ஐந்துமாய் வந்த கண்ணன்
கண்ணனென்ற கடலுக்குள் குதித்தேன்
கரையேற மனமின்றி கரைந்தேன்
கண்ணனென்ற மண்ணுக்குள் புதைந்தேன்
கவிதையென்ற விருச்சமாய் முளைத்தேன்
கண்ணனென்ற மாருதத்தில் மிதந்தேன்
காலமெல்லாம் மறையாமல் நிலைத்தேன்
கண்ணனென்ற கனலுக்குள் விழுந்தேன்
கற்பகப் பூஞ்சோலையாக மலர்ந்தேன்
கண்ணனென்ற வான்வெளியில் பறந்தேன்
கண்ணனே நானென்ற தத்துவத்தை உணர்ந்தேன்