி சுமக்கும் இதயத்தோடு தான்இருக்கிறார்கள் என்று துணிந்து கூறும் அளவிற்கு அன்பர்களின் ஆர்வம் இருந்தது.



பித்ருதோஷ நிவர்த்திக்கான இந்த பூஜையை ஆரம்பித்த போதும் சரி, இன்றும் சரி மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு அதாவதுபித்ருதோஷம் என்ற துயரத்தின் அளவிற்கு வயது வந்த பிறகும், காலம் கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பலர் சோகத்தோடும்,ஏக்கத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில மனிதர்கள் திருமணம் தனக்கு நடக்கவில்லையே? என்ற ஏக்கத்தில் மனநிலைபாதிப்புஎன்ற அளவிற்கும் சென்றிருக்கிறார்கள். பொறுப்புள்ள பெற்றோர்களில் பலர் தங்களது பெண்ணுக்கோ, பையனுக்கோ திருமணம் செய்துவைத்து கண்ணார காண முடியவில்லையே என்று தவித்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.


திருமணம் என்பது சுதந்திரமான மனிதனை சம்சார பந்தத்தில் தள்ளுவது, தாலி என்பது தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கு. கணவனோ,மனைவியோ இன்ப வாழ்வை முடிவுக்கு கொண்டுவரும் முற்றுப்புள்ளி என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்பதுவேறு விஷயம். எல்லோருமே திருமணம் வேண்டாம், குழந்தை பிறப்பு வேண்டாம் என்று சந்நியாசியாக போய்விட்டால் உலகத்தின்இயக்கம் என்பது எப்படி நடக்கும்? எனவே தான் சமூகத்தின் பார்வையில் திருமணம் என்பது மிக முக்கியமான தகுதியாக கருதப்படுகிறது.திருமணம் ஆகாத ஆணையோ, பெண்ணையோ இந்த சமூகம் முழு மனிதனாக ஏற்றுக்கொள்வது இல்லை. சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக கூட வேறு வழியில்லாமல் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் நிறையப்பேர் உண்டு.


திருமணம் இல்லாமல் சுதந்திரமாக வாழும் வாழ்க்கையை பலர் விரும்புவது இல்லை. அதனாலேயே பல கஷ்டங்கள் நிறைந்தது என்பதுதெரிந்தாலும் கூட திருமணத்தை விரும்புகிறார்கள். ஆனால் விரும்புகிற அனைவருக்கும் திருமணம் நடந்து விடுகிறதா? தான் விரும்பியபடிமுழுக்க முழுக்க தனது திருமண வாழ்க்கை இருக்கிறது என்று கூறும் மனிதர்கள் உண்டா? நிச்சயமாக இல்லை நூற்றில் முப்பது பேருக்குமட்டும் படிப்பு முடிந்தவுடன் வேலை, வேலை கிடைத்தவுடன் திருமணம், திருமணம் நடந்தவுடன் குழந்தைப்பேறு என்று அமைகிறது.மற்றபடி எழுபது பேர் திருமணத்திற்காக எதாவது ஒரு வகையில் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.


சரியான வேலை இல்லாமல், திருமணத்தடை, ஜாதக தோஷங்களால் திருமணத்தடை, பெண் சாபம், முன்னோர் பாபம் இவைகளால்திருமணத்தடை, மந்திர-தந்திர பாதிப்புகளால் திருமணத்தடை, நோய்களால் பக்கத்தில் துணையாக இருந்து செய்து வைக்க நல்ல நபர்கள்இல்லாத குறையால் திருமணத்தடை இன்னும் சொல்ல முடியாத பல வினோதமான காரணங்களால் திருமணத்தடை என்பதுஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை போக்க முடியாதா? இதற்கு பரிகாரம் கிடையாதா? என்றுபலரும் தேடுகிறார்கள், பரிகாரமும் செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே பலன் அடைகிறார்கள். அனைவருக்குமே பலன் தருகின்றபரிகாரம் எதுவும் கிடையாதா? அதை உங்களால் செய்ய முடியாதா? என்று சிலர் என்னிடம் கேட்டார்கள்.


வைதீக மரபுப்படி சுயம்பார்வதி பூஜை என்ற ஒரு பூஜை உண்டு. இதை சிவபெருமானை அடைவதற்காக பார்வதிதேவியும், அன்னைபார்வதியை அடைவதற்காக சிவபெருமானும் செய்ததாக புராண ஆதாரம் கூறுகிறது. இதே பூஜையை சுயம்பார்வதி ஹோமம் என்று அக்னிவளர்த்தும், சுயம்பார்வதி யந்திரம் என்றும் யந்திரம் வரைந்து அனுபவப்பட்டவர்கள் செய்வது உண்டு. இந்த பூஜையை ஒரே நாளில்செய்துவிடலாம்.


