Store
  Store
  Store
  Store
  Store
  Store

கொத்தி தின்னும் கோழி


ண்ணாடியை பார்க்கிறேன்
கன்னம் முழுவதும்
கறுப்பாய் தெரிந்த தாடி முடிகள்
வெளுத்து நுரையாகி
வெண்மையாய் வடிகிறது
துடித்து நின்ற
மீசை கூட
படிந்து கிடக்கிறது
கிழக்கே பார்க்கும்
அந்தி நிழலாய்
முடியும் காலத்தை
முட்டி முட்டி பார்க்கிறது
வெள்ளை புருவங்கள்
ஆகா
காலம் என்னை
அபகரித்து விட்டது

யானையின் தந்தத்தால்
செத்துக்கிய சீப்பும்
சந்தன மரத்தால்
கட்டிய கட்டிலும்
தங்கமுலாம் பூசி
வடித்த செருப்பும்
இரும்பு பெட்டியில்
உறங்கி கொண்டிருக்கிறது
யார் வந்து தட்டிச்செல்வார்களோ என்று
உறங்காமல் பயந்து துடிக்கிறேன்
ஆகா
ஆசை என் வீரத்தை அபகரித்துவிட்டது

துரியோதனன் சபையில்
தர்மத்தை விற்க சென்று
விற்காத பொருள்களை
கடைகட்டி கிளம்பிய
விதுரன் என்ற ஞானி சொன்னான்
பொறாமை தர்மத்தை அபகரித்துவிடும்.
கோபம்
செல்வத்தை அபகரித்து விடும்.
காமம்
வெட்கத்தை அபகரித்து விடும்.
கர்வம்
நல்லவைகள் அனைத்தையும்
அபகரித்து விடும்.

அபகரிக்கும்
நெருப்பு துண்டங்கள் அனைத்தையும்
விழுங்கி தின்றுவிட்டு
தண்ணீர் குடித்து கொப்பளிக்க பார்க்கிறேன்
காலம் என்ற கோழி
முள்ளான அலகெடுத்து
கொத்தி கொத்தி
என்னை அபகரிக்க பார்க்கிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *