- ஐயா எனது ஜாதகத்தில் ராசியிலேயே கேதுவும் செவ்வாவும் இருக்கிறார்கள் இவை மிக தீய பலனை தரும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள் அது உண்மையா?
குமார்,திருச்சி
கிரகங்களின் ஸ்தான பலனை மட்டுமே கணக்கிட்டு பலன் சொல்வது ஒரு வித ஜோதிட முறை கிரகங்களின் சேர்க்கையை வைத்து பலன் சொல்வது நாடி ஜோதிடத்தின் மரபாகும்
அதன் அடிப்படையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கிரக சேர்க்கையின் பலன் என்னவென்றால் உங்களுக்கு உங்கள் மூத்த சகோதரனால் பிரச்சனையை இருக்கும் அல்லது அவரால் நீங்கள் அதிகமான துயரத்தை அனுபவிப்பீர்கள் உங்கள் குடும்பத்தில் நிலம் சம்பந்தமான வழக்குகள் இருக்கலாம் உங்கள் திருமணம் தடை பட்டும் இருக்கலாம்
இது தான் சப்தரிஷி நாடி ஜோதிடத்தின் கருத்தாகும் அதே நேரம் இந்த மூன்று கிரகங்களும் உங்கள் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது வீட்டில் இருக்கிறது என்று தெரிந்தால் தான் தெளிவான பதிலை சொல்ல முடியும் ஆகவே இத்தைகைய கிரக சேர்க்கைகளை பற்றி அதிகமாக கவலை பட வேண்டாம்.