நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் பல அரசியல் கட்சிகளின் மனோதிடத்தை ஆட்டி வைத்திருக்கிறது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை.
தாங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர சிம்மாசனவாசிகள் எனக் கனவு கண்டு கொண்டிருந்த பலரின் மண்டையில் ஓங்கி அறைந்திருக்கிறது. பெட்டிகடையில் இருந்து ஆகாய விமானம் வரை ஆட்டி படைத்த ஒரு குடும்பமே ஆட்டம் கண்டிருக்கிறது.
அதிகாரம் கையில் உள்ளது. என தலைகால் புரியாமல் யார் ஆடினாலும் அவர்கள் மக்கள் சக்தியின் முன்னால் தூசி துரும்பாக தூக்கி எறியப்படுவார்கள் என்பது மீண்டும் நிறுபனம் ஆகியிருக்கிறது என்று எழுத எழுதியதை நம்ப ஆசையாகதான் இருக்கிறது.
தாங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர சிம்மாசனவாசிகள் எனக் கனவு கண்டு கொண்டிருந்த பலரின் மண்டையில் ஓங்கி அறைந்திருக்கிறது. பெட்டிகடையில் இருந்து ஆகாய விமானம் வரை ஆட்டி படைத்த ஒரு குடும்பமே ஆட்டம் கண்டிருக்கிறது.
அதிகாரம் கையில் உள்ளது. என தலைகால் புரியாமல் யார் ஆடினாலும் அவர்கள் மக்கள் சக்தியின் முன்னால் தூசி துரும்பாக தூக்கி எறியப்படுவார்கள் என்பது மீண்டும் நிறுபனம் ஆகியிருக்கிறது என்று எழுத எழுதியதை நம்ப ஆசையாகதான் இருக்கிறது.
ஆனால் உண்மை நிலையை ஆராயும் போது அப்படி எதுவும் நல்லதாக நம் கண்ணில் தெரியவில்லை. இப்படி நான் சொல்வது சிலருக்கு வியப்பாகவும், இந்த மனுஷனுக்கு எதிலேயுமே திருப்தி ஏற்பாடாது போலிருக்கிறது என தோன்றும்.
ஆனால் உண்மை நிலையை எடுத்துக்காட்டினால் நான் சொல்வது சரிதான் என சிலருக்கு தலையாட்ட தோன்றலாம்.
ஆளும் கட்சியாக அதிகாரம் செலுத்திய திமுக தனது சாதனைகளாக மலிவு விலை அரிசி, இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கான்கீரிட் வீடுகள் என நீள பட்டியலை மக்களின் முன்னால் வைத்தாலும் எதிர் கட்சியாக கூட அமரும் தகுதியை இழந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் மூலையில் கிடக்கிறது.
63- இடங்கள் தரவில்லை என்றால் கழுத்தை நெறிப்போம் என்று மிரட்டிய காங்கிரஸ் இடுப்பொடிந்து வீதியில் கிடக்கிறது.
நாங்கள் இருக்கும்மிடம் வெற்றியின் இருப்பிடம் என வீராப்பு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்றவைகள் ஓரளவுக்கு குப்பைக் கூடையில் வீசப்பட்டுவிட்டன.
ஆனால் உண்மை நிலையை எடுத்துக்காட்டினால் நான் சொல்வது சரிதான் என சிலருக்கு தலையாட்ட தோன்றலாம்.
ஆளும் கட்சியாக அதிகாரம் செலுத்திய திமுக தனது சாதனைகளாக மலிவு விலை அரிசி, இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கான்கீரிட் வீடுகள் என நீள பட்டியலை மக்களின் முன்னால் வைத்தாலும் எதிர் கட்சியாக கூட அமரும் தகுதியை இழந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் மூலையில் கிடக்கிறது.
63- இடங்கள் தரவில்லை என்றால் கழுத்தை நெறிப்போம் என்று மிரட்டிய காங்கிரஸ் இடுப்பொடிந்து வீதியில் கிடக்கிறது.
நாங்கள் இருக்கும்மிடம் வெற்றியின் இருப்பிடம் என வீராப்பு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்றவைகள் ஓரளவுக்கு குப்பைக் கூடையில் வீசப்பட்டுவிட்டன.
அருதி பெரும்பான்மை பெருமா என சந்தேகத்தோடு நடமாடிய ஆதிமுக முழு வெற்றி பெற்றுவிட்டது.
நேற்று தான் பிறந்தது என ஏளனம் செய்யப்பட்ட தேமுதிக எதிர்க்கட்சியாக ஜம்மென்று உட்கார்ந்து விட்டது.
