மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து ஒரு சிறிய வீடு என் கணவர் கட்டி வருகிறார். வாஸ்துபடி தான் வீட்டை அமைத்து வருகிறோம். இருந்தாலும் வீடு கட்டுவதில் அடிக்கடி சிக்கல் வருகிறது. வேலையாட்கள் சரிவர அமையமாட்டேன் என்கிறார்கள். இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு பணப்பற்றாக்குறை வருகிறது. இது தீர நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று குருஜி அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
வசந்தி,
தாம்பரம்.
வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் புற்று உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று புற்றில் பால்வார்த்து அம்மனை வழிபடுங்கள் அங்கு கொடுக்கப்படும் குங்கும பிரசாதத்தை கடல் நீரில் கலந்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் முழுமையாக தெளியுங்கள் தடைகள் விலகும் காரியம் கைகூடும்.