திருமணம் முடிந்த பிறகு வேலை கிடைத்தால் முதல் மாத சம்பளத்தை சாஸ்திரப்படி அம்மாவிடம் கொடுப்பதா? மனைவியிடம் கொடுப்பதா?
இப்படிக்கு,
மணிகண்டன்,
மலேசியா.
வாழ்க்கை என்ற தேருக்கு அச்சாணியாக இருப்பவள் மனைவி. அதே நேரம் தேராகவே வருபவள் அன்னை. எந்த வகையில் பார்த்தாலும் தாயை விட தாரம் உயர்ந்தவள் அல்ல இந்த முடிவிற்கு நான் மட்டும் புதிதாக வரவில்லை நமது முன்னோர்களும் நமது சாஸ்திரங்களும் அலசி ஆராய்ந்து இறுதியாக சொன்னதை திரும்ப சொல்கிறேன்.
தாய் என்பவள் முக்கியமென்றாலும் பொருளாதார ரீதியாக குடும்பத்தை நடத்துவதற்கு கடமை பட்டவர் தகப்பனே ஆவார். எனவே குடும்பத்திற்கு வருகிற வருவாய் தந்தையிடமே சேர்க்க பட வேண்டும் என்பது விதி அவர் இல்லாத பட்சத்தில் தாயாரிடம் கொடுக்க வேண்டும்.