Store
  Store
  Store
  Store
  Store
  Store

போப் அழைக்கிறார் இந்து மதத்தில் சேர...!


   ட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடுவது தான் நமது வாடிக்கை இல்லங்கள் தோறும் இருக்கிறதோ இல்லையோ அன்று மட்டுமாவது நல்ல உணவை சமைத்து சாப்பிடுவது நமது நடைமுறை நேற்று வரை கண்டும் காணமல் போனவர்கள் கூட தீபாவளி வந்துவிட்டால் நின்று வாழ்த்து சொல்வது நமது பண்பாடு தபால் வழியிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொன்னால் தான் மனதிற்கு நிம்மதி பிறக்கும் 

இந்துக்களின் பண்டிகை தான் தீபாவளி என்றாலும் அதற்கு வாழ்த்து சொல்ல கருணாநிதி ஒருவரை தவிர வேறுயாரும் மறப்பதும் இல்லை வாய்ப்பை விடுவதும் இல்லை கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்கள் கூட வலிய வந்து வாழ்த்து சொல்லி நம்நெஞ்சை குளிர வைப்பார்கள் நாமும் ரம்ஜான் வாழ்த்து சொல்ல கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல தயங்குவது இல்லை நானிருக்கும் அரகண்டனல்லுரில் ரம்ஜான் பண்டிகையில் பிரியாணி விருந்தை இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் வைப்பதும் இந்துக்கள் தீபாவளி பொங்கலுக்கு இஸ்லாமியர்களை வீட்டுக்கு அழைத்து சிறப்பிப்பதும் தொன்று தொட்டு நடந்து வருவதாகும் இதை போலவே நாடு முழுவதும் பண்டிகை காலங்களில் மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து மனம் கனிந்து இணைந்து கொண்டாடி மகிழ்வது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அற்புத காட்சியாகும் 


தீபாவளி என்பது இந்தியாவில் மட்டும் அல்ல உலக முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பொது பண்டிகையாக இன்று வளர்ந்து வருகிறது இங்கிலாந்து அரசும் அமெரிக்க அரசும் கூட தீபாவளிக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கின்றது மற்றும் பல நாடுகளிலும் தீபாவளியின் தத்துவம் உணரப்பட்டு பாராட்டப்படுகிறது இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கு பெரும் எந்த நாட்டு முக்கிய மனிதர்களும் தங்கள் மனதிற்குள் ஆயிரம் கசப்புகள் இருந்தாலும் அதை மறைத்து கொண்டு இனிமையான வார்த்தைகளையே பேசுவார்கள் இது தான் நாம் இதுவரை நடைமுறையில் கண்டுவரும் நிகழ்வாகும் 

ஆனால் உலகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு மனிதன் இந்த தீபாவளி நாளில் வாழ்த்து சொல்கிறேன் பேர்வழி என்று விஷபுகையை வாய்வழியாக ஊதி இருக்கிறார் அந்த மனிதர் வேறு யாரும் அல்ல வாட்டிகன் நகரத்து மன்னரான போப் பெனடிக் அவர்கள் தான் அவர் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் பொய்மைக்கு எதிராக வாய்மையும் இருளுக்கு எதிராக ஒளியும் தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதையே தீபாவளி பண்டிகை குறிக்கிறது என்று துவங்குகிறார் இதை படிக்க ஆரம்பிக்கும் போது நமக்குள் ஒரு ஆனந்த ஊற்று பீரிட்டு கிளம்பும் ஆகா எவ்வளவு அற்புதமான பரந்த மனப்பான்மை உடைய மாமனிதன் போப் அவர்கள் என்று எண்ண தோன்றும் 


ஆனால் அடுத்தடுத்து அவர் சொல்லுகின்ற சங்கதிகளை படிக்கும் போது கருநாகப்பாம்பை மல்லிகை சரத்திற்குள் மறைத்து வைக்கும் வித்தையில் போப் எத்தகைய வித்தகர் என்பது நன்றாக தெரியும் அவர் சொல்கிறார் மத சுதந்திரம் என்பது ஒருவர் தன்னுடைய மதத்தை பொது இடத்திலும் தனி இடத்திலும் தனியாகவோ கூட்டமாகவோ பரப்புவதற்கும் பின்பற்றுவதற்கும் உள்ள உரிமையாகும் எனவே கிறிஸ்தவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்துக்கள் எதிர்த்து போராடவேண்டும் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பரப்ப இந்துக்கள் அனுமதிக்க வேண்டும் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் 

இது எப்படி இருக்கிறது என்றால் ஐயா நான் உன்னை கொல்ல போகிறேன் அதே நேரம் நிறைய பேரை கொலை செய்து களைப்பாகவும் இருக்கிறேன் கொடுவாள் பிடிக்க என் கை நடுங்குகிறது ஆகவே நீ முரண்டு செய்யாமல் நல்ல பிள்ளையாக வந்து என்முன்னால் தலையை குனிந்து நிற்பாயாம் நான் என் கை நோகாமல் உன் தலையை வெட்டி எடுப்பேனாம் நீ கத்தினால் கூட என் காது வலிக்கும் அதனால் சிரித்து கொண்டே செத்து விடு என்று சொல்வது போல் இருக்கிறது 

