Store
  Store
  Store
  Store
  Store
  Store

நான் புலவன் அல்ல !



    அறம் செய் என்று ஒளவையார் கூறாமல் அறம் செய்ய விரும்பு என்று கூறுவது ஏன்?

இப்படிக்கு 
புலவர் மயில்வாகனன் 
யாழ்பாணம் 



   றம் என்ற வார்த்தை ஒழுக்கத்தை மட்டும் குறிப்பது அல்ல. பிறருக்கு கொடுத்து உதவுவதையும் அறம் என்று சொல்லலாம். இருப்பவன் கொடுத்து புண்ணியத்தை தேடி கொள்ளலாம். இல்லாதவன் பாவம் என்ன செய்வான்? அவனால் முடிந்தது மனத்தால் நல்ல எண்ணங்களை நினைப்பது மட்டும்தான். 

நீ வாரி வாரி வள்ளலை போல கொடுக்க வேண்டியது அவசியமில்லை மனமகிழ்ச்சியோடு கொடுப்பதற்கு ஆசை படு நினைத்துக் கொள் கால போக்கில் உன் நினைவு செயலாக வரும். எனவே அதற்காக இப்போதே பயிற்சி எடுத்துகொள் என்று கூறுவதற்காகத்தான் அறம் செய்ய விரும்பு என்று ஒளவையார் சொன்னாதாக நினைக்கிறேன். வேறு அர்த்தங்கள் இருந்தால் அது தமிழ் புலவர்களுக்கு தெரியும். நல்ல வேளை நான் புலவன் அல்ல. தப்பாக சொன்னாலும் தப்பில்லை...

Contact Form

Name

Email *

Message *