ஐயா நான் மிகவும் கஷ்டப்பட்டு சொந்த ஊரில் ஒரு வீட்டுமனை வாங்கினேன் வாங்கியமனை வடமேற்கு மூலை மட்டும் வளர்ந்ததாக இருக்கிறது இந்த இடம் வீடு கட்டுவதற்கு சரியானது அல்ல மீறி கட்டினால் விபரீத விளைவுகள் ஏற்படுமென்று சிலர் சொல்கிறார்கள் நான் மிகவும் குழம்பிய நிலையில் இருக்கிறேன் இந்த இடத்தை விற்று விடலாமா? என்றும் யோசிக்கிறேன் தயவு செய்து நீங்கள் எனக்கு சரியான வழியை காட்டுங்கள் நீங்கள் கூறுகிற முடிவை இறுதி முடிவாக எடுத்து கொள்கிறேன்
இப்படிக்கு
வாசுதேவன்
கடையநல்லூர்
நீங்கள் வாங்கி இருக்கும் வீட்டு மனை என்பது நிலமே தவிர கட்டிய வீடு அல்ல கட்டி முடித்த வீடு வடமேற்கு மூலை வளர்ந்திருந்தால் தான் யோசிக்க வேண்டும் இதில் அச்சபடுவதற்கு எதுவுமே கிடையாது
நீங்கள் வீடுகட்டும் போது அஸ்திவாரத்தை நீள்சதுரமாகவோ சதுரமாகவோ அமைத்து கொள்ளுங்கள் தேவையில்லாமல் நீண்டு நிற்கும் பகுதியை உபயோகபடுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கள் எந்த சிக்கலும் கிடையாது நல்லபடி வாழலாம்