கிறிஸ்தவ மத பாதிரிகள் இந்தியாவில் நிகழ்த்துகின்ற மத மாற்று மாய்மாலங்கள் எல்லாம் யாரும் அறியாதது அல்ல பணத்தை காட்டி பதவியை காட்டி சொத்துசுக ஆசையை காட்டி பிரிட்டிஷார் காலத்தில் மத மாற்ற வேலையை செய்தார்கள் என்றால் இப்போது நாங்கள் மருத்துவமனை நடத்துகிறோம் கருணை இல்லங்கள் நடத்துகிறோம் ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவி ஒத்தாசைகள் செய்கிறோம் என்று மதமாற்றுகிரார்கள் மூளை பலம் இல்லாத சஞ்சலமான மன இயல்பு கொண்ட சாதாரண மனிதர்களை ஏசு நாதரின் அற்புத செயல்களை நெஞ்சுருகம் வண்ணம் பேசி மூளை சலவை செய்து மெளடிகமான முறையில் மத மாற்றுகிறார்கள் 


கிறிஸ்தவ பிரச்சாரகர்களால் நடத்தப்படுகின்ற ஜப கூட்ட மோசடி வேலைகளுக்கு உள்நாட்டில் இருக்கும் நாத்திகர்களையும் இந்திய பண்பாட்டு விரோதிகளையும் கூட்டணியாக சேர்த்து கொண்டு இந்து மதத்திற்கு எதிரான யுத்தத்தை நடத்துகிறார்கள் இத்தனையும் இந்துக்கள் தாங்கி கொள்ள வேண்டும் சகித்து கொள்ள வேண்டும் எவராவது மறுத்து எதிர்த்து ஒரு வார்த்தை சொனால் தங்களது பல்லக்கு தூக்கிகலான நாத்திக பரிவாரங்களை விட்டு மதவாதி பிற்போக்கு வாதி மக்களின் விரோதி என்றெல்லாம் ஏசவும் பேசவும் செய்விக்கிறார்கள் 

இந்தியாவில் இவர்கள் நடத்துகிற மதமாற்ற வியாபாரத்தை போல் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரமாக செய்ய முடியாது இயேசு நாதரும் எங்களது நமிமார்களில் ஒருவர்தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்களே அந்த இஸ்லாமிய நாடுகளில் ஒன்றிலாவது இவர்களால் ஏசுவை ஏற்று கொள்ளுங்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் அப்போது மட்டும் தான் உங்களுக்கு பிறக்கும் என்று பிரச்சாரம் நடத்த முடியுமா நடத்தி விட்டு உயிரோடு தான் திரும்ப முடியுமா 



முடவர்களை நடக்க வைக்கிறார் குருடர்களை பார்க்க வைக்கிறார் செவிடர்களை கேட்க வைக்கிறார் திமிர்வாதகாரர்களை சொஸ்தபடுத்துகிறார் ஏவல் சூனிய கட்டுகளை உடைக்கிறார் பிசாசுகளை ஓட்டுகிறார் ஆனந்தத்தை அள்ளித்தருகிறார் ஏசு அழைக்கிறார் என்று சவுதி அரேபியாவிலோ ஈரானிலோ பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று போப் அவர்களால் கேட்க முடியுமா? கேட்டு விட்டு அமைதியாக வாடிக்கன் அரண்மனையில் உறங்க முடியுமா? இந்தியன் ஏமாளி தன்னை திருட வந்தவனுக்கே மலர் மாலை போட்டு வரவேற்கும் பைத்தியகாரன் அவனை எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் எய்த்து பிழைக்கலாம் என்று கணக்கு போடுகிறார் போலும் 

மதம் மாற்றுவதற்கு சுதந்திரம் வேண்டும் உரிமை வேண்டும் அதற்கு மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் போப் தனது வாடிக்கன் நகரத்தில் கீதை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பாரா? ராமாயண மாகபாரத உபன்யாசங்கள் நடக்க ஒத்துழைப்பு தருவாரா? அதிகம் வேண்டாம் அங்கே உள்ள ஒரு மரத்தடியில் பிள்ளயார் விக்கிரக வைத்து யாரவது பூஜை செய்தால் அதற்கு உரிமை தருவாரா? தரலாம் என்று மனத்தால் கூட நினைத்து பார்ப்பாரா? முடியாது அவரால் நிச்சயம் முடியாது காரணம் அவர் மாற்றார்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வளர்வதை தடுக்க வேண்டும் தன் மதம் மட்டுமே செழிக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எண்ணுகின்ற கூட்டத்தின் தலைமை பிரதிநிதி ஆவார் 

இந்த இடத்தில் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி இருக்கிறது இந்து மதத்தை இந்திய கலாச்சாரத்தை எப்படியும் எப்பாடு பட்டாவது அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் எப்போதுமே அலைந்து கொண்டிருக்கிறது அந்த கூட்டத்தாரின் செயல்பாடுகள் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்வ சுகந்திரமாக நடந்து வருகிறது அதை கவனத்துடன் கண்காணித்து தடுக்க வேண்டும் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற உணர்ச்சி இந்து மக்களின் மனதில் அணையாத நெருப்பாக ஒவ்வொரு நொடியும் சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும் 

சுவாமி விவேகனந்தர் இந்து மதத்தில் இருந்து ஒருவன் வேறு மதத்திற்கு போகிறான் என்றால் இந்துக்களில் ஒருவன் குறைகிறான் என்பது அர்த்தமல்ல இந்துக்களில் விரோதிகளில் ஒருவன் எண்ணிக்கை கூடுகிறது என்பதே அர்த்தமாகும் என்று சொல்லுவார் அது சத்தியமான வார்த்தை இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதலில் மத மாற்றத்திற்கு எதிராக மக்கள் சக்தி பெருக வேண்டும் இதற்கு இந்து மத பெரியவர்கள் உழைக்க களப்பணி புரிய தேசத்தின் வீதிகளுக்கு வரவேண்டும் அப்படி வந்தால் மட்டுமே இந்து பண்பாடு வளரும் வாழும்.


Contact Form

Name

Email *

Message *