Store
  Store
  Store
  Store
  Store
  Store

கிறிஸ்தவர்கள் திருடும் இந்து சடங்குகள் !


   திரிகளை வீழ்த்துவதற்கு இரண்டு வழிகள் உண்டு முதலாவது நேருக்கு நேராக நின்று தாக்குதல் நடத்தி எதிரி என்று ஒருவன் இருந்தான் என்ற சுவடேயே அழித்துவிடுவது அடுத்ததாக நேரடி தாக்குதலுக்கு சக்தி இல்லாத போது தோள்மீது கைபோட்டு நயவஞ்சக வார்த்தைகள் பேசி கபட வேடமாடி துரோக வழியில் எதிரியை பூண்டற்று போகவைப்பது

நேர்முக தாக்குதலுக்கு பலமில்லாமல் கவடவேடம் தரிப்பவர்களை பச்சோந்தி என்று பொதுவாக அழைப்பார்கள் பச்சை நிற இலையில் இருந்தால் பச்சைவண்ணமாகவும் பழுப்பு நிற சறுகில் கிடந்தால் பழுப்பு நிறமாகவும் பச்சோந்தி மாறுவதற்கு தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்கே தவிர துரோகம் செய்வதற்கு அல்ல எனவே நட்பு பாராட்டி கழுத்தை நெரிக்கும் நயவஞ்சக கூட்டத்தாரை பச்சோந்தி என்று அழைப்பது முறையாகாது என்று சிலர் எண்ணக்கூடும் ஆனால் அது தவறு காரணம் தன்னை காத்துகொல்வதற்கு மட்டுமல்ல இறையைபிடித்து உண்டு உடல் வளர்ப்பதற்காகவும் பச்சோந்தி நிறமாறுவதுண்டு


பச்சோந்தி போல சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை வளப்படுத்தி கொள்ள கபட நாடகம் ஆடுவார்கள் அதை கூட மனிதனின் சின்ன புத்தி என்று மன்னித்து விடலாம் ஆனால் மக்களை நல்வழி படுத்துவதற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மறுவுலக வாழ்வில் மலர்ச்சி ஏற்படுவதற்காகவும் தோன்றியதாக சொல்லிக்கொள்ளும் சில மதங்கள் அல்லது அந்த மதத்தின் போர்வையில் சில மத குருமார்கள் நடத்துகின்ற நாடகத்தை மன்னிக்கவே முடியாது

ஏசுவை நம்புங்கள் அவர் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்லும் வல்லமை படைத்தவர் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதை ஒருவகையில் யாரும் குறைசொல்ல முடியாது என் கடையில் விற்கும் பொருட்கள் மட்டுமே உயர்தரமானது மற்றவைகள் மட்டமானவைகள் என்று ஒரு வியாபாரிக்கு தனது பொருளை சந்தை படுத்த உரிமை இருப்பது போல இதையும் விட்டு விடலாம் ஆனால் காலகாலமாக மக்கள் பயன் படுத்தும் ஒரு பொருளை போலவே போலியாக ஒன்றை செய்து அதை விற்பனைக்கு எந்த வியாபாரி கொண்டு வந்தாலும் அதை வர்த்தகம் என்று எடுத்துக்கொள்ள முடியாது போலி என்றும் ஏமாற்று வேலை என்றும் வேண்டுமானால் அழைக்கலாம் 


 இதை நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது நமது இந்தியாவில் சில நூறு வருடங்களாக கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் கடைபிடிக்க பட்டு வருகிறது ஐரோப்பா கண்டத்தை ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை கிறிஸ்தவ மயமாக்கி விட்டதை போல இந்தியாவில் செய்ய முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உண்டு ஒன்று இந்து மதத்தின் ஆழ்ந்த தத்துவங்களுக்கு முன்னால் கிறிஸ்தவ உபதேசங்கள் வெற்று வார்த்தைகள் மட்டுமே என்பது மற்றொன்று இந்து மதத்தின் சாஸ்திர சம்பிராதயங்கள் மக்களின் வாழ்வோடு பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக பதிந்து போனது ஆகும்

இந்து தத்துவங்களோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதற்காக இந்து மத நடைமுறைகளை கிறிஸ்தவ மயமாக்க இன்று திட்டமிட்டு பல காரியங்கள் நடந்துவருகிறது இதை தான் நான் பச்சோந்தி தனமென்றும் கபட நாடகமென்றும் சொல்கிறேன் எதை வைத்து இப்படி சொல்லவருகிறாய் என்று சிலர் கேட்பது என் காதுகளில் விழுகிறது


 பாரத திருநாட்டில் காவி நிறம் என்பது இந்துக்களை குறிப்பது விரத காலத்திலும் சன்யாச காலத்திலும் இந்துக்கள் அணிவது என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இன்று கிறிஸ்தவ பிரசங்கிகள் பலர் காவி ஆடை அணிகிறார்கள் இந்துக்களுக்கே உரித்தான துளசி மாலைகளையும் ருத்தாரச்ச மணிகளையும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள் பழனிக்கும் திருமலைக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செய்வது போல வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ ஸ்தலங்களுக்கும் கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை போகிறார்கள் அப்படி போவது அவர்கள் விருப்பம் என்பது ஒருபுறம் என்றாலும் அப்போது அவர்கள் பயன்படுத்தும் காவி ஆடை என்பது முழுக்க முழுக்க இந்துமதத்தை தனதாக்கி கொள்ளும் பெராசையாகும்

இந்து ஆலையங்களில் திருவிளக்கு வழிபாடு நிலவிளக்கு வழிபாடு என்பவைகள் தொன்று தொட்டு நடந்து வருவதை சிறிய குழந்தை கூட அறியும் இந்து பெண்கள் இத்தகைய வழிபாடுகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஏனென்றால் ஜோதி வடிவாக இருக்கும் அன்னையை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்ப இருட்டுகள் மறைந்து விடும் என்பது அவர்களது நம்ப்பிக்கை


 இதை திருவிளக்கு வழிபாட்டை பல சிரியன் கிறிஸ்தவ சபைகள் இன்று நடத்துகின்றன ஒவ்வொரு சிரியன் கிறிஸ்தவ வீட்டில் இந்த விளக்கு வழிபாடு தினசரி நடத்த சொல்லி மத பிரச்சாரர்கள் வலியுருத்திகிறார்கள் இதற்கென்றே கிறிஸ்தவ மயமாக்க பட்ட குத்துவிளக்குகள் கடைகளில் விற்பனையாகின்றன நம் வீட்டில் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் குத்துவிளக்குகளை நன்கறிவோம் அவற்றின் மேல்பகுதியில் ஓம் என்ற எழுத்தோ அல்லது சிவ வைஷ்ணவ சின்னங்களோ இருக்கும் ஆனால் கிறிஸ்தவர்கள் அந்த சின்னத்தை மட்டும் எடுத்துவிட்டு அதில் சிலுவையை வைத்து விடுகிறார்கள்

பல கத்தோலிக்க தேவாலையங்களில் அல்லது குருசடி என்று அழைக்கப்படும் புனிதர்களின் வழிபாட்டு கூடங்களில் இந்து மத சடங்குகள் போல் சிகை நீக்கி காது குத்துதல் கிடா வெட்டி சோறு போடுதல் போன்றவைகள் சர்வ சாதரணமாக நடக்கிறது இப்படி பட்ட வழிபாட்டு விருந்துகளை அசனம் என்ற பெயரில் அவர்கள் அழைக்கிறார்கள் கேரளாவில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களில் குத்து விளக்கு ஏற்றப்படுவது கட்டாயமாகவே இருக்கிறது


 பொதுவாக நமது குழந்தைகளை விஜய தசமி அன்று பாடசாலைக்கு அனுப்புவது நம் தாத்தா முப்பாட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது ஆசிரியரின் மடி மீது குழந்தையை உட்கார வைத்து நெல் மீது ஹரி ஓம் என்று எழுதவைத்து கல்வியை ஆரம்பிப்பது நமது வழக்கம் இதே மரபை கேரளாவில் உள்ள பல கிறிஸ்தவர்கள் தமது தேவாலயங்களில் நடத்த துவங்கி விட்டார்கள் அவர்களும் விஜய தசமி அன்று குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் சடங்கை செய்கிறார்கள்

முன்பெல்லாம் அயல்நாட்டிலிருந்து பெறுகின்ற பணத்தை வைத்து நடத்துகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு கருணை இல்லம் என்கின்ற மாதிரியான பெயர்களை வைப்பார்கள் ஆனால் இப்போது காலம் மலையேறி விட்டது கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இந்து மதத்திற்கே உரிய ஆசிரமம் என்ற வடமொழி பெயரை சூட்டி கொள்கிறார்கள் இதை விட ஒருபடி மேலே போய் இந்து மத வேதங்களான சதுர்மறையில் ஏசுவின் மறுவருகையை பற்றி குறிப்பு இருக்கிறது ஏசு தான் ஒரே தேவ குமாரன் என்று சொல்லபட்டிருக்கிறது என்றெல்லாம் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள் 


நிலைமை இப்படியே போனால் ஏசுதான் சிவன் ஏசுதான் பெருமாள் கன்னி மரியாள் தான் ஆதிபராசக்தி திருப்பதி கோவில் பாலன் ஏசுவின் புனித பூமி என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஏசுநாதரை ஈஸ்வரன் என்று குறிப்பிடுகிறார்கள்

