- கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
சுரேஷ் கோபிசெட்டிப்பாளையம்
தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
என்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்
அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து
தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்
உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்
மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது
இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது
தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து கொள்ளலாம்
அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்
என் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்
அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம் என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் அழைக்கிறது
அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்
கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்
தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்
இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது
- குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?
வாமதேவன் கொழும்பு
குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் ஆகும்
அந்த காலத்தில் பிழைப்பை தேடி இடம்விட்டு இடம் மாறும்போது கூட தனது வழிப்பாட்டு தெய்வத்தின் ஆலய மண்ணையோ அல்லது வேறுவகையான புனித சின்னங்களையோ தான் புதிதாக வாழப்போகும் இடத்திற்கு எடுத்து சென்று வழிப்பாடு செய்வார்களாம்
தான் வணங்கும் தெய்வம் தன்னோடு எப்போது இருக்க வேண்டும் என்ற மனித அன்பின் வெளிப்பாடே இது எனலாம்
முப்பாட்டன் செய்ததை பாட்டன் செய்ததை என் தகப்பனார் செய்ததை நானும் செய்வேன் செய்ய வேண்டும் என்று உருவானதே குலதெய்வ வழிப்பாடாகும்
பல குடும்பங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்
பரம்பரையாக செய்து வரும் வழிப்பாடுகளை நிறுத்தி விட்டால் தீங்குகள் பல ஏற்படும் என நம்பிக்கை உள்ளது
இது பலர் வாழ்வில் நடந்திருப்பதை அனுபவ பூர்வமாக நான் அறிவேன்
எனவே இஷ்ட தெய்வ வழிப்பாடு சரிதான் தொடர்ந்து செய்ய வேண்டியது தான் அதற்காக குலதெய்வ வழிப்பாட்டை விடுவது சரியல்ல
- கோவில்களில் உள்ளதுபோல் வீட்டிலும் விக்கிரக பூஜை செய்யல்மா?
ராகுல் மும்பை
கடவுள் படங்களை விட சிலைகளே மனதை சுலபமாக ஈர்க்க வல்லது என பெரியவர்களும் அனுபவசாலிகளும் சொல்கிறார்கள்
அதனால் விக்ரக பூஜையை வீட்டிலும் செய்யலாம்
அப்படி செய்யும் போது சில நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்
கோவிலில் இருப்பது போல பெரிய விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது
காரணம் ஆலயங்களில் கடைபிடிக்கும் எல்லாவகையான தர்மங்களையும் அப்படியே பிசகாமல் நம்மால் வீட்டில் அனுசரிக்க இயலாது
எனவே வீட்டில் வைத்து வழிப்படும் விக்கிரகங்களின் அளவு 11 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
இந்த அளவில் வைத்து வழிப்பட்டால் நல்லது நடக்கும் பிரச்சனையும் வராது