Store
  Store
  Store
  Store
  Store
  Store

காரியத்தடை விலக வழி!



   யா வெகுநாட்களாக சொந்த வீடு கட்டுவதற்கு முயற்சி செய்கிறேன் எவ்வளவு தூரம் பாடுபட்டாலும் முடியமாட்டேன் என்கிறது ஏதோ ஒரு பிரச்சனை இடையில் ஏற்பட்டு தடுத்து கொண்டே இருக்கிறது காரியத்தடைகள் எதுவும் இல்லாமல் பணமுடையும் ஏற்படாமல் வீடுகட்டி முடிப்பதற்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள் 

இப்படிக்கு, 
ஜோசப்ஸ்டாலின் ,
பாளையங்கோட்டை. 




     நீங்கள் கிறிஸ்தவர் அதனால் நான் இப்போது சொல்லுகின்ற பரிகாரத்தை செய்வதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் ஒரு மருந்து இந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு ஒரு வகையிலும் வளைகுடா பகுதி சீதோஷ்ண நிலைக்கு இன்னொரு வகையிலும் செயல்படும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் 

பரிகாரங்கள் பூஜைகள் என்று வருகிறபோது அது நிகழ்த்தப்படுகிற இடத்திற்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் அப்படி அமைந்தால் தான் அது சரியான பலனை தரும் உதாரணமாக இங்கிலாந்து நாட்டில் செய்கின்ற கணபதி ஹோமத்திற்கும் இந்தியாவில் செய்கின்ற அதே கணபதி ஹோமத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு எனவே இடம் பொறுத்து தான் சில செயல்களின் பலன்களும் கிட்டுகிறது. 

கிருஷ்ணன் அல்லது பெருமாள் கோவிலுக்கு இருபத்தி ஏழு சனிக்கிழமை சென்று சுவாமிக்கு துளசிமாலை சாற்றி வழிபட வேண்டும் அதே போல அன்றே பசுவிற்கு ஆறு வாழைப்பழங்கள் வழங்கி அதன் வாலை தொட்டு வணங்க வேண்டும் இப்படி செய்தால் காரியத்தடைகள் விலகி நல்லது ஏற்படும். 





Contact Form

Name

Email *

Message *