Store
  Store
  Store
  Store
  Store
  Store

கை மேல் பலனை பெறலாம்


 பெண்கள் திங்கள் கிழமையும் வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்கிறார்களே அந்த கிழமைகள் எந்த வகையில் விரதங்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்று பலருக்கும் கேட்க தோன்றும்

   விரதங்கள் போன்ற வழிபாட்டை வெள்ளிக்கிழமைகளில் செய்வது நல்லது என நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

  வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக திங்கள் கிழமை சொல்லப்படுகிறது.

   மாங்கல்ய சௌபாக்கியம்.  சந்தான விருத்தி பெற விரும்புவர்கள் சோம வார விரதம் என்ற திங்கள் கிழமை விரதத்தை மேற்கொள்வது மரபு.


   இந்த நாளில் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் பிராத்தனை செய்தால் எண்ணங்கள் நிறைவேறும் என சாஸ்திரம் சொல்வதற்கு ஜோதிட ரீதிலான காரணங்கள் உண்டு.

  திங்கள் கிழமை சந்திரனுக்கு உரிய நாள்.  சந்திரனின் கதிர் வீச்சு மனிதர்களின் மனோ நிலையை கட்டுப்படுத்துகிறது. 

  பிள்ளைகளின் புத்தி கெடாமலும் ஆபத்தான காரியங்களின் குடும்பத்தலைவரின் மனம் செல்லாமலும் இருக்க அன்றைய நாளில் பிராத்தனை செய்தால் கை மேல் பலனை பெறலாம்.

  சுக்ரனின் ஆதிக்கத்தில் உள்ள வெள்ளிக் கிழமை மனிதர்களின் இந்திரிய வேகத்தை சமப்படுத்துவது ஆகும்.  


   ஆண்களை பொறுத்த வரை அதிகமான  இந்திரிய வெளியேற்றமே பல நோய்களுக்கான வாசல் கதவை திறக்கிறது. 

  எனவே உடலும் மனமும் ஒரு நிலைபட வெள்ளிக் கிழமை சிறப்பானது.

  இந்த விரதங்களை பெண்கள் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது என்றால் பெண்களுக்கு தான் குடும்ப பாசம் அதிகம்.

  தங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்காக மன ஒரு நிலைப்பாட்டுடன் சுய நலம் இல்லாமல் அவர்களாலேயே பிராத்தனை செய்ய முடியும்.


 

Contact Form

Name

Email *

Message *