அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்களது இணையதளத்தை வெகுநாட்களாக படித்து வருகிறேன். என்னை போன்றவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களுக்கு கூட எளிமையாக அழகாக விளக்கம் தருகிறீர்கள். அதை படிப்பவர்களுக்கு நிச்சயம் ஆறுதலும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.
உங்களிடம் பலர் மிக முக்கியமான வாழ்க்கை சிக்கல்களையும் புனிதமான விஷயங்களையும் கேட்டு தெளிவடைகிறார்கள். அவர்களின் கேள்விகளோடு ஒப்பிடும் போது இப்போது நான் கேட்கும் கேள்வி மிகவும் கீழ்த்தரமானது தரக்குறைவானது உங்களை போன்ற மாமனிதர்களிடம் கேட்ககூடாத கேள்வியாகும். ஆனாலும் இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்டே ஆகவேண்டும். திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள் என்னை போன்று மலிவான மனிதர்களுக்கு உங்களை போன்ற புனிதர்கள் தெய்வம் போல வழிகாட்ட வேண்டும்.
தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள் நான் ஒரு பாவி வாழ்வில் கடைபிடிக்க கூடாத அனைத்து கெட்ட பழக்கங்களும் எனக்கு தெரியும் அந்த பழக்கத்தில் மீளமுடியாத அளவு நான் மூழ்கி கிடக்கிறேன். புகைபிடிப்பது மது அருந்துவது சுயஇன்பம் அனுபவிப்பது என்று எல்லாவிதமான தீய பழக்கங்களும் என்னை ஆட்டுவித்து வருகிறது நேற்றுவரை அதிலிருந்து விடுபட நான் நினைக்கவில்லை அவைகளெல்லாம் தவறுகள் என்று யாரவது சொன்னால் கூட அவர்களை எதிரியாக கருதியிருப்பேன்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது எனது உடல்நலம் முழுமையாக கெட்டு விட்டது கைகால்கள் நடுக்கம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்கும் டம்ளரை கூட சரியாக என்னால் எடுக்க முடியாது அவ்வளவு நடுக்கம். உடம்பு முழுவதும் நெருப்பை வாரி கொட்டியது போல எரிகிறது. இரவில் சரியாக உறங்க முடியவில்லை. விபரீதமான கற்பனைகளும் மன அழுத்தமும் ஏற்படுகிறது. உங்களிடம் இதைச்சொல்ல வெட்கமாகவே இருக்கிறது. ஆனாலும் தாயாரிடம் ஒருகுழந்தை பசியை சொல்லி அழுவது போல வெட்கமில்லாமல் கேட்கிறேன் இந்த பாவிக்கு விடுதலை அடைய வழிகாட்டுங்கள். 35 வயதில் அறுபது வயது கிழவன் போல் ஆகிவிட்ட என்னை காப்பாற்றுங்கள் நீங்களும் கைவிட்டு விட்டால் மரணத்தை தவிர எனக்கு வேறு மார்க்கமில்லை
உங்களிடம் பலர் மிக முக்கியமான வாழ்க்கை சிக்கல்களையும் புனிதமான விஷயங்களையும் கேட்டு தெளிவடைகிறார்கள். அவர்களின் கேள்விகளோடு ஒப்பிடும் போது இப்போது நான் கேட்கும் கேள்வி மிகவும் கீழ்த்தரமானது தரக்குறைவானது உங்களை போன்ற மாமனிதர்களிடம் கேட்ககூடாத கேள்வியாகும். ஆனாலும் இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்டே ஆகவேண்டும். திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள் என்னை போன்று மலிவான மனிதர்களுக்கு உங்களை போன்ற புனிதர்கள் தெய்வம் போல வழிகாட்ட வேண்டும்.
தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள் நான் ஒரு பாவி வாழ்வில் கடைபிடிக்க கூடாத அனைத்து கெட்ட பழக்கங்களும் எனக்கு தெரியும் அந்த பழக்கத்தில் மீளமுடியாத அளவு நான் மூழ்கி கிடக்கிறேன். புகைபிடிப்பது மது அருந்துவது சுயஇன்பம் அனுபவிப்பது என்று எல்லாவிதமான தீய பழக்கங்களும் என்னை ஆட்டுவித்து வருகிறது நேற்றுவரை அதிலிருந்து விடுபட நான் நினைக்கவில்லை அவைகளெல்லாம் தவறுகள் என்று யாரவது சொன்னால் கூட அவர்களை எதிரியாக கருதியிருப்பேன்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது எனது உடல்நலம் முழுமையாக கெட்டு விட்டது கைகால்கள் நடுக்கம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்கும் டம்ளரை கூட சரியாக என்னால் எடுக்க முடியாது அவ்வளவு நடுக்கம். உடம்பு முழுவதும் நெருப்பை வாரி கொட்டியது போல எரிகிறது. இரவில் சரியாக உறங்க முடியவில்லை. விபரீதமான கற்பனைகளும் மன அழுத்தமும் ஏற்படுகிறது. உங்களிடம் இதைச்சொல்ல வெட்கமாகவே இருக்கிறது. ஆனாலும் தாயாரிடம் ஒருகுழந்தை பசியை சொல்லி அழுவது போல வெட்கமில்லாமல் கேட்கிறேன் இந்த பாவிக்கு விடுதலை அடைய வழிகாட்டுங்கள். 35 வயதில் அறுபது வயது கிழவன் போல் ஆகிவிட்ட என்னை காப்பாற்றுங்கள் நீங்களும் கைவிட்டு விட்டால் மரணத்தை தவிர எனக்கு வேறு மார்க்கமில்லை
பெயர் வெளிட விரும்பாத வாசகர்
நமது சித்தர்கள் விந்து விட்டவன் நொந்து சாவான் என்று மிக அழகாக சொல்வார்கள் ஆனால் ஆங்கில வைத்தியர்கள் இதை நம்புவது இல்லை சிறுநீர் போல மலம் போல வியர்வை போல விந்துவும் ஒரு கழிவுப்பொருள் அது வெளியேறினால் அதனால் உடம்பிற்கு எந்த கெடுதியும் இல்லை என்கிறார்கள். இது மட்டுமல்ல சுயஇன்ப பழக்கம் கெடுதியானதே அல்ல என்றும் அடித்து பேசுகிறார்கள் அவர்கள் அப்படி கூறுவதன் காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அதற்கும் காரணம் இருக்கிறது சாதாரணமாக மலஜலம் கழித்தால் அது தவறல்ல அதுவே அதிகமாகி போனால் அது பேதி என்றும் நீரழிவு என்றும் நோய்களாக மாறிவிடுகிறது. அதே போலதான் ஒரு மனித உடலிருந்து சாதாரணமாக இந்திரியம் வெளியேறினால் அது தவறல்ல அதுவே அளவுக்கு அதிகமானால் பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதனால் தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.
சிக்மன் ப்ராய்டு என்ற புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் குழந்தை பருவத்தில் சரியான தாய்பால் இல்லாதவர்கள் பெரியவர்கள் ஆனதும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்கிறார். அதே போலவே சிறியவயதில் பெற்றோர்களால் அறிவுப்பூர்வமாக பாதுகாக்கப்படாத குழந்தைகளுக்கே சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் ஏற்படுகிறது என்று சொல்லலாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் அதிகப்படியான தனிமை அதிகப்படியான சுதந்திரம் அதிகப்படியான பணம் இவைகள் அவர்களை பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக தள்ளிவிடுகிறது.
தவறுகள் செய்வது அறியாமையால் கூட நிகழலாம் எப்போது ஒரு மனிதன் தான் செய்வது தவறு அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைக்கிறானோ அப்போது திருந்தி விடுகிறான். இந்த கேள்வி கேட்டிருக்கும் வாசகர் தான் செய்வது தவறு என்று முற்றிலுமாக உணர்ந்து விட்டார் இனி அவரால் நிச்சயம் விடுதலை பெற முடியும்.
அந்த வாசகர் தனது உடல்நிலையை பற்றி எந்த மருத்துவரிடமும் ஆலோசனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் நோயின் தாக்கத்தை விட குற்ற உணர்ச்சியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதனால் நோயின் கொடுமை கடுமையாக தெரிகிறது முதலில் அவர் தனது கொந்தளிப்பான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அருகாமையில் உள்ள நல்ல சித்தவைத்தியரை பார்த்து நாடி பரிசோதனை செய்து நோயிற்காண மூல காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
இருந்தாலும் அவர் சொல்லுகின்ற நோய் அறிகுறிகள் அதிகப்படியான விந்து வெளியேற்றத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதிகமான பித்தம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் சம்மந்தபட்டவரை நேரில் பார்க்காமல் நாமாக எந்த முடிவிற்கும் வர இயலாது. இருந்தாலும் அவருக்கு சிறிய மருத்துவ ஆலோசனை சொல்ல வேண்டியது. நமது கடமையாகிறது.
