அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். மந்திரங்களை மனப்பாடம் செய்து தான் சொல்ல வேண்டுமா? புத்தகங்களை பார்த்துச் சொல்லலாமா?
இப்படிக்கு,
ஷியமளா,
திருச்சி.
புத்தகங்களை பார்த்துச் மந்திரங்களை சொல்லும் போது, நமது கவனம் பல இடங்களில் செல்வதற்கு வாய்ப்புள்ளது. மனப்பாடமாக கண்களை மூடிச் சொன்னோம் என்றால், ஓரளவாவது மனது ஒருநிலைப்படும். வேறு வழியில்லாத போது, சிறிது காலத்திற்கு புத்தகங்களை பார்த்து சொல்லலாம். பிறகு அதை குறைத்துக் கொள்ள வேண்டும்.