Store
  Store
  Store
  Store
  Store
  Store

தீக்குளிக்க சொன்ன ஆவி !


   அந்த பெண்ணிற்கு வயது இருபது என்று அவள் தந்தையார் சொன்னார் ஆனால் நம்ப முடியவில்லை உருவ தோற்றமும் சரி முக அமையும் சரி அவளுக்கு பதினைந்து வயத்திற்கு மேல் இருக்காது என்று சொல்லியது குழந்தை தனமான பார்வை விளையாட்டு தனமான சிரிப்பு பார்த்தவுடன் எல்லோருக்கும் அவளை பிடிக்கும்படியான ஒரு தோற்றம் 

அவள் தந்தையார் அழுகின்ற குரலில் என் மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சொன்னார் ஏன் உங்கள் மகள் நன்றாகத்தானே இருக்கிறாள் அவளுக்கென்ன பிரச்சனை என்று கேட்டேன் ஒருவருட காலமாக என்மகளை கொடிய ஆவி ஒன்று பிடித்து துன்புறுத்துகிறது பார்க்காத வைத்தியம் இல்லை போகாத மாந்திரீகர் இல்லை எல்லோருமே கையை விரித்து விட்டார்கள் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினார் 

உங்கள் மகளை பிடித்திருக்கும் ஆவி என்னத்தொல்லை செய்கிறது அதனால் ஏற்படும் கஷ்டங்கள் என்ன? என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் இவள் பெயர் காயத்திரி கணினி பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது தீடிர் என இரவு உறக்கத்தில் யாரோ தன்மீது விழுந்து அழுத்துவதாக உணர்திருக்கிறாள் இரண்டு நாள் கழித்தும் அதே போலவே உணர்வு ஏற்பட்டிருக்கிறது அன்று முதல் மிக தீவிரமான ஜுரத்தில் பத்து நாட்கள் அவதிபட்டாள் உடல்நிலை ஓரளவு தேறிய பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள் அதிலிருந்து யாரோ காதுக்கறுகில் பேசுவது போல் இருந்திருக்கிறது முதலில் அவள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை நாளடைவில் அந்த பேச்சு சத்தம் அதிகரித்திருக்கிறது சில நேரம் இரண்டு மூன்று பேர் பேசுவது போலவும் தன்னை எங்கேயோ அழைப்பது போலவும் உணர்திருக்கிறாள் 

இதை வெளியில் சொல்லமுடியாமல் சொல்ல தெரியாமல் தனக்குள்ளேயே போட்டு குமைந்திருக்கிறாள் இரவில் உறக்கம் வராமல் தவித்திருக்கிறாள் இவள் தவிப்பதையும் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வதையும் கவனித்த உடனிருந்த தோழிப்பெண்கள் எங்களிடம் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள் நானும் இவள் அம்மாவும் பதறி போய்விட்டோம் எங்களுக்கு இருபது ஒரே மகள் அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனையை என்றால் தாங்கி கொள்ள முடியுமா?

எனவே பெண்ணை வீட்டுக்கு கூட்டிவந்து விட்டோம் அப்போது தான் தனக்கு நடப்பதை எங்களிடம் சொன்னாள் இது நிச்சயம் காத்துகருப்பு வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து விபூதி மந்திரித்து போட்டோம் ஒன்றும் பயனில்லை என் தம்பி தனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் குழந்தையை அழைத்து போகலாம் என்றான் அங்கும் போனோம் 

அந்த மந்திரவாதி இவள் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சில ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அதில் இரண்டு ஆவி இவளை பிடித்து துன்புறுத்துவதாகவும் சொல்லி அதற்க்கான பூஜைகள் செய்து ஆவிகளை விரட்டி விடலாம் என்றும் சொன்னார் எப்படியாவது மகள் குணமானால் சரி என்று அந்த பூஜைகளையும் செய்தோம் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை 

அந்த வேளையில் என் நண்பர் ஒருவர் இவளின் மன நிலையில் இறுக்கம் ஏற்பட்டு இப்படி இருக்கலாம் எனவே மனோதத்துவ டாக்டரை பார்ப்பது நல்லது என்றார் நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்ற பழமொழிக்கு இணங்க டாக்டரிடம் சென்றோம் அவர் இரண்டு மூன்று முறை கவுன்சிலிங் கொடுத்து மாத்திரைகளையும் தந்தார் அவர் சொல்லியப்படி மருந்துகளை கொடுத்து வந்தோம் அது அவளுக்கு நிறைய உறக்கத்தையும் மயக்கத்தையும் கொடுத்ததே தவிர நிவாரணத்தை தரவில்லை அந்த மருந்தை சாப்பிட சாப்பிட நரம்புகள் தளர்ந்து உடலும் மெலிந்து விட்டாள் 

வேறொருவர் இது நரம்பு கோளாறால் வந்த தொல்லையாக இருக்கலாம் எனவே நரம்பியல் மருத்துவரை பாருங்கள் என்றார் அப்படியும் செய்தோம் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததே தவிர குறைய வில்லை தனக்குள் கேட்கின்ற மாய குரலால் பயித்தியம் பிடித்தவள் போல் நடக்க ஆரம்பித்து விட்டாள் ஒரு நாள் அந்த குரல் உடம்பில் நெருப்பு வைத்துக்கொண்டு செத்து போ என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறது 