இவையெல்லாம் நல்ல விசயங்கள் தானே என்று நம்மால் சந்தோஷப்பட முடியவில்லை.
படுதோல்வியடைந்த திமுக தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களின் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர்களில் வாக்குகளை பெற்றுள்ளது.
எல்லாத் துறையிலும் ஊழலை மட்டுமே, அராஜகத்தை மட்டுமே துணையாக கொண்ட திமுக விற்கு இத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் அத்தனை பேருக்கும் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்வதா, அல்லது இப்படி நடப்பது தான் சரியான ஆட்சிமுறை என்று இவர்கள் நம்புகிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.
நேற்று தான் பிறந்தது என ஏளனம் செய்யப்பட்ட தேமுதிக எதிர்க்கட்சியாக ஜம்மென்று உட்கார்ந்து விட்டது.
இவையெல்லாம் நல்ல விசயங்கள் தானே என்று நம்மால் சந்தோஷப்பட முடியவில்லை.
படுதோல்வியடைந்த திமுக தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களின் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர்களில் வாக்குகளை பெற்றுள்ளது.
எல்லாத் துறையிலும் ஊழலை மட்டுமே, அராஜகத்தை மட்டுமே துணையாக கொண்ட திமுக விற்கு இத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் அத்தனை பேருக்கும் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்வதா, அல்லது இப்படி நடப்பது தான் சரியான ஆட்சிமுறை என்று இவர்கள் நம்புகிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.
ஏறக்குறைய ஒன்றரை கோடி முட்டாள்கள் பொறுப்பற்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது கலப்படம் இல்லாத அறியாமையாகும்
இத்தனை பேர் இன்னும் திமுக வின் விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதும் அப்பாவி தனமாகும். பிறகு எப்படி இவ்வளவு ஓட்டு திமுக வால் பெறமுடிந்தது என்பதை அலசினால் கசப்பான ஒரு உண்மை தெரியவரும்.
ஒட்டுமொத்த தமிழர்களுகமே ஊழலாட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாக்களித்தார்கள் என்பது உண்மை என்றால் காங்கிரஸ் பாமக போலவே திமுக வும் ஒற்றை இலக்க எண்களில் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அப்படியேதும் நடக்காமல் போனதை வைத்து பார்க்கும் போது பணத்திற்கு மயங்கி ஓட்டுபோட்டவர்களின் எண்ணிக்கையாக தான் நமக்கு படுகிறது.
இத்தனை பேர் இன்னும் திமுக வின் விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதும் அப்பாவி தனமாகும். பிறகு எப்படி இவ்வளவு ஓட்டு திமுக வால் பெறமுடிந்தது என்பதை அலசினால் கசப்பான ஒரு உண்மை தெரியவரும்.
ஒட்டுமொத்த தமிழர்களுகமே ஊழலாட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாக்களித்தார்கள் என்பது உண்மை என்றால் காங்கிரஸ் பாமக போலவே திமுக வும் ஒற்றை இலக்க எண்களில் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அப்படியேதும் நடக்காமல் போனதை வைத்து பார்க்கும் போது பணத்திற்கு மயங்கி ஓட்டுபோட்டவர்களின் எண்ணிக்கையாக தான் நமக்கு படுகிறது.
அலைக்கற்றை ஊழலில் கலைஞர் தரப்பார் பெற்ற பணம் இந்த தேர்தலில் கணிசமாக விளையாடியது பல இடங்களில் 100, 200 என்றும் வேறு சில இடங்களில் 500, 1000 என்றும் அதற்கு மேலும் பட்டுவடா செய்யப்பட்டதை நாம் அறிவோம்.
நான் கூட ஒரு பதிவில் அதை சுட்டிக்காட்டியிருந்தேன். எங்கெல்லாம் 100, 200, மட்டும் விநியோகம் செய்யப்பட்டதோ அங்கெல்லாம் திமுக மிகக் குறைவான வாக்குகளை பெற்றது. ஆயிரமும் அதற்கு மேலும் பட்டுவடா செய்யப்பட்ட இடங்களில் திமுக வென்றிருக்கிறது.
இன்னொரு முக்கியமான விசயமும் தமிழகத்தில் நடந்தது டீக்கடை தொடங்கி, தொலைக்காட்சி நிலையங்கள் வரை திமுக தோற்றுவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டதனால் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்து குவிந்த பணமூட்டைகளை பல திமுக பிரமுகர்கள் வீட்டை விட்டே வெளியே கொண்டு வரவில்லை
எப்படியும் தோற்கப்போகிறோம் அதற்கு எதற்காக பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்று கருதிய அவர்கள் வரப்போகும் ஐந்து வருடத்திற்கு தங்களது சொந்த வறட்சி நிவாரணத்திற்காக வைத்து கொண்டார்கள். இதனால் கூட வாக்காளர்களை வாங்க முடியாமல் போய்விட்டது.