நாம் நினைப்பது போல ஈஸ்வரன் என்ற வார்த்தை சிவனை மட்டுமே குறிப்பது அல்ல ஒட்டு மொத்தமான இறைவனையும் ஈஸ்வரன் என்ற வார்த்தையில் அழைக்கலாம் ஆனால் அந்த ஈஸ்வரன் என்ற வார்த்தை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது இந்து கடவுளை மட்டுமே அப்படி அழைக்க முடியும் ஆனால் அதையும் கிறிஸ்தவ பாதிரிகள் விட்டு வைக்க வில்லை தங்களுக்கே உரித்தான வார்த்தை என்பது போல் சர்வ சுகந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள் 


 சில கலாங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவை அல்லா என்று அழைத்தார்கள் அல்லா என்பது முழுமுதல் கடவுளை குறிக்கும் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை ஆனால் அதை காலகாலமாக இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் அதை மற்றவர்கள் தங்கள் கடவுளின் பெயராக பயன்படுத்தி கொள்ள எந்த உரிமையும் கிடையாது இதை நன்கு உணர்ந்த மலேயா இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பை காட்டினார்கள் கடேசியில் கிறிஸ்தவர்கள் தவறை ஒப்புக்கொள்ள வில்லை பயந்து போய் பின்வாங்கினார்கள்

ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு அப்படி பட்ட கவலை எதுவுமே கிடையாது இந்து மத கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் திருடலாம் திரித்து பொருள் சொல்லலாம் பகவத் கீதையை கூட ஏசுநாதர் தான் உபதேசம் செய்தார் என்று மேடை போட்டு பேசலாம் கேட்பதற்கு இங்கு யாரும் கிடையாது காரணம் அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு சாமரம் வீசும் ஒரு வேலைக்காரனாகத்தான் இருந்து வருகிறது மக்களுக்கும் அதை பற்றி உணர்ச்சி கிடையாது கவலை கிடையாது எது எக்கேடு கெட்டாலும் கவலையில்லை வயிறு நிறைந்தால் போதுமென்று வாய்மூடி கிடைக்கிறார்கள் 


 யாரவது கிறிஸ்தவர்கள் இந்துக்களின் சம்பிராதயங்களை திருடலாமா என்று கேட்டால் அவன் இந்த சமூகத்தில் மதவாதி பிற்போக்குவாதி அமைச்சர் சிதம்பரத்தின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் காவி தீவிரவாதி இப்படி ஆயிரம் பட்டங்கள் கட்டி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் அதனால் தான் யாரை வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் கபளீகரம் செய்யலாம் என்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் சுதந்திரமாக தமது கபட நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்

சமீபத்தில் திருவனந்தபுரம் பத்நாப சுவாமி கோவிலில் பொக்கிசங்கள் எடுக்கப்பட்டதை நாமறிவோம் அந்த பொக்கிசத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கொச்சியை சேர்ந்த ஜேக்கப் மாப்பிளசேரி என்பவர் சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்துள்ளார் யாரவது நமச்சிவாய முதலியாரோ சுந்தர பாண்டிய நாடாரோ கிறிஸ்தவ அமைப்புகளில் ஆலயங்களில் குவிகின்ற கோடிகணக்கான பணத்தை அரசாங்கம் எடுத்து கொள்ளவேண்டும் என்று நீதி மன்ற வாசலை மிதித்திருந்தால் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அமெரிக்க இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் கூட அலறி புடைத்து ஆர்பாட்டம் நடத்துவார்கள் ஆனால் இது இந்து கோவில் தானே இந்துக்களின் சொத்து தானே எப்படி போனால் என்ன அதில் நாலு காசு நமக்கு கிடைக்குமா? என்று தான் அரசியல் தலைவர்களும் பார்ப்பார்கள்

இந்துக்கள் தங்களது மத அடையாளங்களை கூட கிறிஸ்தவர்கள் விட்டு வைக்காமல் திருடுவதை இனியும் உணர மறுத்தால் மறந்தால் வீட்டு வாசலில் தலைவைத்து நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினால் உங்களது கோவணம் கூட நான்தான் தந்தேன் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை ஆமாம் போட்டு கேட்டுக்கொண்டு அடிமை வாழ்வு நடத்தவேண்டிய நிலை வரும் நான் கிறிஸ்தவர்களை ஆயுதம் கொண்டு தடுக்க சொல்லவில்லை உங்களது எதிர்ப்பை அதிர்ப்தியை உரத்த குறிலில் சொல்லுங்கள் என்று தான் சொல்கிறேன் இல்லை என்றால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தவன் கதையாக போய்விடும் ஜாக்கிரதை.



Contact Form

Name

Email *

Message *