Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தையின் நோய் தீர்க்கும் மந்திரம் !



குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனது தெருவில் நிறைய குழந்தைகளுக்கு வருகிற சிறிய நோய்களை திருஷ்டி பரிகாரம் போன்றவைகள் செய்து முடிந்தவரை சரியாக்கி வருகிறேன் அதை இன்னும் அழுத்தமான முறையில் செய்திட விரும்புகிறேன் அதற்காக ஏதாவது மந்திரம் அல்லது சுலோகம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். பல குழந்தைகளுக்கு சேவை செய்த புண்ணியம் எனக்கு கிடைக்க துணை செய்யுங்கள் 

இப்படிக்கு, 
ஸ்ரீ வித்யா, 
கோபிச்செட்டிபாளையம். 



குழந்தைகளுக்கு சேவை செய்வதும், பகவானுக்கு கைங்கரியம் பண்ணுவதும் ஒன்று என்று பெரியவர்கள் கூறுவார்கள், காரணம், குழந்தைகளும் களங்கம் இல்லாதவர்கள். சுவாமியும் களங்கம் இல்லாதவன். இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. குழந்தைகள் மனித ஜென்மம் என்பதனால் அவர்களுக்கு நோய்கள் வரும். பெருமாளுக்கு அது இல்லை. எனவே, 

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷாத் 
நஸ்யந்தி ஸகலா ரோஹா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் 

    என்ற ஸ்லோகத்தை மஞ்சளின் மீது, வலது கை கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வைத்து ,ஐம்பத்து நான்குமுறை ஜெபம் செய்து குழந்தையின் மார்பிலும், முதுகிலும் நெற்றியிலும் இட்டு வந்தால் நிச்சயம் சிறிய நோய்கள் உடனடியாக விலகும். 








Contact Form

Name

Email *

Message *