Store
  Store
  Store
  Store
  Store
  Store

யார் சாக மாட்டார்கள்...?

   ட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான்

 மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான்

  பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள்

 இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா?

சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது பொருளாகும்


  நமது புராணங்கள் அசுவாத்தாமன் மகாபலி, வியாசர், அனுமான், வீபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன்  மார்க்காண்டேயன் ஆகியோரை சிரஞ்சீவிகள் என்று சொல்கின்றன.

 மரணம் இல்லாத இவர்கள் இப்போதும் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

 ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை. 

 சாதாரண மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள். 

   துரோணன் குமரரான அசுவாத்தாமனை மராட்டிய மாநிலத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பார்த்திருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள்.


  அவர்களின் கூற்றில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதை ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  மனித உடலோடு பல காலம் வாழலாம் என கூறுகின்ற ஹடயோகம் கூட சில நூறு வருடங்கள் மட்டுமே மனித சரீரம் தாக்கு பிடிக்கும் என கூறுகிறது.

 நிலைமை அப்படியிருக்க பல யுகங்களாக ஒரு மனிதன் வாழ்கிறான் என்பதை நம்புவது மிகவும் கடினம். 

   இமயமலையில் உள்ள அமர்நாத் பனி குகையில் ஒரு ஜோடி புறா வாழ்ந்து வருகிறது.

 பார்வதிக்கு பரமேஸ்வரன் முடிவில்லாத ஆயுளுடன் வாழும் கலையை கற்ப்பித்த போது அருகிலிருந்த இப்புறாக்கள் அதை கற்றுக் கொண்டு இன்று வரை வாழ்வதாக பலர் சொல்கிறார்கள். 


  பனி குகையில் காணப்படும் அந்த புறாக்கள் நிரந்தரமாக அங்கு தங்குவதில்லை.

  சில காலத்திற்கு எங்கேயோ சென்று விடுகிறது.  அப்படி சென்று திரும்பி வரும் புறா அதே ஜோடி தானா என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 ஆனால் ஒரு அதிசயம்.  அமர்நாத் பிராந்தியத்தில் அந்த ஒரு  ஜோடி புறாவை தவிர வேறு எந்த புறாவும் காணப்படுவதில்லை. 

  ஆக மரணமில்லாத வாழ்வு என்பது இன்று வரை நல்ல சுகமான கற்பனை.

  ஆனால் நமது இந்து மதம் மரணமில்லாத வாழ்வு என்று உடலை மையமாக வைத்து பேசவில்லை.

  ஒரு மனிதனின் இருப்பை சரீர இருப்பு என்றும், ஆத்ம இருப்பு என்றும் இரண்டு வகையாக பிரிக்கிறது.

  சரீர இருப்பு என்பது மாறி கொண்டே இருப்பது, அழியக் கூடியது.  ஆத்மாவின் இருப்பை நிலையானது என்றும், அழியாதது என்றும் சொல்லப்படுகிறது.


  எவ்வளவு பெரிய ஞானியானாலும், யோகியானாலும் ஒரு காலத்தில் மரணம் ஏற்ப்படுகிறது

   சாதாரண மனித கண்களுக்கு மரணமாக தென்படுவது ஞானிகளுக்கு முத்தியாக தெரிகிறது

    காரணம் உடலை நிலையாக வைக்கும் அளவிற்கு அதன் மீது பற்று ஏற்படுகிறது.

     பற்றை நீக்குதல் தான் ஆத்ம வாழ்வின் மிக முக்கிய குறிக்கோளாகும்.

        உடல் எடுக்காமல் பிறவியில்லாமல் இருக்கும் முக்தி நிலை தான் ஞானிகளின் ஒரு வேட்கை.

     பிறவியே இல்லாத போது இறப்பு எப்படி வரும்?

     பிறவாத முக்தி நிலை தான் இந்து மதம் கூறும் இறவாத நிலை சிரஞ்சீவி தத்துவம்.

   அப்படியென்றால் அனுமான், அசுவாத்தாமன் போன்றோர்களை சிரஞ்சீவி என்பது பொய்யா?

   நிச்சயமாக இல்லை.  வியாசர், கிருபாச்சாரியார் உட்பட சிரஞ்சீவி அனைவருமே தங்களது செயற்கரிய வாழ்க்கை முறையில் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

  இரண்டாரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள்.  இல்லவே இல்லை.

  தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

  ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும்.



Contact Form

Name

Email *

Message *