Store
  Store
  Store
  Store
  Store
  Store

இயேசு நாதரை காப்பாற்றுங்கள்


  இயேசுநாதர் மாதிரி தமிழ் நாட்டரசு செயல்படுவதாக முதல்வர் கூரியுள்ளாரே?

   ண்டையக்காலத்தில் கவிகாளமேகம் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் யாரையாவது திட்டவேண்டும் என்றால் புகழ்ந்து பல வார்தைகளை வைத்துப் பாடுவார்

   அப்பாடலை மேலோட்டமாக பார்த்தால் புகழ் மொழிபோலத்தான் தெரியும் ஆழ்ந்து பார்த்தால்தான் திட்டுவது புரியும் நம்ம கலைஞர் அவர்களும் காளமேகப் புலவரின் தற்கால வாரிசுதான்

  இயேசு மேல இவருக்கு என்னவோ கோபம் அதை நேராக காட்டினால் வடுகப்பட்டியிலிருந்து வாடிகன் வரையும் கொதித்து தலையில் கொட்டித் தீர்த்து விடுவார்கள்


  கொட்டுகளை தாங்க வயசானக் காலத்தில் அவருக்கு ஏது தெம்பு?

   அதனால்தான் தனது அலைக்கற்றை புகழ் ஆட்சியை இயேசுநாதரோடு ஒப்பிட்டு பேசுகிறார்

   கிறிஸ்துமஸ் அன்று இப்படி தீட்டுவாங்க வேண்டும் என்று ஏசு ஜாதகத்தில் இருக்கு போலிருக்கு

  கடவுளாக இருந்தாலும் தலைவிதி விடாது போலிருக்கு பாவம் இயேசு இவரையும் மன்னிக்க வேண்டும்

இயேசு நாதரை கலைஞரிடம் இருந்து யாராவது காப்பாற்றினால் நன்றாக இருக்கும்


Contact Form

Name

Email *

Message *