இது தவிர விவாக பிரார்த்தி என்று தாந்த்ரீக சாஸ்திரத்தில் ஒரு பூஜை முறையுண்டு. இதை ஒரு நபருக்காகவோ அல்லது பலருக்காகவோ செய்யலாம். மேலும் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ராஜகுருவான கரூர்சித்தர் என்ற கரூவூரார் மாந்த்ரீகத்தில் புருஷ-ஸ்திரி வசியம் என்றஒரு மார்க்கமும் உண்டு. இதையும் திருமணத்தடை விலகி திருமணம் நடைபெறுவதற்காக செய்வது உண்டு.



மேலே சொன்ன வைதீக பூஜையான சுயம்பார்வதி பூஜையையும்,  கூடவே விவாக பிரார்த்தி மற்றும் புருஷ ஸ்திரி வசியம் போன்ற பூஜைமுறைகளையும் இணைத்து திருமணத்தடை விலகுவதற்காக செய்தோம் என்றால் நிச்சயம் மூன்று வழிகளில் ஏதாவது ஒரு வழியில்கண்டிப்பாக அடைத்துக்கொண்டு கிடக்கும் கதவு திறக்கும் வண்ணம் செய்துவிடலாம். இதனால் நடக்காத திருமணமும் நடக்கும். இதில்மாற்று கருத்து கிடையாது. எனவே பாதிக்கப்பட்ட நபர்களுக்காக இந்த பூஜையை துவங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.


இந்த பூஜையை சாதாரணமாக நாம் நினைத்த நேரத்தில் துவங்கி விட முடியாது. அதற்கென்று சில சாஸ்திர கட்டுப்பாடுகள் இருக்கின்றன.அதன்படி செய்தால் தான் நினைத்த பலனை பெற முடியும். புனர்பூச நட்சத்திரம் இருக்கும் நாளில் அமாவாசை வரவேண்டும்.அன்றுசூரியனோடு புதனும், குருவும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் நாளில் இந்த பூஜையை நடத்தினால் கண்டிப்பாக நூறு சதவிகிதம்வெற்றி அடைய முடியமென்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதன்படி வருகிற ஆடிமாதம் பத்தாம் தேதி நடக்கும் அமாவாசை,அதாவது ஜூலை மாதம் இருபத்தி ஆறாம் தேதி வரும் அமாவாசை சாஸ்திரம் சொல்வது போல புதன், குரு, சூரியன் சேர்ந்திருக்கும்நாளாகவும் புனர்பூசம் நட்சத்திரம் உடையதாகவும் அமைகிறது.


அதன்படி அன்றைய தினத்தில் பூஜையை நடத்தலாம் என்று நினைக்கிறேன். இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்புபவர்கள் தங்களதுபெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், சொந்த ஊர், ஜாதகத்தோடு கூடிய சிறிய புகைப்படம் போன்றவற்றை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.நீங்கள் அனுப்பும் ஜாதக குறிப்பையும், புகைப்படத்தையும் திருப்பி தர இயலாது என்பதனால் நகல் அனுப்பினால் போதுமானது. திருமணம்ஆகாதவர்கள் விவாகரத்தாகி இரண்டாவது திருமணத்தை விரும்புபவர்கள், மறுமணம் அமையாதவர்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம். மேலும் திருமணம் முடிந்து கணவன் - மனைவி பிரிந்திருப்பவர்களும் கூட இதில் கலந்து கொண்டால் நிச்சயம் ஒன்றுசேர்வார்கள். மேலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாமல் கணவன் - மனைவி மத்தியில் அடிக்கடி மனகசப்பும், சண்டையும்உள்ளவர்களும் கலந்து கொண்டு அமைதியான வாழ்க்கையை பெறலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களது திருமண புகைப்படத்தையும்அனுப்ப வேண்டும்.


ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களை பற்றிய விபரங்களை தனித்தனியாகதரவேண்டுமே தவிர ஒன்றாக ஒரே கடிதத்தில் தரவேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறோம். காரணம், திருமணம் என்பது தனிப்பட்ட நபர்சம்மந்தபட்டது. அதில் மற்றவர்களையும் இணைக்கும் போது ஒருவர் கர்மா இன்னொருவரை தாக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். இதே போலவே கலந்து கொள்பவர்கள் செலுத்தும் காணிக்கையும் தனித்தனியாக இருக்க வேண்டுமே தவிர பொதுவாக கூட்டுசேர்ந்து அனுப்பக்கூடாது. காரணம் நீங்கள் செலுத்துகிற காணிக்கை என்பது உங்கள் கர்மாவை போக்குவதற்கான சம்பளம். அதில் உங்கள்பங்குதான் தனியாக இருக்க வேண்டுமே தவிர கூட்டுபங்கு கூடாது.


