Store
  Store
  Store
  Store
  Store
  Store

சனியின் பாதிப்புக்கு மந்திர பரிகாரம்




   ரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான், திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வருகிறேன். தமிழ்நாடு தான் எனது பூர்வீகம் என்றாலும், எனது முன்னோர்கள் வெகு காலத்திற்கு முன்பே கேரளா வந்து விட்டார்கள். எனது தாயார் தமிழ் மீது மிகத் தீவிரமான பற்றுடையவர் என்பதனால், நான் தமிழ் படித்தேன். அப்படி நான் தமிழ் படித்ததற்கு இறைவனுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன். காரணம், தமிழை நான் படிக்காவிட்டால் உங்கள் இணையதளத்தை வாசிக்க முடியாது. உங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. உங்களது அறிவு திறத்தால் என்னை நான் வளர்த்து கொள்ள முடியாமலும் போயிருக்கும். எனவே அதற்காக இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்துகிறேன்.

பிறப்பால் நான் அந்தணன். பட்டம் படித்து தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருந்து வந்தேன். பிராமணனின் லட்சணம் குமாஸ்தா வேலை செய்வதில் அல்ல, சாஸ்திரங்களை போதிப்பதில் தான் இருக்கிறது என்று, காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் சொன்னதை படித்து வேலையை விட்டு விட்டு சாஸ்திரங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். அப்படி ஆராயும் போது ஜோதிடசாஸ்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் ஆழ்ந்து ஈடுபட்ட போது தான் உங்களது இணையதளத்தை பார்க்க நேரிட்டது. நீங்கள் பெற்றிருக்கின்ற ஜோதிட அறிவும், அனுபவமும் என்னை மலைக்க வைக்கிறது.

சாஸ்திரத்தை அன்றாட வாழ்க்கையோடு பொருத்திக்கொண்டு வருவதில் தான் வெற்றி மறைந்து இருக்கிறது. அந்த மறைபொருளை மிக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்களில் இருந்து மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. நான் உங்கள் நேரத்தை அதிகம் வீணடிக்காமல், நேரடியாக கேள்விக்கு வருகிறேன். இப்போது சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி என்றாலே சாமானிய மக்களுக்கு கிலி பிடித்துக் கொள்கிறது. காரணம், கெடுதி செய்வதாக இருந்தால், சனி சிறிது காலம் செய்து விட்டு ஓய்வு கொள்ள மாட்டார் மிக குறைந்த பட்சம் இரண்டரை வருடமாவது மனிதர்களை படாத பாடு படுத்திவிடுவார்.

இப்போதைய சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்கு அஷ்டமத்து சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகியவைகளுக்கு ஏழரைச் சனி. அதாவது, ஐந்து ராசிகாரர்களுக்கு சனிப்பெயர்ச்சி கெடுதியான பலனை தரப்போகிறது. சனி கொடுமையில் இருந்து விடுபடுவதற்கு எத்தனையோ பரிகாரங்கள் உண்டு. புனித யாத்திரை, தானதர்மம், பூஜைகள், ஹோமங்கள் இரட்சைகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். கூட்டிக் கழித்து, கணக்குப் பார்த்தால் கொடுமைகள் குறைகிறதோ என்னவோ கொடுமைகளை தாங்குகின்ற மனப்பக்குவம் இந்த பரிகாரங்களால் வந்து விடுகிறது.

அதற்காக நான் பரிகாரங்கள் அத்தனையும், பயனற்றவைகள் என்று கூறவரவில்லை. எல்லோருக்கும் பயனைத் தரவில்லை என்று கூறுவதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனால், சனியால் பாதிப்படையும் அனைவரும் முழுக்க நிவாரணம் பெறுவதற்கு, சரியான வழிமுறை பரிகாரம் இருக்கிறதா? அதை எப்படி சம்மந்தப்பட்டவர்கள் செய்து கொள்ள வேண்டும் என்பதை தாங்கள் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். என்னை போன்று வழியறியாது தவிக்கும் பலருக்கு உங்களது வழிகாட்டுதல் சிறப்பை தருமென்று உறுதியாக நம்பி உங்களை மீண்டும் வணங்கி மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
நரசிம்மராமன்,
திருவனந்தபுரம்.




னி என்று இல்லை, வேறு பல கிரகங்களாலும், தோஷங்களாலும், சாபங்களாலும் பாதிப்படைபவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவற்றால், அவர்கள் அணு அணுவாக சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இவர்களுக்காக பரிகாரம் செய்யும் போது, அந்த பரிகாரம் எப்படி பலன் தருகிறது என்பதை சிந்திக்க வேண்டும்? ஜென்ம லக்கினத்தில் சனி வந்து உட்கார்ந்தால், அவன் தருகின்ற பலனை தந்து தானே தீருவான். அதற்கு பரிகாரம் செய்தால் எப்படி தப்பிக்க முடியும்? என்பதையும் யோசிக்க வேண்டும்.

முதலில் சனி, வானவெளியில் எங்கோ வெகுதொலைவிலிருந்து நம்மை எப்படி பாதிப்படையச் செய்கிறது என்பதை விஞ்ஞான நோக்கில் புரிந்து கொண்டால் மற்றது சுலபமாக இருக்கும். அயன வெளியில் சுற்றி வருகின்ற கிரகங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் வித்தியாசமான அதிர்வுகள் பயணப்பட்டு கொண்டே இருக்கிறது. பூமியினுடைய ஈர்ப்பு சக்தியால், அந்த அதிர்வுகள் வெகு வேகமாக பூமிக்கு வருகிறது.

