குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது கனவில் அடிக்கடி கோவில் மணியோசை கேட்கிறது. சில நேரத்தில் உண்மையாகவே கோவிலில் மணி அடிக்கிறார்களோ? என்ற எண்ணத்தில் எழுந்து விடுகிறேன். மணியோசை கேட்பது நல்லதா? என்று எனக்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் அது தீமை வருவதற்கான அறிவிப்பு என்று சொல்லி பயமுறுத்துகிறார். நீங்கள் சரியான விபரத்தை கூறினால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
வர்ஷினி,
கோவை.
மணியோசை கேட்டால் தீமை நடக்கும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. மாறாக கனவில் மணியோசை கேட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். தொழில் சிறப்பாக இல்லாதவர்களுக்கு சிறப்படையும். அலுவலக ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது எனவே கவலையை விடுங்கள்.