குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு அடிக்கடி சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. சிறிய அளவில் கற்களும் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். லேசர் முறையில் அறுவைசிகிச்சை செய்தும் மீண்டும் மீண்டும் வருகிறது. மாத்திரைகளாக சாப்பிட்டு சாப்பிட்டு உடலில் வேறு சில உபாதைகளும் வருகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை அடிக்கடி பயணம் செய்வது என்வேலை பலவகையிலும் இந்த வியாதி எனக்கு பெரிய தொல்லையாக இருக்கிறது. தயவு செய்து சரியான முறையில் எனக்கு வழிகாட்டி என் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
கிருபாகரன்
கண்டி இலங்கை
சிறுநீரக தொற்றும் கற்களும் இருந்தால் அடைய கூடிய வேதனை என்னவென்று அனுபவபூர்வமாகவே எனக்கு தெரியும். அது ஏனோ தெரியவில்லை ஆங்கில வைத்திய முறை இந்த நோயை பூரணமாக விலக்கமாட்டேன் என்கிறது. தமிழ்நாட்டு வைத்தியர்களுக்கு தான் விஷயம் தெரியவில்லை என்று யோசித்தேன் ஆனால் இலங்கையிலும் இதே கதை இருப்பது தெரியும் போது தவறு வைத்தியர்களிடம் தவறு இல்லை வைத்தியத்தில் தவறு இருப்பதாக தெரிகிறது.
இந்தமாதிரியான நோய்களுக்கு உடனடி நிவாரணம் ஹோமியோபதி சிகிச்சையில் சிறந்தமுறையில் இருக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும். நல்ல ஹோமியோபதி மருத்துவரை பாருங்கள் அவர் தருகின்ற மருந்துகளை அவர் சொல்லுகிறப்படி சாப்பிட்டு வாருங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும் அந்த வியாதி நிரந்தரமாக வரக்கூடாது என்றால் நெறிஞ்சி முள்ளை சேகரித்து நன்றாக உலர்த்தி அரைத்து பவுடர் போல் ஆக்கி கொள்ளுங்கள். தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு நெருஞ்சி முள் பவுடரை நல்ல குடிதண்ணீரில் கலந்து தொடர்ந்து ஐந்து மாதங்களாவது குடித்து வாருங்கள். மிக கண்டிப்பாக நிவாரணம் அடைவீர்கள். இது அனுபவ உண்மை.
இந்தமாதிரியான நோய்களுக்கு உடனடி நிவாரணம் ஹோமியோபதி சிகிச்சையில் சிறந்தமுறையில் இருக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும். நல்ல ஹோமியோபதி மருத்துவரை பாருங்கள் அவர் தருகின்ற மருந்துகளை அவர் சொல்லுகிறப்படி சாப்பிட்டு வாருங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும் அந்த வியாதி நிரந்தரமாக வரக்கூடாது என்றால் நெறிஞ்சி முள்ளை சேகரித்து நன்றாக உலர்த்தி அரைத்து பவுடர் போல் ஆக்கி கொள்ளுங்கள். தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு நெருஞ்சி முள் பவுடரை நல்ல குடிதண்ணீரில் கலந்து தொடர்ந்து ஐந்து மாதங்களாவது குடித்து வாருங்கள். மிக கண்டிப்பாக நிவாரணம் அடைவீர்கள். இது அனுபவ உண்மை.