அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் என் தனிப்பட்ட வாழ்த்துதல்கள்!
இதுவரை நமது உஜிலாதேவி தளத்தில் பல்வேறுப்பட்ட பதிவுகளை படித்திருப்பீர்கள் பலர் பயனுள்ளதாக இருக்கிறது என்று பாராட்டினாலும் சிலர் அபிப்ராய பேதப்பட்டதும் உண்டு
25 வருட பொது வாழ்வில் பாராட்டுதலும் பழிசொல்லும் பழகிப் போய்விட்டதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை .
இணைய தளத்தில் எழுத ஆரம்பித்த நாள் தொடங்கி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பல அன்பர்கள் உங்கள் வாழ்கை குறிப்பை படித்த போது தற்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் உங்கள் இருப்பிடம் எப்படி இருக்கும்? அதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறோம் என்றும்
இதுவரை நமது உஜிலாதேவி தளத்தில் பல்வேறுப்பட்ட பதிவுகளை படித்திருப்பீர்கள் பலர் பயனுள்ளதாக இருக்கிறது என்று பாராட்டினாலும் சிலர் அபிப்ராய பேதப்பட்டதும் உண்டு
25 வருட பொது வாழ்வில் பாராட்டுதலும் பழிசொல்லும் பழகிப் போய்விட்டதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை .
இணைய தளத்தில் எழுத ஆரம்பித்த நாள் தொடங்கி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பல அன்பர்கள் உங்கள் வாழ்கை குறிப்பை படித்த போது தற்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் உங்கள் இருப்பிடம் எப்படி இருக்கும்? அதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறோம் என்றும்
அரகண்டநல்லூர் சிவன் கோவில்
பல பதிவுகளில் வாசகர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல நேரங்களில் பதிலே சொல்வதில்லை அதற்கு என்ன காரணம்? என்றும் கேட்கிறார்கள்
அவர்களுக்கு தனித் தனியாக நான் பதில் சொல்லி விட்டாலும் கேட்க விரும்பி கேட்காமல் இருக்கும் மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுத தலைப்படுகிறேன்
நான் 1980 முதல் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுருக்கு அறுகிலுள்ள அரகண்டநல்லூரில் வசிக்கிறேன்
நான் வாழும் இடத்திற்கு பக்கத்தில் மாமன்னன் இராஜராஜ சோழன் மற்றும் மலையமான் திருமுடிக்காரியால் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சிவன் கோயில் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பாறையில் அமைந்துள்ளது
அவர்களுக்கு தனித் தனியாக நான் பதில் சொல்லி விட்டாலும் கேட்க விரும்பி கேட்காமல் இருக்கும் மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுத தலைப்படுகிறேன்
நான் 1980 முதல் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுருக்கு அறுகிலுள்ள அரகண்டநல்லூரில் வசிக்கிறேன்
நான் வாழும் இடத்திற்கு பக்கத்தில் மாமன்னன் இராஜராஜ சோழன் மற்றும் மலையமான் திருமுடிக்காரியால் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சிவன் கோயில் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பாறையில் அமைந்துள்ளது
ஸ்ரீ நாராயண மிஷன் முகப்பு விநாயகர்
இந்த ஊரை நகரம் என்றும் சொல்லி விட முடியாது கிராமம் என்றும் தள்ளிவிட முடியாது விவசாயம் தான் முக்கியமான தொழில் என்பதனால் பல ரைஸ்மில்கள் பெட்டிக்கடை மாதிரி அணிவகுப்பாய் இருக்கிறது
இந்த ஊரை பொருத்தமட்டும் ஆடைகளையும் வீட்டையும் வைத்து மனிதனை எடை போட முடியாது 4 பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் கூட சைக்கிளில்தான் போவார்.