நான் கூட ஒரு பதிவில் அதை சுட்டிக்காட்டியிருந்தேன். எங்கெல்லாம் 100, 200, மட்டும் விநியோகம் செய்யப்பட்டதோ அங்கெல்லாம் திமுக மிகக் குறைவான வாக்குகளை பெற்றது. ஆயிரமும் அதற்கு மேலும் பட்டுவடா செய்யப்பட்ட இடங்களில் திமுக வென்றிருக்கிறது.
இன்னொரு முக்கியமான விசயமும் தமிழகத்தில் நடந்தது டீக்கடை தொடங்கி, தொலைக்காட்சி நிலையங்கள் வரை திமுக தோற்றுவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டதனால் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்து குவிந்த பணமூட்டைகளை பல திமுக பிரமுகர்கள் வீட்டை விட்டே வெளியே கொண்டு வரவில்லை
எப்படியும் தோற்கப்போகிறோம் அதற்கு எதற்காக பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்று கருதிய அவர்கள் வரப்போகும் ஐந்து வருடத்திற்கு தங்களது சொந்த வறட்சி நிவாரணத்திற்காக வைத்து கொண்டார்கள். இதனால் கூட வாக்காளர்களை வாங்க முடியாமல் போய்விட்டது.
பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று இப்போது கூட எந்த அரசியல்வாதியும் நினைக்கவில்லை தமிழன் இன்றைய காலகட்டத்தில் சில நூறுகளுக்கு தன்னை விற்க தயாராகயில்லை. ஆயிரக்கணக்கில் விலை கொடுத்தால் நான் தன்னை வாங்க முடியும் என்று கருதுகிறான் என்று தான் எல்லா அரசியல்வாதிகளும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதுதான் நடந்து முடிந்த தேர்தல் நமக்கு காட்டும் நிதர்சனமான உண்மையாகும். எனவே தமிழக மக்கள் எல்லோரும் பணத்தை வெறுத்து காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று பட்டினத்தார் போல ஞானம் பெற்றுவிடவில்லை நீ மட்டும் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் எனக்கு வெறும் நூறும் பீரும் தானா என்ற நிலையிலேயே பெறுவாரியான பேர்கள் இருக்கிறார்கள்.
கருணாநிதி குடும்பத்தார் சம்பாதித்தது பாவப்பணம் அவர்களிடம் அதை வாங்கி ஓட்டுப்போடுவது மகாபாவம் என எல்லா மக்களும் நினைத்திருந்தால் வரலாற்றுப் பக்கங்களில் திமுக விற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
நிலைமை அந்த அளவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று தான் நமக்கு காட்டுகிறது. சன்மானம் பெற்று ஓட்டுபோடுகின்ற வழக்கத்தை மக்கள் எப்போது கைவிடுகிறார்களோ அப்போது தான் இந்த நாட்டில் நிஜமான ஜனநாயகம் மலரும்.
ஆனால் துரதிஷ்ட வசமாக விடுதலைக்கு பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவாகிவுள்ளது.
அந்த மரபு இன்று வரை தொடர்கிறது. கோஷம் போட்டு கொடிபிடிப்பதை தடை செய்யவும் சட்டத்தால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது என்று சொல்ல இயலாது
செய்ய வேண்டும். என்ற மனவுறுதி இருந்தால் எல்லாம் சாத்தியமே. அது சாத்தியப்படும் வரை ஜனநாயகம் என்பது கோமாளித்தனம் தான்.
இதுதான் நடந்து முடிந்த தேர்தல் நமக்கு காட்டும் நிதர்சனமான உண்மையாகும். எனவே தமிழக மக்கள் எல்லோரும் பணத்தை வெறுத்து காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று பட்டினத்தார் போல ஞானம் பெற்றுவிடவில்லை நீ மட்டும் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் எனக்கு வெறும் நூறும் பீரும் தானா என்ற நிலையிலேயே பெறுவாரியான பேர்கள் இருக்கிறார்கள்.
