Store
  Store
  Store
  Store
  Store
  Store

கணவனை இழந்தவள் கெட்ட சகுனமா...?


  • குன சாஸ்திரம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பதினால் நன்மைகள் உண்டா? சில சகுன முறைகள் மற்றவர்களின் மனதை கஷ்டபடுத்துவது போல் இருக்கிறதே அத்தகைய சகுனங்களை பார்ப்பது ஏற்புடையதா? அல்லது அத்தகைய சகுனங்கள் சரியனைவைகள் தானா?

ராஜகுரு, ஸ்ரீலங்கா



      குனங்களை பற்றி மிக தவறுதலான புரிந்துணர்வே நம் மக்கள் மத்தியில் நிலவுகிறது அதற்கு காரணம் சில சகுனங்கள் நன்மை என்றும் சில சகுனங்கள் தீமை என்றும் சொல்லப்படுகிறதே தவிர எதற்காக அது நன்மை எதற்காக அது தீமை தருகிறது என்று காரண காரிய விளக்கங்கள் எதுவும் சொல்லப்படுவது இல்லை

மனிதனுடைய அறிவு ஒரு செயலை செய்யாதே என்று தடை வருகின்ற போது அதை ஏன் செய்ய கூடாது என்று கேள்வி கேட்கும் அதாவது சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர வேளையில் கிணறு வெட்டக்கூடாது என்று சொன்னால் ஏன் வெட்டக்கூடாது வெட்டினால் என்ன என்ற கேள்வியை அறிவு கேட்கும் அப்படி கேட்பதை யாரும் தவறு என்றோ அதிக பிரசங்கி தனம் என்றோ சொல்ல முடியாது

சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் ஈரப்பதம் இல்லாமல் மண் இறுகி போய்விடும் நிலத்தடி நீர் மிகவும் கீழே இறங்கி விடும் அதனால் அந்த நேரத்தில் கிணறு தோண்டப்படும் போது மிகவும் கடினமான வேலையாகவும் இருக்கும் நீர் ஊற்று கிடைக்காமலும் போய்விடும் என்று விளக்கம் சொல்ல வேண்டியது சித்திரை மாதத்தில் கிணறு தோண்ட கூடாது என்று சாஸ்திர வகுத்தவர்களின் கடைமையாகும்

நமது இந்திய சாஸ்திரங்கள் அனைத்துமே அனுபவங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாக கொண்டவைகள் ஆகும் உதாரணமாக மாலை நேரத்தில் வீடு வாசல் பெருக்கி தெளித்து எல்லாபுறத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது அப்படி வைத்தால் மாகலக்ஷ்மியானவள் வீட்டுக்கு வருகை தருவாள் வீட்டை வறுமை அணுகாமல் பாதுகாப்பாள் என்றும் சொல்லப்படுகிறது இதன் உண்மை என்ன ?

மாலை நேர காற்று தெற்கு பக்கமாக இருந்து வீசும் தெற்கு திசையில் இருந்து வருகின்ற காற்று என்பதனால் தான் அது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது அந்த தென்றல் காற்று வீட்டு முன்புறமாகவோ பின்புறமாகவோ அல்லது வேறு எந்த வழியாகவோ வீட்டிற்குள் வரவேண்டும் தென்றல் வீட்டுக்குள் வருவதனால் காலையில் இருந்து மாலை வரை உருவான வெப்பக்காற்று வெளியேறும் ஒரு புத்துணர்ச்சியான இனிய சூழ்நிலை வீட்டிற்குள் நிலவும் அப்போது அங்கே வசிக்கும் மனிதர்களின் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெரும் நற்காரியங்களை சிந்திக்கும் நற்க்காரியங்க்களை செயல்படுத்தும் நல்லதை மட்டுமே ஒரு மனிதன் செய்யும் போது அவனிடம் மகாலட்சுமி வராமல் வேறு எங்கு போவாள் !

ஆனால் இப்படி சில நடைமுறைகளுக்கு விளக்கம் சொன்ன நமது சாஸ்திர வல்லுனர்கள் சகுன சாஸ்திரத்திற்கு சரியான விளக்கங்கள் சொல்லாமல் போனது நமது துரதிஸ்டமே ஆகும் வல்லுனர்கள் சொல்லவில்லையே தவிர சகுன சாஸ்திரத்தில் பல இடங்களில் இலைமறை காயாக காரண காரியங்களை விளக்கி இருக்கிறார்கள்

உதாரணமாக கணவனை இழந்த மாது எதிரே வந்தால் நாம் போகும் காரியம் வெற்றி பெறாது என்று சகுன சாஸ்திரம் சொல்கிறது இதனுடைய உள்ளர்த்தம் என்வென்று தெரியாத சிலர் உடும்பு பிடியாக அதை பிடித்து கொண்டு எதிரே வருகின்ற விதவை பெண்ணை மனம் போன போக்கில் ஏசியும் பேசியும் விடுகிறார்கள் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில பகுத்தறிவு மாக புத்திசாலிகள் இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்துமே மனிதாபிமானம் அற்றவைகள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்

உண்மையில் சகுன சாஸ்திரம் விதைகள் எதிர்படுவது கெடுதிஎன்று சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை அதை நம்புவர்கள் கூட அதற்கு சரியான விளக்கங்களை தருவது கிடையாது காரணம் அப்படி ஒரு விளக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது

ஒரு பெண் கணவனை இழக்கிறாள் என்றால் அவள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது மிக பாதகமான நிலையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் அவள் கணவனை இழந்து வாழும் பரிதாப நிலை ஏற்படும் ராகு கேதுக்கள் பாதகமான நிலையில் யார் ஜாதகத்தில் இருக்கிறதோ அவர்களிடம் இருந்து அந்த கிரகத்தின் தீய கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படி வெளிப்படும் நுண்ணிய அதிர்வலைகள் எதிர்படுகின்ற மனிதர்களின் புருவ மத்தி வழியாக உட்புகுந்து மூளையில் தாமச அதிர்வலைகளை அதாவது மந்தமான மன நிலையை ஏற்படுத்தும் மனமது செம்மை இல்லாத போது செய்யப்படுகின்ற காரியங்கள் எதுவும் சரிபட்டு வராது என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை

அதே போல வேலையாக போகும் போது எறுமை மாடு எதிர்பட கூடாது என்று சொல்வார்கள் இது எறுமை எமனுடைய வாகனம் என்பதற்காக சொல்லப்பட்டது அல்ல எறுமை என்பது மந்தமான இயல்புடையது சனிகிரகத்தின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டது அதனால் தான் சனிக்கு மந்தன் என்று ஒரு பெயரே வைக்கப்பட்டுள்ளது எறுமையிடம் இருந்து மிக சுலபமாக மனிதர்களை சனியின் தன்மை தொற்றிக்கொள்ளும் இந்த விதி எறுமையை எதோ ஒரு சமயத்தில் எதிர் கொள்பவர்க்கு பொருந்துமே தவிர எறுமையோடு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பொருந்தாது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்

இப்படி ஒவ்வவொரு சமுகத்திலும் ஏராளமான நுணுக்கங்கள் நிறைந்த காரணங்கள் உண்டு அவைகளை தேடிப்பார்த்து சேகரித்து கொண்டால் எதிர்க்கால தலைமுறையினற்கு பயனுடையதாக இருக்கும் நமது இந்திய் பொக்கிஷங்கள் மறைந்து போகாமலும் இருக்கும்.


Contact Form

Name

Email *

Message *