
இப்படிக்கு
வாசுதேவன்
குஜராத்

இது எப்படி சாத்தியமாகும் அப்பன் திருடனாக இருந்தால் மகனும் திருடனாக இருப்பானா? அப்படி கணக்கு போடுவது மனிதாபிமானம் அற்ற செயல் அல்லவா? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள தவறி விட்டார்கள் என்றே கூற வேண்டும். திருட்டு என்பது ஒரு மனிதனின் குணம் அல்ல. அது ஒரு பழக்கம் வள்ளுவனின் மகனை கடத்தி கொண்டு வந்து திருடர்கள் கூட்டத்தில் தொடர்ந்து பழகவிட்டால் அவனும் திருடனாகி விடுவான். அதற்காக வள்ளுவனின் மகனே திருடன் என்று நாம் குறை கூற இயலாது. தொடர்ச்சியான பழக்கம் ஒருவனை எதுவாகவும் மாற்றி விடும். ஆனாலும் கூட எத்தனை வருடங்கள் திருடர்கள் கூட்டத்தில் இருந்தாலும் ஒருவன் நல்ல தாய் தந்தையருக்கு பிறந்தவனாக இருந்தால் என்றாவது ஒருநாள் தான் செய்யும் திருட்டு தொழில் தவறு என்று உணருவான். அவன் மனசாட்சி அப்படி உணர வைக்கும் மனசாட்சி என்று நாம் அழைப்பதே ஒருவனின் மரபு சார்ந்த குணமாகும். அது எந்த வகையிலும் மாறாது.
விஞ்ஞானம் தற்கால பிறப்பை அடிப்படையாக கொண்டு குணங்களை கணக்கு போடுகிறது. இந்து மெய்ஞானமோ ஒருவனின் சென்ற ஜென்ம பிறப்பின் தொடர்ச்சியாகவும் அவனின் குண இயல்பை கணித்து பார்க்கிறது. கூத்து, நாடகம், நடிப்பு, பாட்டு இப்படி எந்த கலையம்சத்தோடும் சம்மந்தபடாத சாதாரண ரொட்டிக்கடை வைத்திருப்பரின் மகன் உலகமே பார்த்து வியப்படையும் நடிப்பு மேதையாக வந்திருக்கிறார் அவர் தான் சிவாஜி கணேசன் அவரிடமிருந்த நடிப்பு திறமை வம்சாவளி மூலம் வந்தது அல்ல சென்ற ஜென்மத்தின் தொடர்பின் தொடர்ச்சியாக வந்தது.
அதே போலவே இந்த கேள்வியை கேட்டிருக்கும் வாசகருக்கு சித்த வைத்தவைத்தியத்தின் மீதுள்ள ஆர்வம் பிறப்பால் வந்தது அல்ல ஜென்ம தொடர்பால் வந்ததாகும். எனவே இது ஏன் வந்தது என்பதை ஆராய்வதை விட்டு விட்டு மருத்துவ வித்தையை கற்று கொள்வதில் கவனம் செலுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்.
உதாரணமாக இவரது ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டாவது இடத்தில் சனியும் ராசிக்கு ஐந்தாவது இடத்தில் கேதுவும் அமைந்துள்ளார்கள் இப்படி பட்ட ஜாதகம் அமைந்துள்ளவர்கள் மரபு சார்ந்த வைத்திய முறையில் திறமைசாலிகளாக இருப்பார்கள். எனவே இவருக்கு கண்டிப்பாக சித்தவைத்திய கலை சித்திக்கும் என்று துணிந்து சொல்லல்லாம். பயிற்சியை முறைப்படி துவங்குங்கள் வைத்திய நாதனான எம்பெருமான் துணைவருவான்.