Store
  Store
  Store
  Store
  Store
  Store

தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை


    னது நண்பர் ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் நல்ல அனுபவம் உண்டு.  தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரம் ஒன்றில் பத்து வருட காலமாக ஹோட்டல் நடத்தியும் வந்தார்.  அவருக்கு திடிரென்று ஒரு ஆசை.  சிறிய அளவிலாவது சென்னையில் ஓட்டல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.  நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது.  தனது கையில் இருந்த காசு போதாது என்று சொந்தமான தோட்டம் ஒன்றை விற்றார்.  அப்படியும் குறைந்த பணத்திற்கு மனைவி மக்களுடைய நகைகளை விற்று சென்னையில் ஜன நடமாட்டமுடைய முக்கிய வீதியில் தொழிலையும் ஆரம்பித்து விட்டார்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு வியாபாரம் நல்ல நிலையிலேயே நடந்தது.  பிறகு நாள் ஆக ஆக குறைய ஆரம்பித்து விட்டது.  சில நாட்களில் தயார் செய்த உணவு பொருட்களை கீழே கொட்ட வேண்டிய நிலையும் உருவாகிவிட்டது.  ஒரு வேளை உணவு தரமில்லாமலோ, சுவையில்லாமலோ இருக்குமோ என்று யோசித்தார்.  சோதித்து பார்த்ததில் அப்படியொரு குறையும் இல்லை.  இந்த ஓட்டலில் அருகிலுள்ள மற்ற ஓட்டல்களில் சுவையும் தரமும் குறைவாக இருந்த போதும் கூட அங்கு வியாபாரம் விறு விறு என்று நடந்து கொண்டிருந்தது.  தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல்.  பல நேரம் கஷ்டப்பட்டார்.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சென்னை மீது கொண்ட மோகத்தால் சொந்த ஊர் வியாபாரத்தையும் கெடுத்து விட்டோமே என்று வருத்தப்பட்டார்.  ஊரில் இவரது மனைவி பல ஜோதிடர்களிடம் சென்று ஆலோசனை கேட்டு ஆறுதல் சொன்னாரே தவிர அனுபவத்தில் எந்த நன்மையும் அவரால் அடைய முடியவில்லை.  இவரும் தனக்கு தெரிந்த எல்லா வகையிலும் முட்டி மோதி பார்த்தார்.  ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

 நிலைமை நாளுக்கு நாள் விபரீதமாகி கொண்டிருந்ததே தவிர துளியளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  ஓட்டல் வைத்திருக்கின்ற இடம் வாஸ்துபடி சரியாக இருக்காதோ என்ற சந்தேகத்தில் சிலரை அனுகி ஆலோசனை பெற்று அவர்கள் சொல்படியும் செய்தார்.  அதன் பிறகு நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.  விட்டு போன நம்பிக்கை துளிர்விடவே மிக கடுமையாக உழைத்து நிலைமையை சரிசெய்து விடலாம் என்ற சூழல் வந்த போது வேலைகாரர்கள் சரிவர அமையாமல் கஷ்டம் வேறு வடிவத்தில் தாக்கியிருக்கிறது.


  மளிகை கடை, காய்கறிகடை மற்ற எந்த கடையாக இருந்தாலும் அடிக்கடி தொழிலாளிகள் மாறினால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.  ஓரளவு சமாளித்துவிடலாம்.  ஆனால் ஓட்டல் தொழிலை பொறுத்த வரை சிறிது காலத்திற்காவது நிரந்தர தொழிலாளிகள் வேண்டும்.  காரணம் ஒரு நாள் ஒரு சமையல்காரன்.  மறுநாள் வேறொரு சமையல்காரன் என்றால் சமைக்கும் முறையில் மாறுதல் ஏற்பட்டு சுவையும் தரமும் வாடிக்ககையாளர் எதிர்ப்பார்ப்பது போல் இருக்காது.

இன்றைய ஓட்டல்களை பற்றி மிக முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும்.  பல பெரிய ஓட்டல்களில் தமிழ்நாடு முழுவதும் சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல் செய்கிறார்கள்.  இது எப்படித்தான் சாத்தியமாகிறதோ தெரியவில்லை.  ஒரு நாள் மட்டும் தான் ஓட்டல் சாப்பாடு என்றால் சமாளித்து விடலாம்.  பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடும் போது சலிப்பு தட்டுவது மட்டுமல்ல நாக்கிலுள்ள சுவை நரம்புகளே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விடுகிறது.

