பாட்டாளி மக்கள் கட்சிக்கு அரசில் எதிர்காலம் எப்படியுள்ளது?
அந்தக் கட்சி வன்னிய இன மக்களின் மனசாட்சியாக இருப்பதாக தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறது ஆனால் வன்னியர் வளர்ச்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அது இதுவரை கிள்ளிப் போட்டதில்லை
மாறாக தங்களது குடும்ப வளங்களை பெருக்கிக் கொள்ளவே அதன் தலைவர்கள் இந்த நிமிடம் வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாடாய் படுவதும் அதற்காகத்தான்
அந்தக் கட்சி வன்னிய இன மக்களின் மனசாட்சியாக இருப்பதாக தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறது ஆனால் வன்னியர் வளர்ச்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அது இதுவரை கிள்ளிப் போட்டதில்லை
மாறாக தங்களது குடும்ப வளங்களை பெருக்கிக் கொள்ளவே அதன் தலைவர்கள் இந்த நிமிடம் வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாடாய் படுவதும் அதற்காகத்தான்
இரண்டு கழகங்களுமே சுயநலவாதிகளால் நிறம்பியது என்றாலும் சிற்சில விஷயங்களில் பொது நோக்கத்தோடு செயல்படுகின்றன எனச்சொல்லலாம்
ஆனால் பா.ம.க.விடம் பொதுநோக்கு என்பது எள்முனை அளவிலும் கிடையாது பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதும் குறுகிய ஜாதியவாதம் பேசுவதும் பதவிக்காக எத்தகைய பல்டி வேண்டுமானாலும் அடிப்பதும்தான் ராமதாசின் ஒரே சித்தாந்தம்
கலைஞர் ஜெயலலிதா போன்றோர்களிடம் எதாவது நாட்டு நலன் பற்றிய சிந்தனை மிச்சம் இருந்தால் தைலாபுரக் கும்பலை கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடவேண்டும் அதுதான் நாட்டுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் நல்லது