அரகண்டநல்லூரிலிருந்து சரியாக 6 கி.மீ தொலைவில் காடகனூரில் நமது ஸ்ரீ நாராயணா மிஷன் உள்ளது இந்த இடத்தின் மொதப்பரப்பளவு 2 ஏக்கர் இதில் கட்டிடத்தின் பரப்பு 7 செண்ட் போக மீதமுள்ள பகுதி அனைத்தும் மா தென்னை வாழை பலா மரங்களே உள்ளது
நீங்கள் உள்ளே நுழைந்த உடன் வாசலில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம் நீங்கள் வைஷ்ணவராயிற்றே சைவக்கடவுளை எப்படி வைக்கலாம் என்று என்னிடம் யாரும் கேட்பதில்லை
இந்த ஊரை பொருத்தமட்டும் ஆடைகளையும் வீட்டையும் வைத்து மனிதனை எடை போட முடியாது 4 பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் கூட சைக்கிளில்தான் போவார்.
அரகண்டநல்லூரிலிருந்து சரியாக 6 கி.மீ தொலைவில் காடகனூரில் நமது ஸ்ரீ நாராயணா மிஷன் உள்ளது இந்த இடத்தின் மொதப்பரப்பளவு 2 ஏக்கர் இதில் கட்டிடத்தின் பரப்பு 7 செண்ட் போக மீதமுள்ள பகுதி அனைத்தும் மா தென்னை வாழை பலா மரங்களே உள்ளது
நீங்கள் உள்ளே நுழைந்த உடன் வாசலில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம் நீங்கள் வைஷ்ணவராயிற்றே சைவக்கடவுளை எப்படி வைக்கலாம் என்று என்னிடம் யாரும் கேட்பதில்லை
குருஜியின் தியான குடில்
காரணம் பெருமாளுக்கு கொடுக்கின்ற முக்கியத்தை சிவனுக்கும் கொடுப்பவன் நான் என்பது ஊருக்கே தெரியும்
பிள்ளையாரை தரிசித்து நேரே மேற்கே பார்த்தால் வளக்கமாக மாலை நேரத்தில் நான் தியானம் செய்யும் குடில் தெரியும் இதன் முன்னால் உள்ள புல்வெளியில் மணி கணக்காக உட்கார்ந்திருப்பது எனக்கு பிடித்தமான செயல்
இந்த இடத்தில் காக்கை கிளி மைனா எப்படி சாதாரணமாய் வந்து போகுமோ அப்படியே பாம்புகளும் வருகை தரும் ஆனால் இது வரை ஒரு பூனைக்குட்டிக் கூட பாம்புகளால் கடிக்கப்பட்டதில்லை
பிள்ளையாரை தரிசித்து நேரே மேற்கே பார்த்தால் வளக்கமாக மாலை நேரத்தில் நான் தியானம் செய்யும் குடில் தெரியும் இதன் முன்னால் உள்ள புல்வெளியில் மணி கணக்காக உட்கார்ந்திருப்பது எனக்கு பிடித்தமான செயல்
இந்த இடத்தில் காக்கை கிளி மைனா எப்படி சாதாரணமாய் வந்து போகுமோ அப்படியே பாம்புகளும் வருகை தரும் ஆனால் இது வரை ஒரு பூனைக்குட்டிக் கூட பாம்புகளால் கடிக்கப்பட்டதில்லை
ஸ்ரீ நாராயண மிஷன் பிரதான கட்டிடம்
பிரதான கட்டிடத்தில் முதல் இரண்டு அறைகளில் நூலகம் மற்றும் மருந்து தயாரிப்பு இடம் உள்ளது மூன்றாவது அறையில் இலவச சித்த மருத்துவச் சாலை இயங்குகின்றது இம்மருத்துவப் பிரிவை எனது தலைமைச் சீடர் டாக்டர் வி.வி. சந்தானம் கவனித்துக் கொள்கிறார்
அடுத்ததாக பெரிய பிராத்தனைக் கூடம் உள்ளது இதில்முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
பூஜைகள் மட்டுமின்றி பல கூட்டங்களும் இங்குதான் நடக்கும் இதற்கு பின்புறம் நான் விருந்தினர்களை சந்திக்கும் அறை இருக்கிறது இங்குதான் நான் படித்தல் எழுதுதல் எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது
அடுத்ததாக பெரிய பிராத்தனைக் கூடம் உள்ளது இதில்முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
பூஜைகள் மட்டுமின்றி பல கூட்டங்களும் இங்குதான் நடக்கும் இதற்கு பின்புறம் நான் விருந்தினர்களை சந்திக்கும் அறை இருக்கிறது இங்குதான் நான் படித்தல் எழுதுதல் எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது
மருத்துவ கூடத்தில் தலைமைச் சீடர் டாக்டர் வி.வி. சந்தானம்
என் வேலை அதிகாலையிலேயே துவங்கி விடும்.விவசாய வேலைகளை கண்காணித்தபின் பூஜையில் உட்காருவேன் காலை 11 மணிக்குப் பிறகுதான் உணவு முடித்து காடகனூர் செல்வேன்
வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் விருந்தினரை 12 மணியிலிருந்து 2 மணிவரை பார்த்து பேசுவேன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நமது விவேகானந்தா சேவா சமிதி மூலமாக கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் கல்வி தானப்பள்ளிகளை பார்வையிட கிளம்பி விடுவேன்
எப்படியும் தினசரி 2 பள்ளிகளை பார்த்து குழந்தைகளிடம் பேசா விட்டால் மனசு சங்கடப்படும் ஒவ்வொறு பள்ளிக்கும் குண்டும் குழியுமான சாலையில் காரில் போனால் கூட இடுப்பெலும்பு கழன்று விடும்
வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் விருந்தினரை 12 மணியிலிருந்து 2 மணிவரை பார்த்து பேசுவேன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நமது விவேகானந்தா சேவா சமிதி மூலமாக கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் கல்வி தானப்பள்ளிகளை பார்வையிட கிளம்பி விடுவேன்
எப்படியும் தினசரி 2 பள்ளிகளை பார்த்து குழந்தைகளிடம் பேசா விட்டால் மனசு சங்கடப்படும் ஒவ்வொறு பள்ளிக்கும் குண்டும் குழியுமான சாலையில் காரில் போனால் கூட இடுப்பெலும்பு கழன்று விடும்
பிராத்தனை கூடம்
மாலை 6 மணிக்குத் திரும்பி வந்து எழுத உட்கார்ந்தால் 10 மணியாகி விடும் பிறகு எப்படி வாசகர்களின் கேள்விக்கு பதில் தினம் தினம் எழுத? என்றாவது பொழுது கிடைத்தால் உண்டு
இன்னொறு முக்கியமான விஷயம் நமது பதிவில் ஒரு சின்ன தொழில் நுட்டபம் கூட எனக்குத் தெரியாது நான் எழுதியதை பதிவு செய்து கணினியில் காண்பித்தால் குறை நிறையை சொல்லத் தெரியும்
மற்றப்படி கணினி வேலைகளை கவனிப்பது நமது ஆசிரமவாசி சதீஷ்குமார்தான் அவன்தான் மின்னஞ்சல்களை கவனிப்பது பதில் சொல்வது எல்லாமே
இன்னொறு முக்கியமான விஷயம் நமது பதிவில் ஒரு சின்ன தொழில் நுட்டபம் கூட எனக்குத் தெரியாது நான் எழுதியதை பதிவு செய்து கணினியில் காண்பித்தால் குறை நிறையை சொல்லத் தெரியும்
மற்றப்படி கணினி வேலைகளை கவனிப்பது நமது ஆசிரமவாசி சதீஷ்குமார்தான் அவன்தான் மின்னஞ்சல்களை கவனிப்பது பதில் சொல்வது எல்லாமே
ஸ்ரீ நாராயணா மிஷன் கணிபொறியாளர் சதீஷ் குமார்
இப்போது நான் பதில் சொல்லாத குற்றத்திற்காக மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்
இன்னும் ஒரு முக்கிய தகவலை உங்களுக்கு சொல்ல வேண்டும் நமது நாராயணா மிஷன் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி உணவு உடை இருப்பிடம் மருத்துவம் எல்லாம் கொடுத்து பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்
இன்னும் ஒரு முக்கிய தகவலை உங்களுக்கு சொல்ல வேண்டும் நமது நாராயணா மிஷன் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி உணவு உடை இருப்பிடம் மருத்துவம் எல்லாம் கொடுத்து பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்
தணிக்கலாம்பட்டு கிராம கல்விதான பள்ளியில் குருஜி
அதற்கு பொருட் செலவும் அதிகப்படும் ஆள்பலமும் தேவைப்படும் இவைகளுக்கு என்ன செய்யலாம் என்று உங்கள் மேலான ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும் தயவு செய்து சொல்லவும்
ஊர் கூடி தேர் இழுத்தால்தான் நன்றாக இருக்கும்
ஊர் கூடி தேர் இழுத்தால்தான் நன்றாக இருக்கும்





+ comments + 31 comments
வணக்கம் குருஜி.ஊர் கூடி தேரை மட்டும் இல்லாமல் உலகத்தையே இழுப்போம். வாழ்த்துக்கள் குருஜி.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
விவேகானந்த சேவா சமிதி என்பது விவேகானந்த கேந்திரமா?
