Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் மகளை காப்பாற்றுங்கள் !



    ங்கள் மார்க்கத்தில் மந்திரம் மாயம் பார்ப்பதையும் நம்புவதையும் ஹராம் என்று சொல்வார்கள் ஆனாலும் அதை எங்களால் முற்றிலும் புறக்கணிக்க முடியவில்லை நம் நாட்டில் மட்டுமல்ல சரியத்துப்படி ஆட்சி நடத்துகிறோம் என சொல்லுகின்ற அரபு நாடுகளிலும் இதுதான் உண்மை நிலை

   சவூதி குவைத் போன்ற நாடுகளில் எகிப்து நாட்டு மந்திரவாதிகளுக்கு ஏக கிராக்கி ஆனால் என்ன இந்த சமாச்சாரங்கள் ஒளிவுமறைவாக நடக்கும் எங்கள் முஸ்லிமில் சிலர் ஜின்னுகளை வைத்து நிறைய மந்திர வேலைகள் நடத்துகிறார்கள் அவர்களில் பலர் குறிப்பாக கேரளமுஸ்லிம்கள் நல்லகாரியம் எதுவும் செய்வதே கிடையாது

  இப்படி ஒரு மலையாளி என்மகளுக்கு ஏதோ வசியமருந்து கொடுத்து மயக்கி அவள் வாழ்கையை கெடுத்துவிட்டான் அதில் பாதிப்படைந்த அவள் இப்போது மனநோயாளியாக நிற்கிறாள் பெற்ற வயிறு பற்றி எரிகிறது என்ன செய்வது யாரை நம்புவது என்று எனக்குப் புரியவில்லை

  10 வருடங்களாக பார்க்காத மருந்துக்கள் இல்லை செய்யாத பிராத்தனை இல்லை இன்னும் எந்த விடிவும் பிறக்கவில்லை நானும் என்மனைவியும் உயிருள்ளவரை எங்கள் குழந்தையை காப்பாற்றி விடுவோம் எங்களுக்கு பின் அவள் நிலையை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது

  நான் ஒரு சுத்தமான முஸ்லிம் அல்லா ஒருவனைத் தவிற எவரிடமும் எந்தச்சூழலிலும் கையேந்தி பழக்கப்படாதவன்  அதனால் குருஜி உங்களை என் சொந்த சகோதரனாக பாவித்து இந்த உதவியை கேட்கிறேன் என் மகளை உங்கள் மகளாக கருதி காப்பாற்ற எதாவது வழி சொல்லுங்கள் அல்லது அவளுக்காக கடவுளிடம் துவா செய்யுங்கள்

 நீங்கள் பாவமில்லாத சுத்த ஆன்மா உங்கள் வேண்டுதல் நிச்சயம் அல்லாவின் செவிகளுக்கு கேட்கும் இந்த ஏழை முஸ்லிமுக்காக ஒரு அபலைப் பெண்ணின் வயோதிக தகப்பனுக்காக இந்த சிரமத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்   

 காதர் மொகைதீன்
    காயல்பட்டணம்



  ன்புள்ள ஐயா உங்களின் மடல் என்னை உருக வைத்து விட்டது நான் பிள்ளை பெறாதவன் என்றாலும் பிள்ளை பாசத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல பெற்றவனின் பாசவேதனை எப்படி பட்டதென்று எனக்கு நன்றாகத் தெரியும்

  அது மட்டுமல்ல நான் மதங்களின் வழியாக மக்களை பார்ப்பவன் அல்ல மக்களின் வழியாக மதங்களை பார்ப்பவன் அதனால் என்னைப் பொறுத்தவரை ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பதை உணர்ந்தவன் நம்புபவன் உங்கள் மகளுக்காக அல்ல அல்ல நம் மகளுக்காக எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ணனை பிராத்தனை செய்கிறேன்

  மேலும் அவளுக்கு நீங்கள் சொல்லும் வசியமருந்தால்தான் புத்தி பேதலித்தது என்றால் அதை நீக்க சுலபவழி குரான் நம்பிக்கைப் படியே உள்ளது திருக் குர்ஆனில் அல் புர்கான் என்ற 25 அத்தியாயத்தில் 20 வது சுராவை மூன்று வெற்றிலையில் 23 முறை ஓதி உண்ணக் கொடுங்கள் 
 
 இப்படி 90 நாட்கள் அதிகாலையில் செய்து கொடுங்கள் அவள் பித்து சிறிது சிறிதாக குறைந்து பூரண சுகம் பெற்று விடுவாள் மனிதர்களை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்பி இக்காரியத்தை செய்யுங்கள் நான் வணங்கும் நாராயணனான உங்கள் அல்லா சத்தியமாக நம் குரலை கேட்டு குழந்தயை குணப்படுத்துவான் நம்புங்கள் நல்லது நடக்கும்




Contact Form

Name

Email *

Message *