Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாடி ஜோதிடத்தை எப்படி அணுக வேண்டும் ?


  • யா எனது தந்தையாருக்கு பல நோய்களால் பல காலமாக தொல்லை இருந்து வருகிறது அந்த நோய்கள் ஏன் வருகிறது எந்த கிரகத்தின் தாக்குதலால் தொடர்ச்சியான நோய் தாக்கம் ஏற்படுகிறது அதற்க்கான பரிகாரங்கள் என்ன என்பதை நாடி ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள அவர் ஆசைபடுகிறார் குறிப்பாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள நாடி ஜோதிடத்தை எப்படி அணுக வேண்டும் ?

ராஜகோபால்,மடிப்பாக்கம் 



   நாடி ஜோதிடம் என்பது பன்னிரண்டு காண்டங்கள் கொண்டது இந்த காண்டம் என்ற வார்த்தை ஜோதிட சாஸ்திரத்தில் பாவம் என்ற வார்த்தையால் சொல்லப்படும் சுருக்கமாக விளக்கி சொல்வது என்றால் உயிராகிய ஜென்ம லக்கினத்தை முதலாக கொண்டு அடுத்தடுத்து வரும் ராசி கட்டங்களை ஆராய்வதே காண்டம் பாவம் என்ற வார்த்தைகளில் பொருளாகும் ஒவ்வொரு காண்டமும் தனித்தனி பெயரால் அழைக்கப்படுகிறது 

பித்துரு காண்டம், மாத்ரு காண்டம் சகோதர காண்டம் வித்யா காண்டம் ஜீவா காண்டம் ,களத்திர காண்டம், கர்ம காண்டம், ரோக காண்டம் ,ஞான காண்டம் பொது காண்டம் என்று காண்டங்கள் வரிசை படுத்தப்படுகிறது இதில் உங்கள் தகப்பனார் பார்க்க விரும்புவது ரோக காண்டமாகும் 

இந்த காண்டத்தில் நோய்களும் அதற்கான காரணங்களும் மரணத்தின் தன்மையும் கணித்து சொல்லப்படும் இது மட்டும் அல்லாது ஒரு மனிதனுக்கு ஏற்படும் வாகன விபத்துக்கள் சண்டையில் ஏற்படும் காயங்கள் தீய மந்திரத்தால் உண்டாகும் பில்லி சூனிய பிரச்சனைகள் போன்றவைகளையும் அறிந்து கொள்ளலாம் அது மட்டும் அல்லாது மனிதனின் திருட்டு தனம் சோம்பேறி தனம் போன்றவைகளும் இந்த காண்டத்தில் தெளிவாகத்தெரியும்.

Contact Form

Name

Email *

Message *