இல்லற வாழ்வில் ஆண் - பெண் இணைப்பு என்ற உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது சரியா?
இப்படிக்கு,
கிரிதரன்,
மலேசியா.
விளக்கு எரிகிறது என்றால், அதற்கு எண்ணெய் அவசியம். எண்ணெய் இல்லாமல் எந்த விளக்கும் எரியாது. இங்கு மின்சார விளக்கை மையப்படுத்தி பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு விளக்கில் பராமரிப்பு இல்லாமல் விட்டு விட்டால் அழுக்கடைந்து எண்ணெய் வற்றி தீபம் அணைந்து விடும். அதற்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய் விட்டாலும் தீபம் அணைந்து விடும். எதுவும் அளவோடு இருக்கும் வரை கவலையில்லை. அளவை மீறினால் அமுதம் கூட விஷம்.