 அப்படி என்ன தான் ஓட்டல் சாதத்தில் கலப்பார்களோ தெரியவில்லை.  வெள்ளை வெளேரென்று ஊசி மாதிரி சாதம் விரைத்து கொண்டு நிற்கிறது.  இரண்டு பிடி வாயில் வைத்தாலே வயிறு நிரம்பியது போல் உப்பி விடுகிறது.  எழுந்து கை கழுவதற்குள் மீண்டும் பசிக்கிறது. இந்த சாதத்தையே மாத கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றில் அல்சர் மட்டுமல்ல குடல் புற்று நோயே வந்தாலும் வந்துவிடும்.  அந்தளவிற்கு மோசமாக உள்ளது  


பெரிய ஓட்டல்களின் நிலைமை இப்படியென்றால் சிறிய ஓட்டல்களை பற்றி கேட்க வேண்டாம்.  எத்தனை முறையோ அடுப்பில் ஏற்றி இறக்கிய எண்ணெயில் தான் சமையலே செய்கிறார்கள்.  பொரியல் என்ற பெயரில் வைக்கும் முட்டைகோஸ், உருளைகிழங்கு போன்றவைகளில் அழுகிய நாற்றம் பச்சையாகவே வீசுகிறது.  இது தமிழ் நாடு முழுவதும் இருக்கின்ற ஓட்டல்களின் சாபக்கேடு.  மற்ற மாநிலங்களை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.  ஏறக்குறைய இப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஓரளவேணும் நிரந்தர தொழிலாளிகள் அமைந்து விட்டால் பொருட்களின் சுவையை சற்றேணும் நிலை நிறுத்தலாம் என்று ஓட்டல் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.  வீடுகளில் விளம்பரம் இல்லாமல் நடைபெற்று கொண்டு இருக்கின்ற மெஸ்கள் ஓரளவு சுவையுடையதாக இருப்பதற்கு காரணமும் இது தான்.

 நமது நண்பரும் தொழிலாளர்கள் சரிவர அமையாத பல இடர்பாடுகள் உருவானவுடன் மீண்டும் கலங்கி போய்விட்டார்.  ஆனாலும் தொழில் மீது அவர் கொண்டுள்ள வெறி அடங்கவே இல்லை.  வெற்றி பெறும் வரை போராடுவது என முடிவு செய்துவிட்டார்.  ஒரு வேளைக்கு குறிப்பிட்ட தொழிலாளி வராத போது அதை தானே செய்ய துவங்கினார்.  அப்படியும் சிரமம் ஏற்பட்ட போது ஊரிலிருந்து குடும்பத்தினரை வரவழைத்து வேலையை செய்ய சொன்னார். 


சமையல் வேலையிலிருந்து சப்ளையர் வேலை வரை அவர்களே செய்தனர்.  இந்த நிலையில் தான் வியாபாரத்திற்கு நிறைய வாடிக்கையாளர்களை வரவழைக்கும் வசிய அஞ்ஞனத்ததை கேள்விப்பட்டு இருக்கிறார்.  அது சம்பந்தமாக என்னிடம் பேசவும் செய்தார்.

அவரை நேரில் வரச்சொல்லி என்னிடம் இருந்த அந்த அஞ்ஞனத்ததை கொடுத்து அனுப்பினேன்.  சந்தோஷத்தோடு வாங்கி சென்ற அவர் ஐந்து மாதம் கழித்து அதை விட பன்மடங்கு சந்தோஷத்தோடு வந்தார்.  ஆரம்பித்த போது வியாபாரம் எப்படி சுறுசுறுப்பாக நடந்ததோ அதே போல இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது.  மேலும் அடிக்கடி ஓடிப்போன வேலைக்காரர்கள் இப்போது அப்படி செய்வதில்லை.  அப்படியே வேலை வேண்டாம் என போவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் பத்து நாளுக்கு முன்பு சொல்லி விடுவதினால் சமாளித்து கொள்ள முடிகிறது என்று சொன்னார்.  எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நமது முன்னோர்கள் கடைபிடித்த பல விஷயங்கள் இன்றைய வாழ்க்கையில் கூட நல்ல பலனை தருகிறதே என்பதை எண்ணி பார்க்கும் போது அவர்களின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

 இந்த தொழில் வசிய அஞ்ஞனத்தில் வாடிக்கையாளர்களை மட்டும் வசிகரம் செய்யலாம் என்பது அல்ல.  வியாபாரத்தில் ஏற்படும் சின்ன சின்ன இடஞ்சல்கள், திருட்டுகள் போன்றவற்றையும் நீக்கி கொள்ளலாம்.  அதே நேரம் யாரிடமும் நாம் ஏமாந்து போகாமல் ஏமாற்றுகாரர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளும், விழிப்புணர்வையும் பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளையும் நாம் உணர்ந்து தப்பி கொள்ள இந்த அஞ்ஞனம் உதவி செய்கிறது.

 இதை செய்வதற்கு பல அரிதான மூலிகைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதினால் செலவு சற்று அதிகமே தவிர மற்றப்படி பலன் என்னவோ சர்வ நிச்சயமானது.  இந்த அஞ்ஞனம் செய்யும் முறையை திருவநனந்தபுரம் நாராயண பணிக்கரிடம் நான் கற்றுக் கொண்டேன்.  அவருடைய கட்டளைப்படி செய்யும் முறையை பகிரங்கமாக எழுத கூடாது என்பதினால் தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டால் சொல்லித்தர கடமைப்பட்டுள்ளேன்.


 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434



Contact Form

Name

Email *

Message *