Store
  Store
  Store
  Store
  Store
  Store

அச்சம் என்பதே குருடு !


  • யா எனது ஜாதகப்படி எனக்கு கண்களில் நோய் வரும் என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார் என் கண்கள் இப்போது நன்றாகவே இருக்கிறது எந்த தொல்லையும் கொடுக்கவில்லை ஆனாலும் அவர் அப்படி சொன்னதிலிருந்து எனக்கு பயமாக இருக்கிறது உண்மையாக என் கண் நோய்வாய் படுமா அதற்கு எதாவது பரிகாரங்கள் உண்டா.

சுரேஷ்.பாண்டி 



   பொதுவாக நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் மனிதர்களின் கண்களை குறிக்கும் கிரகங்களாகும் இவை இரண்டும் அமைகின்ற விதத்தை பொருத்தும் சனி மற்றும் இராகு இவைகளோடு கொள்கின்ற இணைப்பை வைத்தும் ஒரு வருக்கு ஏற்படும் கண் சம்பந்தமான நோய்களை கணித்து விடலாம் 


உங்கள் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் சனி இருக்கிறது இதனாலேயே உங்கள் கண்கள் பொதுவாக எப்போதுமே கலங்கி இருப்பதான தோற்றத்தோடு காணப்படும் 2014 ஆம் வருடம் பிறக்கும் போது உங்கள் கண்களில் நோய் தொற்று ஏற்படும் அதை மிக சுலபமாக சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம் பெரிய அபாயங்கள் எதுவும் இல்லை கண்ணாடி போடக்கூடிய சூழல் மட்டும் தான் வரும் அச்சத்தை விடுங்கள் காரணம் அச்சம் என்பது தான் குருடே தவிர மற்றது குருடு அல்ல.

Contact Form

Name

Email *

Message *