கருணாநிதி குடும்பத்தார் சம்பாதித்தது பாவப்பணம் அவர்களிடம் அதை வாங்கி ஓட்டுப்போடுவது மகாபாவம் என எல்லா மக்களும் நினைத்திருந்தால் வரலாற்றுப் பக்கங்களில் திமுக விற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
நிலைமை அந்த அளவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று தான் நமக்கு காட்டுகிறது. சன்மானம் பெற்று ஓட்டுபோடுகின்ற வழக்கத்தை மக்கள் எப்போது கைவிடுகிறார்களோ அப்போது தான் இந்த நாட்டில் நிஜமான ஜனநாயகம் மலரும்.
ஆனால் துரதிஷ்ட வசமாக விடுதலைக்கு பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவாகிவுள்ளது.
அந்த மரபு இன்று வரை தொடர்கிறது. கோஷம் போட்டு கொடிபிடிப்பதை தடை செய்யவும் சட்டத்தால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது என்று சொல்ல இயலாது
செய்ய வேண்டும். என்ற மனவுறுதி இருந்தால் எல்லாம் சாத்தியமே. அது சாத்தியப்படும் வரை ஜனநாயகம் என்பது கோமாளித்தனம் தான்.
+ comments + 11 comments
very well said. BTW, http://amanushyam.blogspot.com/ is this belong to you? No one can read any article http://amanushyam.blogspot.com/, within a minute it gets re-directed to ujilladevi. Please fix http://amanushyam.blogspot.com/.
ராமானந்த குருவே, நீர் இன்னும் அறியாமையில் இருக்கிறீர். திமுக, அதிமுக யார்? இங்குள்ள மக்கள் கூட்டம் தானே? தமிழனையும், இந்தியனையும் யோக்கியன், புத்திசாலி என நினைத்துவிட்டீரா? மக்கள் பன்றிகளாக இருப்பதனால்தான் அதிலிருந்து ஒரு பன்றி அரியணை ஏறுகிறது. இந்தியர்கள் சாலையில் வாகனம் ஓட்டுவதே அவர்களின் ஒழுங்கின்மைக்கு ஒரு உதாரணம்.
ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயற்சிப்பதும், இன்னொருவருக்கு வழியை மறைப்பதும் இவர்களுக்கு கை வந்த கலை. தன் வீட்டு சாக்கடையை பக்கத்துக்கு வீட்டில் வெட்டி விடுபவன், அடுத்தவன் சொத்துக்கு ஆலாய் பறப்பவன் இருக்கும் தேசம் இது. இங்கு ஜனநாயகம் என்பது ஒரு கேலி கூத்தகதானே இருக்கும். இவர்களுக்கு தேவை சரியான சோறும், துணியும், இருப்பிடமும், தண்டனையும் தான். ஒட்டுவுரிமையில்லை. ஒன்றும் அறியாத பாமரனும், சுயநலவாதியும் எவ்வாறு ஆளுபவனை தேர்தேடுக்க முடியும்? இந்த மக்கள் உருப்பட வேண்டுமானால், ஜனநாயகத்தில், சரியான சட்டங்கள் மூலம் கடுமையான தண்டனைகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். அமேரிக்கா போன்றதொரு ஜனநாயகம் (Near Perfect) மலர வேண்டும்.
நீங்க சும்மா ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு ஆன்மீக சேவை மட்டும் முடிந்தால் செய்யுங்கள். இப்படி உங்களுக்கு பிடிக்காத இன்னொரு கட்சிக்கு ஒட்டு போட்ட ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடுபவர்கள் என்றும் சொல்ல வேண்டாம். அது மக்களை இழிவு படுத்தும் செயல். என்னமோ ஜெயலலிதா அம்பாளின் உருவம் போலவும் மகாத்மா போலவும் அவங்க கட்சில வென்றவர்கள் எல்லாம் முறையாக வாக்கு பெற்ற மாதிரியும் சொல்கிறீர்கள். பழைய ஜெயா ஆட்சியின் அவலட்சணம் எல்லாம் வசதியாக மறந்துவிட்டதா. ஒரு வேட்பாளர் கொடுத்த மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள டோக்கன் கிளப்பிய பிரச்சினை தெரியுமா. அதிமுக வேட்பாளர்கள் கொடுத்த பணம் பற்றி தெரியுமா. மந்திரிசபை பதவி ஏற்ற ஒருவாரத்திலேயே ஒவ்வொரு வேலைக்கும் மந்திரிமார்களின் PA பேசிய பேரம் எனக்கு தெரியும். இன்னும் மூன்றே மாதத்தில் பூனைக்குட்டி வெளியே வரத்தான் போகிறது. அப்போ பாப்போம் உங்கள் முகத்தை.
