Store
  Store
  Store
  Store
  Store
  Store

கொலு வைத்தால் வறுமை விலகும்



   குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது மகளின் ஜாதகத்தை பார்த்த ஒருவர் உங்கள் பெண் திருமணம் ஆனதற்கு பிறகு மிகவும் வறுமையில் வாடுவாள். எவ்வளவு பெரிய செல்வந்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தாலும், அவள் தரித்திரத்தை தடுக்க இயலாது என்று கூறினார். என் மகளை இதுவரையில் செல்லமாகவே வளர்த்து வருகிறோம். அவர் கூறியபடி அவள் நிலைமையானால் எங்களால் அதை தாங்கி கொள்ள இயலாது. அவளுக்கு அந்த தோஷம் விலக எதாவது பரிகாரம் இருக்கிறதா? தயவு செய்து வழிகாட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன். 

இப்படிக்கு, 
தனலஷ்மி, 
நாமக்கல். 



ரு பெண்ணினுடைய ஜாதகத்தில், நான்காவது வீட்டுக்குரிய கிரகம், எட்டாவது வீட்டில் அமர்ந்தாலும், ஒன்று, இரண்டு, ஏழு ஆகிய வீட்டுக்குரிய கிரகங்கள், ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய வீடுகளில் அமர்ந்தாலும், அவள் திருமணத்திற்கு பிறகு வறுமையில் வாடுவாள் என்று ஜாதக நூல்கள் கூறுகின்றன. 

இதிலிருந்து தப்பித்துக்கொள்ள பரிகாரங்கள் இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட பெண்கள் மாதம் தோறும் வளர்பிறையில் வருகின்ற அஷ்டமி திதியில், கோமாதா வழிபாட்டை செய்ய வேண்டும். கட்டாயம் ஒவ்வொரு அஷ்டமி திதியிலும், பகவத் கீதை படித்து ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட வேண்டும். தவறாமல் நவராத்திரி காலங்களில் வீட்டில் கொலு வைத்து விரதம் இருக்க வேண்டும். இப்படி செய்தால் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும். 



Contact Form

Name

Email *

Message *