பெருமையாக உள்ளது. எனக்கே அங்கு வந்துவிட வேண்டும் போல ஒரு உணர்வு. வருவேன் நேரம் வரும் போது.
தங்களின் தொண்டு மேலும் சிறக்கவேண்டும்.
@நீச்சல்காரன்
இல்லை அது சொந்த அறக்கட்டளை
நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறீர்கள். தொடரட்டும்.
இந்த பதிவை பார்ப்பவர்கள் கண்டிப்பாக தேர் இழுப்பதில் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்..........
இப்பொழுது நான் ஒரு மாணவனே என்னால் முடியும் தருணம் கண்டிப்பாக தேர் இழுப்பதற்கு நானும் வருவேன்.....
ஸ்ரீ நாராயணா மிஷன் கணிபொறியாளர் சதீஷ் குமார் அவர்களிற்கு நான் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்....
மிகவும் இலகுவான முறையிலும் மற்றும் அழகான முறையிலும் இந்த பதிவு தளத்தை வடிவமைத்து இருக்கின்றார்.
ஒரு சின்ன விண்ணப்பம் பதிவுப்பிரிவுகளின் தலையங்கங்கள் பல வர்ணங்களில் இருப்பது சற்று உறுத்தலாக இருக்கின்றது.... உங்களிற்கு ஆட்சேபனை இல்லையென்றால் அந்த பகுதியை இருண்டு வர்ணங்களாலானதாக மாற்றிக்கொள்ளுங்கள்..........
நான் உங்களின் வலை தளத்தை தொடர்ந்து படிப்பது உண்டு..ஆனால் இதுவரை கருத்து எழுதியது இல்லை..
உங்களின் இந்த ""ஊர் கூடி தேர் இழுப்போம்" பதிப்பை படிக்கவே மிகவும் சந்தோஷமா இருந்தது..
மிக நல்ல முயற்சி..இதற்கு சேவை மனப்பான்மை மித முக்கியம்..வாழ்த்துக்கள்.
எனக்கும் இது போல என் கிராமத்தில் (என் மூதாதையர் வாழ்ந்த ஊர்) ஆக்க பூர்வமான முயற்சிகள் செய்ய திட்ட மிட்டு கொண்டு இருக்கிறேன்..
தங்களுக்கு ஏதேனும் முன் அபிப்பராயம் (ஆலோசனைகள்) இருப்பின் தயவு செய்து பதிக்கவும்..
Dear Guruji,
I will be a sure participant in these kind of activities which you are planning for. Please let me know some time to meet you so that i can help like how a squirrel has helped Lord Rama to build the bridge.
Thanks,
Ramprasad
மிகவும் அற்புதமான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
nalla sevai. Ungal intha thodinai thodaruttum.
Veli naattil vaazh thamiozhargal ithu pontra
seyalgalukku niraiyave uthavugirargal. avargalai
anugalaam. california vilirunthu (USA) velivarum
THENDRAL engintra thamizh maatha ithazhalgalil
ith thondinaipatri veliyittal sevai seyyavum
uthavikkaram neettavum nam unmaiyana thamizhargal
munvaruvaargal.