வந்த அதிர்வுகள் பூமியை மட்டுமல்ல, பூமியில் வாழுகின்ற உயிர்கள் அனைத்தையுமே தொடுகிறது. அப்படி தொடும் போது, சிலருக்கு சனியின் அதிர்வு அதிகமாக இருக்கிறது. சிலருக்கு சூரியனின் அதிர்வு அதிகமாக இருக்கிறது. வேறு சிலருக்கு குருவின் அதிர்வு அதிகமாக இருக்கிறது. நாம் பிறந்த நேரப்படி, நமது உடம்பில் நடந்து கொண்டிருக்கின்ற ரசாயன மாற்றங்கள் அந்தந்த அதிர்வுகளை அதிகமாகவோ, குறைவாகவோ இழுத்துக் கொள்கிறது.

அப்படி இழுக்கும் போது, அதிகப்படியாக வரும் கிரக அதிர்வுகள், நமக்கு நன்மையாகவோ, தீமையாகவோ அமைவது நமது பிறந்த நேரமும், பூர்வ ஜென்ம கர்மாவும் எனலாம். இந்த இடத்தில், தான் பரிகாரங்கள் வருகிறது. குறிப்பிட்ட காரியங்களுக்காக, நாம் செய்கின்ற பரிகாரங்கள் அனைத்துமே அது எதுவாக இருக்கட்டும். அதன் அடிப்படை என்பது மந்திரங்களாகவே இருப்பதை அனைவரும் அறிவோம்.

யாகங்கள் செய்வதிலும், மந்திரம் இருக்கிறது. தானங்கள் செய்வதிலும், மந்திரம் இருக்கிறது. தாயத்துகள், ரசமனிகள், இராசிக்கற்கள், அஞ்சனங்கள் என்று அனைத்திலுமே மூல வித்தாக மந்திரமே இருக்கிறது. இந்த மந்திரங்கள் நமக்காக விற்பன்னர்கள் பயன்படுத்தும் போது, மந்திர அதிர்வுகள் நம்மிடத்தில் வருகின்ற எதிர்மறையான அதிர்வுகளை வெளியேற்றி, நல்ல அதிர்வுகள் நம்மைச் சுற்றி எப்போதும் இருப்பது போல வைத்துக் கொள்கிறது. இது தான் பரிகாரம் என்பதன் ஆதார தத்துவம், தொழில்நுட்ப ரகசியம்.

மந்திரத்திற்கு மட்டும் அந்த சக்தி இருப்பது ஏன்? என்று கேட்டால் மந்திரங்கள் ஒலிக்கும் போதும் அதிர்வு வருகிறது. ஒரே மாதிரியான சத்தம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒலிக்கும் போது அது சக்தி மிகுந்ததாக மாறி, ஒரு வேலி போல பாதுகாப்பு தருகிறது. இந்த பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியவர்கள், சாமான்ய மனிதர்கள் அல்ல. அதி அற்புத சக்தி படைத்த ரிஷிகள். அதனால் இவர்களால் உருவாக்கப்பட்டதனால் தான் மந்திரங்களுக்கு சக்தி இருக்கிறது.

மூலிகைகளால் செய்யப்படுகின்ற அஞ்சனம் என்பது, குறிப்பிட்ட கிரகத்தின் ஆற்றலை நமக்குள் ஈர்த்து தருவது. அது நல்ல பலனைத் தரும் என்றாலும் கூட, சிறிது கால அவகாசம் அதற்கு வேண்டும். முதலில் அந்த மூலிகை நமது உடம்போடு கலக்க வேண்டும். நமது உடம்பும் எதிர்மறை அதிர்வுகள் இல்லாமல் மூலிகை ஆற்றலை தக்கவைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் கிரகங்களின் சக்தியை தடுப்பதற்கோ, அதிகரித்து கொடுப்பதற்கோ அவைகளால் முடியும். மற்ற யாகங்களும், பூஜைகளும், தானங்களும் கூட இதே மாதிரி தான்.


எனவே உடனடி பலனைத் தருவது மந்திரப்பிரயோகம் மட்டுமே. காரணம், அது நமக்காக மற்றவர்கள் செய்வது அல்ல. நமக்காக நாமே செய்வது ஆகும். எனவே சனிப் பெயர்ச்சியால் அவதிப்படுபவர்கள் நான் கூறுகின்ற ஆலோசனை ஒன்று தான். சில நாட்களுக்கு முன்பு காசு தரும் மந்திரம் என்ற தலைப்பில் அமிர்த தாரா மந்திரத்தை பற்றி எழுதி இருந்தேன். அந்த மந்திரம், பணத்திற்காக, செல்வத்திற்காக மட்டும் பயன்படக்கூடியது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அவனுக்கே உரிய தனி மந்திரமாகும் அது.

அதனால், அமிர்த தாரா மஹா மந்திர பயிற்சி மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தரவல்லதாக இருப்பதனால், சனி தொல்லை, ராகு-கேது தொல்லை, வேறு எந்த வகையான கிரக தோஷங்களால் வருகின்ற தொல்லைகள், தீரவே தீராத சாபங்கள், தீய சக்திகளின் பாதிப்புகள், என்று அனைத்தையும் நீக்கவல்லது.

ஒருநாளில், அரைமணி நேரம் மட்டும் ஒதுக்கி இந்த மந்திரப் பயிற்சியை செய்து பாருங்கள். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமத்து சனி, கண்டசனி என்ற அனைத்து வித பாதிப்புகளும் விலகும். கால சர்ப்ப தோஷம் கூட விலகி நன்றாக வாழ்பவர்கள் நிறையப்பேரை என்னால் காட்ட முடியும்.





Contact Form

Name

Email *

Message *