26/07/2014 அன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு இந்த பூஜையை நடத்துகிறோம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களை பற்றியவிபரங்களை 24/07/2014 க்குள் கண்டிப்பாக அனுப்பிவிட வேண்டும். அந்த தேதிக்குள் வராத தகவல்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த தேதிக்குள் பதிவு செய்யும் அனைவருக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மந்திர உச்சாடனத்துடன் பூஜை செய்யப்படும். பூஜைமுடிந்த பிறகு படிப்படியாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தும் முறை அத்துடன் எழுதி அனுப்பப்படும். இது முழுக்கமுழுக்க மன ஒருநிலைப்பாட்டுடன் கவனம் சிதறாமல் செய்ய வேண்டிய பூஜை என்பதனால் வேறு யாரும் கலந்து கொள்ள முடியாதுஎன்பதையும் முதலிலேயே கூறி விடுகிறேன்.


வழக்கம்போல் இந்த பூஜையிலும் ஏழை-பணக்காரன், இருப்பவன்-இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவரவருக்கு முடிந்தகாணிக்கையை அனுப்பலாம். இவ்வளவு தான் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் நிச்சயம் கிடையாது. ஆனாலும் நீங்கள் அனுப்பும் தொகை உங்களுக்கான தபால் செலவு அளவிற்காவது இருக்க வேண்டும் அல்லவா? காணிக்கை விஷயத்தில் முக்கியமானதொரு தகவலை சொல்ல விரும்புகிறேன் இந்த பூஜையாக இருக்கட்டும் வேறு எந்த பரிகார பூஜைகளாவது இருக்கட்டும் உங்களுக்காக மற்றவர்கள் செய்கின்ற போது நீங்கள் முறைப்படி தீட்சைபெற்று மந்திர ஜெபம் செய்வது இல்லை முத்திரைகளுடன்  கூடிய பூஜையையும் செய்வது இல்லை உங்களுக்காக பிராத்தனை மட்டுமே செய்து கொள்கிறீர்கள் உங்களுக்கான சிரமங்கள் அனைத்தையும் பூஜை செய்விப்பவர் அனுபவிக்கிறார்..


நியாயப்படி நீங்களே முறைப்படி மந்திரம் கற்று பூஜா விதிகளை கற்று தேர்ந்து செய்ய வேண்டும் ஆனால் எல்லோராலும் அது இயலாது அதனால் தான் தனக்கென்று ஒரு புரோகிதர் நியமிக்க படுகிறார் அந்த புரோகிதர் அதாவது பூஜை செய்பவர் உங்களுக்கான கர்மாவை ஏற்றுக்கொண்டு உங்களுக்காக பூஜை செய்கிறார். அப்போது நீங்கள் கொடுக்கும் சம்பாவனை அல்லது காணிக்கை உங்கள் கர்மாவின் அழுக்கு கழுவபடுவதற்க்கான சலவை கட்டியே தவிர பரிசு அல்ல உங்கள் பாவம் அல்லது கர்மா கழிவதற்கு பொருள் கொடுப்பதன் மூலம் சிறிய உழைப்பை நல்குகிரீர்கள் அதனால் தான் தான் உங்களுக்கான பரிகாரம் உங்களுக்கே நிவாரணமாக வருகிறது இந்த நிவாரணம் என்பது நீங்கள் எவ்வளவுகெவ்வளவு கடின உழைப்பில் கொடுக்கின்ற காணிக்கையோ அந்த அளவிற்கு உங்களுக்கான பலன் விரைந்து கிடைக்கும் என்பது சாஸ்திரங்களின் விதியாக இருக்கிறது

அதனால் தான் காணிக்கையை பற்றி பேசவேண்டிய நிலை வருகிறது. மேலும் விவாக சம்மந்தப்பட்ட இந்த பூஜைக்கான விவரங்களை நீங்கள் அனுப்பிய பிறகு சற்று பொறுமையோடு காத்திருக்க வேண்டுகிறேன். ஏனென்றால் பூஜை முடிந்த உடனையே பிரசாதங்களை எடுத்துவிட முடியாது முறைப்படி உத்திர பூஜை நாள்பார்த்து செய்தபிறகே பிரசாதங்களை அனுப்ப இயலும். கண்டிப்பாக உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும் இன்பமான இல்லறத்தை பெறுவீர்கள்.


  • மிக முக்கிய குறிப்பு :-


      இந்த திருமணத்தடை பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் ஜூலை மாதம் 24 ஆம் தேதி வரையில் தங்களை பற்றியோ தங்களது மகன் மகள் பற்றியோ விபரங்களை அனுப்பலாம்.


  • தபால் முகவரி :-


குருஜி,
4/76 C காமராஜ் சாலை, 
அரகண்டநல்லூர்   - 605752,
திருக்கோவிலூர்  (தாலுக்கா),
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.


  • மின்னஞ்சல் முகவரி :-


  • தொலைபேசி எண் :-
+91 - 8110088839



  • காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

  • வங்கி முகவரி :-
                NAME - Guruji

                A/C NO - 0106301000035874,

                LAKSHMI VILAS BANK,

                IFSC CODE - LAVB0000106,

                ARAKANDANALLUR.


இப்படிக்கு 

சதீஷ் குமார் 

Contact Form

Name

Email *

Message *