Vazhga ungal iraippani, narpani.
சகோதரர் சதீஷ் குமாருக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்
குருஜி தொடருங்கள் உங்கள் மக்கள் சேவையை
Dear GURU JI
Because of your open mindedness, people of all religions will help you in your good cause and deeds.
A HUMAN BEING
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.ஊர் கூடி தேர் இழுக்க நானும் கூட்டத்தில் ஒரு எறும்பாக இருப்பேன். எறுப்பாக இருப்பதற்க்கும் உங்களுடைய தன்னலமற்ற ஆசிர்வாதங்கள் எங்களுக்கு தேவை.உங்களோடு சேர்ந்து பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பு குணத்தையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
வாழ்த்துக்கள் குருஜி
Dear Guruji,
I was so impressed and delighted by this blog, I pray to god to continue this service endless.
you are the greatest icon , word of-
'NOTHING IS IMPOSSIBLE...,'
I SPOKE TO YOU SO MANY TIMES FROM IN UNITED KINGDOM (UK),
BUT EVERY TIME I AM PRAYING TO GOD FOR YOUR GOOD HEALTH AND GOOD LIFE WITH GOOD FUTURE ALSO..,
THANK YOU VERY MUCH
YOUR'S
MR SRINIVASAN (MD)
ANNAPURNA PVT LTD
UK
இறை அருளோடு இணைய எனக்கும் ஆசை , அன்பே சிவம் !
i am also want to join ur service and proud of u
Kasi viswanathan
Guru ji
There is no date displayed. When this post is published
Kasi 19/6/11
@நீச்சல்காரன்இல்லை. விவேகானந்தா கேந்திரம் என்பது கன்யாகுமரியில் இருப்பது; விவேகானந்தர் பாறை நினைவாலயத்தை நிர்வாகம் செய்வது.
வணக்கம்
தங்கள் வலைபகுதியினை பார்த்தேன்
அன்பே சிவம்
பெரிய அளவில் பல வித அஞ்சனங்கள் தயாரிக்கும் கூடங்கள் நல்ல ஆன்ம
அலைவரிசை மூலம் செய்து சமூக சேவை மற்றும் நல்ல சீடர்கள் உருவாக்கலாம் தானே
இணைந்திட விரும்பும் அடியார் குழதுக்கு தங்கள் பகிர்வுகள் அறிய ஆவலாய்
கிரிதரன் மகாதேவன்
email id: gmvishnusanth03@gmail.com
என்ன செய்யவேண்டும் உத்தரவிடுங்கள் காத்திருக்கிறேன்
சிவகுமார்
கத்தார்
என்ன செய்யவேண்டும் உத்தரவிடுங்கள் காத்திருக்கிறேன்
சிவகுமார்
கத்தார்
nnmsiva@rediffmail.com
good god bless s.Natarajan chennai 603202 guduvanchery
Excellent...
I was expecting an opportunity like
this.If all Spiritual Gurus like you
join Hands and All the followers
get
together Then OUR NATION will
become
a SUPREME POWER and Happiness only
will be given to each and every
HUMAN BEING.
SIVAKUMARAN C V
sivakumarancv@gmail.com
RESPECTED SIR. IAM ALSO A REGULAR READER OF YPUR SITE . THANKS ALOT FOR SHARING AND EDUCATING US . PL LET ME KNOW THE DETAILS OF ACCEPTING SMALL AND HUMBLE DONATIONS TO THE
ASHRAM . HOW CAN I SEND ? PL INFORM SIR
RGDS
S HARIHARA SUBRAMANIAN
ஐயா
தங்களுடைய ஆன்மிக பணியில்
கலந்துகொள்ள தயார்.
இப்படிக்கு
ரா.ராகவேந்திரன்
THANK U GURUJI
பங்கு கொள்ள விருப்பம்... ஆனால் என் பொருளாதார நிலை...
Dear Esteemed Guruji,
I’m also ready to joint with your treasured service and proud of you.
Velmuruganchelliah - from Madurai.
Post a Comment