- கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? விதையில் இருந்து மரம் வந்ததா? மரத்தில் இருந்து விதை வந்ததா? சொல்லுங்கள் பார்ப்போம்
வரதராஜன் தாம்பரம்
சார்லஸ் டார்வின் பரிணாம விஞ்ஞான தத்துவப் படி முதலில் வந்தது முட்டையும் விதையும் தான் அதன் பிறகு தான் மரமும் அதன் அடியில் கிண்டி புழுபொருக்கும் கோழியும் வந்தது
ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது
இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும் வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை தீராத சண்டையாக இருக்கிறது
உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது
ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது
என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில் கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது
ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது
இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும் வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை தீராத சண்டையாக இருக்கிறது
உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது
ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது
என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில் கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது
- அம்மா வேலைக்கு போ என்கிறார்கள் எனக்கோ படிக்க ஆசை தாய் சொல்லை தட்டவா? வேலைக்கு போவதா? உங்கள் முடிவு என்ன?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்
படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும் அந்த காலத்தை தவற விட்டு விட்டு தள்ளாடும் வயதில் படித்திருக்கலாமே என்று புலம்புவது நன்றாக இருக்காது
வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்
ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது
மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்
எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்
அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.
வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்
ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது
மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்
எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்
அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.
- மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்