அந்த குரல் சொல்லியப்படி செய்தாலாவது தனது துயரம் நீங்காதா என்று நினைத்து உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ள போய்விட்டாள் சதாநேரமும் அவளை கண்காணித்து கொண்டே இருந்ததினால் ஆபத்து இல்லாமல் காப்பாற்றி விட்டோம் ஆனாலும் எங்களையும் மீறி இப்படி எதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம் எங்களை வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது 

இந்த நேரத்தில் உங்கள் பதிவுகளை இணையதளத்தில் தொடர்ந்து படித்து வரும் என் நண்பர் உங்களை பற்றிய விவரங்களை சொல்லி எங்களை அனுப்பி வைத்தார் என் மகளின் கஷ்டத்தை நீங்கள் போக்குவீர்கள் என்று மலைபோல் நம்பி வந்திருக்கிறோம் எப்படியும் காப்பாற்றி விடுங்கள் என்று தழுதழுத்த குரலில் என்னிடம் கேட்டுக்கொண்டார் 

நான் அந்த பெண்ணின் ஜாதகத்தை கணித்து பார்த்தேன் ஜாதக ரீதியில் அமானுஷ்யமான சக்திகளின் தொல்லை அந்த பெண்ணிற்கு இல்லை என்பதை அறிய முடிந்தது பொதுவாக ஒரு ஜாதகத்தில் ராகு சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் சேர்க்கை பெற்று இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இந்த கிரகங்கள் இருந்தாலோ ஆவி மற்றும் துஷ்ட தேவதைகளின் பாதிப்பு மனிதனுக்கு ஏற்படும் ஆனால் இந்த பெண்ணின் ஜாதகம் அப்படி எதையும் காட்டவில்லை 

ஆனாலும் அதை இன்னும் தெளிவாக உறுதி படுத்திக்கொள்ள முடிவு செய்த நான் அவர்களை வேறொரு நாள் வரசொல்லி விட்டு பிரசன்ன ஜோதிட முறையிலும் ஜைமினி ஜாதக முறையிலும் ஆராய்ந்து பார்த்தேன் அவைகள் அந்த பெண் மிக தீவிரமான மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே தவிர ஆவிகளின் பாதிப்பு இல்லை என்றே உறுதிபடுத்தியது நான் அறிந்த இந்த உண்மையை அந்த பெண்ணிடமோ அல்லது அவள் பெற்றோரிடமோ சொன்னால் நம்பும் நிலையில் அவர்கள் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது காரணம் இந்த நோய்க்கான மூலம் ஆவி என்றே அவர்கள் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதை மாற்றி சொல்லும்போது அவர்கள் மனம் முதலில் ஈடுபாட்டுடன் ஏற்காது நான் சொல்லும் சிகிச்சை முறைகளையும் நம்பிக்கையுடன் செய்ய மாட்டார்கள் 

எனவே அவர்களிடம் பொய் சொல்வது என்று முடிவு செய்தேன் அவர்களை அழைத்து உங்கள் மகளுக்கு இரண்டு ஆவிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது அவகளின் சக்தி அவள் உடம்பில் ஊறி போய்விட்டது எனவே உடம்பிற்குள் இருக்கும் தீய சக்தியை சில அமானுஷ்ய மூலிகைகளின் துணையோடு வெளியேற்ற வேண்டும் அதற்கு மூன்று மாதம் நான் சொல்லியப்படி நடக்க வேண்டும் என்றேன் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள் 

மருளுமத்தை என்ற மூலிகையை பொடிசெய்து விபூதியில் கலந்து அந்த பெண்ணை மூன்று மாதம் தண்ணீரில் கலக்கி சாப்பிட சொன்னேன் சில யோகாசன முறைகளையும் சொல்லி இவைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டேன் இத்தோடு ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் மலர்களை வைத்து செய்யப்படும் மருந்துகளையும் கொடுத்தேன் ஆனால் இவை எதையும் நான் மருந்து என்று அவர்களிடம் சொல்லவில்லை மாந்திரீக பொருட்கள் என்றே சொன்னேன் 

என்ன அதிசயம் பாருங்கள் ஒரு மாதத்திலேயே அந்த பெண்ணிற்கு நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது நான் வைத்திருந்த மூன்று மாத கால கெடுவிற்கு முன்பே அவள் நல்ல குணமாகிவிட்டாள் இப்போது விட்டிருந்த படிப்பையும் தொடர ஆரம்பித்தது விட்டாள் பொதுவாக நம்மால் புரிந்து கொள்ளமுடியாத பிரச்சனைகள் வந்தவுடன் அதை பேய் தொல்லை ஏவல்,சூனிய பாதிப்பு என்று முடிவு செய்து விடுகிறோம் இது தவறு எல்லோரையும் பேய்பிடிக்காது சூனியம் பாதிக்காது அதற்கென்று உள்ள கிரக நிலை உள்ளவர்களுக்கே அத்தகைய அமானுஷ்ய தொல்லை ஏற்படும் அந்த ஜாதக அமைப்புகள் எப்படி இருக்கும் என்று வேறொரு நாளின் சிந்திப்போம்.

Contact Form

Name

Email *

Message *