Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த கிழமையில் அபிசேகம் செய்யலாம்...?




குருஜி அவர்களுக்கு, வணக்கம். எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவைகள் தீர்வதற்கு கோவில்களில் அபிஷேகம் தொடர்ந்து எழு நாட்கள் செய்யவேண்டும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கருத்து படி குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்கின்ற நாட்களில் பல குளறுபடிகள் இருக்கிறது. அதாவது, ஒரு தெய்வத்திற்கு ஒரு கிழமையை ஜோதிடர் சொன்னால், வேறொரு ஜோதிடர் வேறு கிழமையை சொல்கிறார். இதனால் எங்களுக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் தவிப்பாக இருக்கிறது. எனவே தாங்கள், எந்த தெய்வத்திற்கு எந்த கிழமையில் அபிஷேகம் செய்யவேண்டும் என்ற விவரங்களை தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
மலர்கொடி,
சென்னை.



விநாயகருக்கு ஞாயிற்றுக் கிழமையும், சிவனுக்கு திங்கள் கிழமையும், முருகனுக்கு செவ்வாய் கிழமையும், மகா விஷ்ணுவிற்கு புதன் கிழமையும், தக்ஷ்ணாமூர்த்தி மற்றும் மகான் ஸ்ரீ இராகவேந்திரர் போன்ற குருமார்களுக்கு வியாழக்கிழமையும், அம்மன் உட்பட பெண் தெய்வங்களுக்கு வெள்ளிக் கிழமையும் ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார கடவுள்களுக்கும் ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமையும், விநாயகருக்கு செய்வது போன்று நவகிரகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் அபிஷேகம் செய்யவேண்டும் என்று, பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுவது, நமது மன சுத்திக்கும் ஆத்ம சுத்திக்கும் சிறந்த வழியாகும். இறைவனின் திருமேனியில் குளிர்விக்கும் அபிஷேக பொருள் சேரும் போது, கொதிகலன் போல் கொதித்து கொண்டிருக்கும் நமது வாழ்க்கை பிரச்சனை, குளிர்ச்சி அடையும் என்பதே அபிஷேகத்தின் உண்மை நோக்கமாகும்.





Contact Form

Name

Email *

Message *