@
என்ன COVAISIVA அவர்களே நீங்கள் திமுக வுக்கு ஒட்டு போட்டிங்களா எதோ நீங்கள் எழுதியதை பார்த்தா நீங்களும் காசு வாங்கினிங்க போல இருக்கு
திரு.COVAISIVA அவர்களே குருஜியின் பழைய பதிவை படிக்கவில்லை என் நினைக்கிறேன். http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_08.html இந்த link ஐ படித்து பார்க்கவும். தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு எப்படி இருக்கும்...ரேஷன் கடை பெட்ரோல் பங்க் வரிசை குறையாது
சமையல் சிலிண்டருக்கான காத்திருப்பு மாறாது
குடி தண்ணீர் வளக்கம்போல் கிடைக்காது
கொசுத் தொல்லை சாக்கடை நாற்றம் மின்சார துண்டிப்பு தொடரும்
டீக்கடை வெட்டிப்பேச்சு சட்டசபை வெளிநடப்பு மேடையில் காட்டுக் கூச்சல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்
ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
ஜெயலலிதா புடவைக் கட்டிய கருணாநிதி
கருணாநிதி வேஷ்ட்டிக் கட்டிய ஜெயலலிதா அவ்வளவுத்தான் வித்தியாசம். இதுதான் குருஜியின் பழைய பதிவின் சாரம். இன்றைய பதிவு மக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வு.
வணக்கம் குருஜி..
என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமல்ல..
இந்தியா முழுவதும் இரண்டு விசயங்கள் தடை செய்யப்பட வேண்டும்..
1. பணம்
2. இலவசம்
இது முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்லுமானால் இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை.
உங்கள் தொகுப்பு அருமை
Rajaji's greatest disservice to Tamilnadu and even to India was making DMK capture power in TN by forging an unprincipled alliance in 1967 to give one to one fight to Congress.This became a fore runner to having only electoral alliances for the sake of power.This had caused havoc to the Country
Rajaji might have had genuine grievance against Congress and Kamaraj.But he failed to realise that DMK/CNA were not a good alternative
அரசிய ஒரு சாக்கடை...இது முற்றிலும் உண்மை
ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஊழலை ஆதரிப்பவர்கள் என்றோ அல்லது அதில் பெரும்பாலனவர்கள் பணம் வாங்கிவிட்டார்கள் என்றோ அர்த்தமல்ல.
தி.மு.க.வுக்கு சரியான மாற்று அ.தி.மு.க. தான் என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை என்றே பொருள். கவனிக்க 'சரியான'. மேலும் தன் மீது இருந்த நம்பகத் தன்மையை ஜெ. கடைசி நேரத்தில் வைகோவை வெளியேற்றியதன் மூலம் கேள்விக்குறியாக்கிவிட்டார். அதன் மூலம் கணிசமான வாக்காளர்கள் ஜெ. மீது அதிருப்தியடைந்து கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டனர் என்பதே உண்மை. நான் உட்பட.
தெரியாத பேய்க்கு தெரிந்த பூதமே மேல் என்று அவர்கள் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்துவிட்டதாக ஏன் கருதக்கூடாது?
ஜெ.வும் தான் இன்னமும் மாறவில்லை என்பதை நிரூபித்து வருகிறார். பலே..!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில்சந்தேகத்தின் பெயரில் கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா அவர்கள் இராணுவத்தினரால் அங்கு அவமானப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்டு சென்ற போதும் திரும்பும் போதும் ஒரு இராணுவ சிப்பாயால், சர்மா அவர்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார் சர்மா அவர்களின் மனைவியான வசந்தி சர்மாவும் இதே வழக்கில் பத்து வருடமாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், பிள்ளைகள் இருவர் கோவிலில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர், இதைவிட சுழிபுரம் பல இந்து ஆலய பராமரிப்பு சர்மா ஐயர் குடும்பம் சுட்டு கொல்லப்பட்டுள்ளது, இன்னும் பல ஐயர் குடும்பங்கள் கோவில்களில் பூசை செய்ய கூடாது எனஅச்சுறுத்தப்பட்டுள்ளனர், இந்து ஆலயங்களுக்கு அருகில் புதிதாக புத்தவிகாரைகளை அமைத்து தமிழர்களை புத்தரை வணங்கும்படி சிங்கள அரச இராணுவம் அச்சுறுத்துகின்றனர், இந்திய இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவை குடுங்கள்.ஈழத்தில் பிராமணரும் தமிழரும் ஒரோ குடும்பமாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வந்தேறி திராவிடரைபோல் இங்கு திராவிட சாதி இல்லை ஒரே சாதி இந்து தமிழ்சாதி தான் உண்டு