ஐயா குருஜி வணக்கம். என் மனைவிக்கு அவள் தாய் வீட்டிலிருந்து சிறிதளவு சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவளுடைய அண்ணன்மார்கள் உரிய பங்கு தர மறுக்கிறார்கள் நகை நட்டு போட்டு திருமணத்தை முடித்து வைத்து விட்டோம். பிறகு எதற்கு சொத்தில் பங்கு உண்மையாலுமே உனக்கு ஒன்னும் தரமுடியாது என்று கூறி விட்டார்கள். நாங்களும் பல வகையில் கேட்டு பார்த்து தோல்வி அடைந்து விட்டோம், வழக்கும் போட்டிருக்கிறோம் எங்களுக்கு அந்த மூதாதையர் உருவாக்கிய சொத்து நியாயப்படியான சொத்து கிடைக்குமா என்று பார்த்து சொல்லவும்.
இப்படிக்கு,
தியாகராஜன்,
வால்பாறை.
ஒரு ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சுக்கிரனும் அல்லது நான்காவது கட்டத்தின் அதிபதியான கிரகமும் சனியும் நட்பு கொண்டு வந்து விட்டால் அவருக்கு பூர்வ குடியிலிருந்து முழு விடுதலை வாங்கி கொடுக்கப்படும். அதாவது பிறந்த வீட்டிலிருந்து முழுமையான உரிமையை பெறுவார்கள். அதாவது பெண்வாரிசாக இருந்தாலும் அவருக்கும் சொத்தில் சரிபங்கு கிடைக்கும். இதை இன்னும் தெளிவாக சொல்வது என்றால் உங்கள் மனைவி ஜாதகப்படி அவருக்கு கிடைக்க வேண்டிய தாய் வீட்டு சொத்து கண்டிப்பாக கிடைத்தே தீரும் இதில் எந்த மாற்றமும் இல்லை. மார்கழி மாதம் முழுவதும் துளசி செடிக்கு நீர்வார்த்து வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக கைமேல் பலனை அன்னை துளசி அருளுவாள்.