- என் வீடு வாஸ்துப்படி சரியாகவே கட்டப்பட்டுள்ளது இருந்தாலும் வீட்டுக்குள் சென்றவுடன் மனம் நிலை இல்லாமல் அலைகிறது இனம் புரியாத படப்படப்பு கோபம் வருகிறது இது என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே தினசரி நடக்கும் சம்பவமாகி விட்டது எதனால் இப்படி இருக்கிறது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ராஜ கோபாலன் கள்ளக்குறிச்சி
நீங்கள் அனுப்பிய வரைபடப் படி உங்கள் வீட்டு அமைப்பு மிக சரியாக இருக்கிறது
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகமும் நல்ல நிலையிலேயே உள்ளது
ஆனாலும் வீட்டுக்கு வெளியே அமைதி உள்ளே பரபரப்பு என்பதற்கு உங்கள் மனையின் மண் அமைப்பில் எதாவது தவறு இருக்கலாம்
அதை ஆரம்பத்தில் நீங்கள் ஆராயாமல் விட்டு விட்டீர்கள் இனி அதை பற்றி வருத்தப்பட்டு பயன் இல்லை
மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்
உங்கள் வீட்டில் எட்டு மூலையிலும் வன்னி மர குச்சியை அம்மாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள்
அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும்
பிறகு உங்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்வும் அமைதியும் தானாக ஏற்படும்