கோரைகிழங்கு நூறுகிராம், கொத்தமல்லி விதை நூறுகிராம், சீரகம் ஐம்பது கிராம், சோம்பு ஐம்பது கிராம், நிலப்பனை நூற்று ஐம்பது கிராம் எடுத்துகொண்டு சுத்தமான பசும்பாலில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அந்த பொருள்களை இடித்து சூரணமாக வைத்துகொண்டு தினசரி காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவற்றால் உடல் நடுக்கம் உடல் எரிச்சல் நமைச்சல் உஷ்ணம் போன்றவைகள் விலகும். ஒருமண்டல காலம் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும் மனதை கடவுளின் மீது வைத்து மருந்து உண்டுவாருங்கள் மருந்து குணப்படுத்துகிறதோ இல்லையோ இறைவன் கண்டிப்பாக குணப்படுத்துவான்.
அதற்கும் காரணம் இருக்கிறது சாதாரணமாக மலஜலம் கழித்தால் அது தவறல்ல அதுவே அதிகமாகி போனால் அது பேதி என்றும் நீரழிவு என்றும் நோய்களாக மாறிவிடுகிறது. அதே போலதான் ஒரு மனித உடலிருந்து சாதாரணமாக இந்திரியம் வெளியேறினால் அது தவறல்ல அதுவே அளவுக்கு அதிகமானால் பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதனால் தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.
சிக்மன் ப்ராய்டு என்ற புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் குழந்தை பருவத்தில் சரியான தாய்பால் இல்லாதவர்கள் பெரியவர்கள் ஆனதும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்கிறார். அதே போலவே சிறியவயதில் பெற்றோர்களால் அறிவுப்பூர்வமாக பாதுகாக்கப்படாத குழந்தைகளுக்கே சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் ஏற்படுகிறது என்று சொல்லலாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் அதிகப்படியான தனிமை அதிகப்படியான சுதந்திரம் அதிகப்படியான பணம் இவைகள் அவர்களை பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக தள்ளிவிடுகிறது.
தவறுகள் செய்வது அறியாமையால் கூட நிகழலாம் எப்போது ஒரு மனிதன் தான் செய்வது தவறு அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைக்கிறானோ அப்போது திருந்தி விடுகிறான். இந்த கேள்வி கேட்டிருக்கும் வாசகர் தான் செய்வது தவறு என்று முற்றிலுமாக உணர்ந்து விட்டார் இனி அவரால் நிச்சயம் விடுதலை பெற முடியும்.
அந்த வாசகர் தனது உடல்நிலையை பற்றி எந்த மருத்துவரிடமும் ஆலோசனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் நோயின் தாக்கத்தை விட குற்ற உணர்ச்சியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதனால் நோயின் கொடுமை கடுமையாக தெரிகிறது முதலில் அவர் தனது கொந்தளிப்பான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அருகாமையில் உள்ள நல்ல சித்தவைத்தியரை பார்த்து நாடி பரிசோதனை செய்து நோயிற்காண மூல காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
இருந்தாலும் அவர் சொல்லுகின்ற நோய் அறிகுறிகள் அதிகப்படியான விந்து வெளியேற்றத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதிகமான பித்தம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் சம்மந்தபட்டவரை நேரில் பார்க்காமல் நாமாக எந்த முடிவிற்கும் வர இயலாது. இருந்தாலும் அவருக்கு சிறிய மருத்துவ ஆலோசனை சொல்ல வேண்டியது. நமது கடமையாகிறது.
கோரைகிழங்கு நூறுகிராம், கொத்தமல்லி விதை நூறுகிராம், சீரகம் ஐம்பது கிராம், சோம்பு ஐம்பது கிராம், நிலப்பனை நூற்று ஐம்பது கிராம் எடுத்துகொண்டு சுத்தமான பசும்பாலில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அந்த பொருள்களை இடித்து சூரணமாக வைத்துகொண்டு தினசரி காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவற்றால் உடல் நடுக்கம் உடல் எரிச்சல் நமைச்சல் உஷ்ணம் போன்றவைகள் விலகும். ஒருமண்டல காலம் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும் மனதை கடவுளின் மீது வைத்து மருந்து உண்டுவாருங்கள் மருந்து குணப்படுத்துகிறதோ இல்லையோ இறைவன் கண்டிப்பாக குணப்படுத்துவான்.
ஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் ஆண்மை குறைவு பிரச்சனை நிறைந்தர தீர்வுக்கு ருத்ர சஞ்சீவி மூலிகை வழங்கப்படுகிறது
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் - 8110088819
🔴 ருத்ர சஞ்சீவி 🔴