Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னோடு நீ வருவாய் !


சித்திரை மாதத்து 
அக்னி சூரிய வெளிச்சமாக 
உன்னை கண்டேன் 

பெளர்ணமி முழு நிலவு 
குளிர்ச்சியாய் நீ தெரிந்தாய் 

துருவ பனியின் 
நடுங்கும் குளிராய் 
நீ இருப்பாய் என்று 
நெருங்கி தொட்டேன் 

வசந்த காலத்து 
கதகதப்பாய் 
என்னை அனைத்தாய் 

வைற்றுகுள் எரிகின்ற 
பசி என்ற நெருப்பாக 
எப்போதும் என்னருகில் 
நீ இருப்பாய் என்றிருந்தேன் 

அறுசுவை உணவாக 
அருகில் வந்து நீ 
பசியாற்றி நின்றாய் 

துன்பமென்ற எண்ணங்கள் 
எனைதுரத்தும் நேரமெல்லாம் 
தோன்றாதுணையாய்
வருகின்ற பரம்பொருளே 

இருளும் ஒளியாக 
நீயே ஆனாலும் 
இரண்டிலும் என்னோடு நீ வருவாய்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *