Store
  Store
  Store
  Store
  Store
  Store

யட்சனி தேவதைகளோடு பேசுவது எப்படி?


மாந்திரீகம்   - 3

   ந்தவிதமான ஜாதகக்குறிப்புகளும், வேறு எந்த வகை உபகரணங்களும் இல்லாமல் சில ஜோதிடர்கள் நாம் போய் எதிரே அமர்ந்தவுடனே, நமது பிரச்சனை என்ன? எதற்காக அவர்களை நாடி வந்திருக்கிறோம் அது தீருமா? தீராதா? என்று கூறத்துவங்கி விடுகிறார்கள். இது அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டால் யட்சனிகளை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் கேட்கும் தகவலை காதுகளில் சொல்கிறது என்றும் பலர் சொல்கிறார்கள். அது எப்படி சொல்கிறது என்று பின்னர் விளக்குங்கள். இப்போது யட்சனி என்றால் என்ன? என்று கூறுங்கள். 
        லையாளத்தில் பேய்களை, யட்ச சக்திகள் என்ற பொருள்பட யட்சி, யட்சன் என்று அழைப்பார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிசாசுகளை அப்படி அழைப்பது தான் வழக்கம். ஆனால் யட்சனிகளுக்கும், பேய்களுக்கும் சம்பந்தமே கிடையாது. கடவுளின் படைப்பில் மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் என்று பல்வேறுபட்ட இனவகைகள் இருப்பது போல, யட்சனி என்பதும் ஒருவகை உயிரினம். சில உயிர்கள் கண்களுக்கு தெரியும். சில உயிர்கள் தெரியாது. கண்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்பதனால் அவைகள் இல்லையென்றாகிவிடாது.

தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் என்ற வார்த்தைகளை பல முறை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். அவர்களும் மனிதர்களை போன்ற ஒரு இனமே. மனிதர்களை கண்களால் பார்க்கலாம், இவர்களை பார்க்க முடியாது. சாஸ்திரங்கள் இவர்களுக்கு சூட்சம தேகிகள் என்ற பெயரை கொடுக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத உடம்பு படைத்தவர்கள் என்பது இதன் பொருளாகும். யட்சனிகள் என்பதும் இந்த வகையை சேர்ந்ததே ஆகும். நாம் வாழுகிற இந்த உலகிற்குள்ளேயே நமது கண்ணுக்கு புலப்படாத இன்னொரு மாய உலகம் இருக்கிறது. அந்த மாய உலகில் வாழ்பவர்களே யட்சினிகள்.

நீங்கள் கூறுவது மாயஜால திரைப்படங்கள் போன்று அதீத கற்பனையாக தெரிகிறது. நாம் வாழுகிற இந்த உலகத்தில் இன்னொரு உலகமும் இருக்கிறது. என்றால் அதை எப்படி நம்ப முடியும்?

நம்புவது மிகவும் கடினம் தான். காரணம் மனிதர்களாகிய நாம், நமது அறிவு எத்தனை தூரம் செல்கிறதோ அத்தனை தூரத்தில் உள்ளவைகளையே உண்மை என்று நம்புகிறோம். அதற்கு அப்பால் உள்ளது நமக்கு தெரியாது என்பதனால், அதை பற்றிய அறிவு நமக்கு கிடையாது என்பதனாலும், அதை இல்லை என்றே மறுத்துவிடுகிறோம். ஆனால் சில காரிய காரணங்களை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உலகம் என்பது இருக்கலாம் என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

நமது கண்களால் பார்க்க கூடிய வெளிச்சம் ஒரு எல்லைக்கு உட்பட்டதே அந்த எல்லையை மீறிய அதீத வெளிச்சத்தையோ அல்லது மிக குறைவான வெளிச்சத்தையோ நம்மால் பார்க்க முடியாது. ஒலி அலைகளையையும், ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் நமது காதுகளால் கேட்க முடியும். மிகவும் சத்தமான் ஒலி, சன்னமான ஒலி இவைகளை கேட்க முடியாது. அதற்காக இந்த ஒளியும் - ஒலியும் இல்லை என்று ஆகிவிடுமா? யட்சனிகள், கந்தர்வர்கள் போன்ற மாய சக்திகள் மிக அதீதமான வெளிச்சத்தை போன்றவர்கள். அதனால் தான் நமது சாதாரண கண்களால் அவர்களை பார்க்க முடியவில்லை.

வானத்தில் அனைத்து இடத்திலும் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் பரவி கிடக்கிறது நாம் அதற்கான சரியான் சமிக்ஞையை (signal) நம் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் கொண்டு வரும் போது படங்களை காண முடிகிறது. அதே போல நமது மூளையையும், மாயா உலக அலைவரிசைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தால் அந்த உலகத்தின் இயக்கத்தை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நமது அறிவுஜீவித்தனம் அவைகளை நம்ப மறுக்கிறது.

யட்சனிகள் ஒருவகை இனம் என்று கூறுகிறீர்கள். ஆனால் யட்சனிகளை பற்றி அறிந்தவர்கள் அவைகள் அறுபத்து நான்கு என்று சொல்கிறார்கள். அவைகள் ஒரு இனம் என்றால் கடவுளால் படைக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையே இவ்வளவு தானா? அவர்களில் ஜனன மரணம் என்பது கிடையாதா?

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் வானத்தில் வெறும் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மட்டும் தானா இருக்கிறது? எண்ணிக்கையில் அடங்காத கோடான கோடி நட்சத்திரங்கள் அல்லவா இருக்கின்றன. இருபத்தி ஏழு என்பது தனிப்பட்ட நட்சத்திரத்தின் எண்ணிக்கை அல்ல. அது ஒரு மண்டலம் அல்லது பிரிவு. பரந்து விரிந்த வான்வெளியில் இருபத்தி ஏழு மண்டலங்களாக நட்சத்திர பிரிவுகள் இருக்கின்றன என்பது இதன் பொருளாகும். அதே போன்று தான் அறுபத்தி நான்கு யட்சனிகளின் வகையாகும்.

கர்ண யட்சனி, கர்ண பிசாசினி என்று தொடங்கி சாமூண்டா, ஹம்சா, சோபனா, வாஷாசித்தி, ஜிக்வாலா மகா குபேரி, சர்வ காரியா, அசுப காரியா, தனதா, ரத்த கம்பளா, ராஜ்யபிரதா, சர்வவித்யா, ஜெயா, போகா, பத்மாவதி, பிரதா, மதனா, விஷாலா,விப்ரமா, வடாக்னி, பண்டாரா, பத்மினி, விசித்திரா, காலகர்ணிகா, சந்திரவாடா, ஜெயா அர்க்க, ஷீரார்ணவா, ராஜ்யதா, அபமார்க், சந்த்ராமுர்த, உத்திஷ்ட, மகாமாயா, வரிசாதனா, இத்யாகா, மாதங்கி, கடலேகுமாரி, சாதனவித்யா, பூதலோஷனாம் ஜலபாணி, சர்வாங்க சுலோட்சனா, ராஜ்யதா, அங்கோலா, தாத்ரிகுண்டி, தாத்ரி உதும்பர, கரிதாத்ரி, பில்வ, தனதாயி, புத்ரதா, ரதிபிரியா, சிஞ்சி, ஜலவாஷ்ணி, கணவதி, சந்திரிகா, அனுராகினி, சொர்ணரேகா, மகாநந்தா, சூரசுந்தரி, அணிலா, சண்டவேகா, மஹாபயா, குஷ, மந்தாகினி என்று அறுபத்தி நான்கு யட்சனி வகைகளை கூறுகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் பல்லாயிரம் யட்சனிகள் உண்டு

நீங்கள் கூறும் அறுபத்தி நான்கு யட்சனிகளில் பெண்கள் பெயர் தான் முழுமையாக இருக்கிறது. யட்சனிகள் என்பது ஒரு இனம் என்றால், அவற்றில் ஆண்களும் இருக்க வேண்டும் அல்லவா?  ஆண் பெயரே இல்லாததற்கு என்ன காரணம்?

உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும், இன விருத்தி செய்வதற்கு ஆண் - பெண் இணைப்பையே பயன்படுத்துகிறது என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் ஆண் -  பெண் இணைப்பு இல்லாமலே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்களும் உண்டு. உதாரணத்திற்கு மண்புழுவை எடுத்துக்கொள்வோம். இது தன் உடல் பகுதியை இன்னொரு பகுதியாக துண்டித்து கொண்டு வாழும் வல்லமை பெற்றது. இதன் மூலமே அதன் இனப்பெருக்கம் நடைபெறுவதாக படித்திருக்கிறேன். இது தவிர வேறு சில ஒரு செல் உயிரின வகைகளும் இனச்சேர்க்கை இல்லாமலே இனவிருத்தி செய்வதாக அறிகிறோம். இப்படி வித்தியாசமான எத்தனையோ உயிர் வகைகள் இறைவன் படைப்பில் உண்டு.


யட்சனிகளும் அத்தகைய விந்தையான படைப்பே ஆகும். அவர்கள் இனத்தில் ஆண் என்ற இனமே கிடையாது. அனைவருமே பெண்கள் தான். அவர்களுக்கு மரணம் என்பது இல்லை என்பதனால், இனவிருத்தி என்பது அவசியம் இல்லாமல் போய்விட்டது. யட்சர்கள் என்ற ஒரு வகையை அடிக்கடி கூறுவார்கள் இவர்கள் யட்சனிகளின் ஆண் இனமோ என்று பலர் நினைக்கலாம். ஆனால் இவர்கள் யட்சனிகள் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டு மனிதர்களின் சுயத்தேவைகளை பூர்த்தி செய்ய ஒருபோதும் வரமாட்டார்கள். இவர்களது பணி வேறு. யட்சனிகள் அப்படி அல்ல. மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மனிதர்களுக்காக நல்ல காரியங்களையும், தீய கர்மாக்களையும் செய்யக்கூடியவர்கள்.

இந்த யட்சனிகளை எப்படி பார்ப்பது? அவர்களை எப்படி வசியப்படுத்துவது?

அயனவெளியில் மந்திரங்கள் என்ற சப்த லயங்கள், பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த லயங்களுக்கு ஏற்ற மந்திர அதிர்வுகளை மனிதர்களாகிய நாம் எழுப்பினால், அதாவது மந்திர பீஜங்களை உருவேற்றினால் எந்த நேரத்தில் அயனவெளி மந்திரமும், நமது மந்திரமும் ஒரே அலைவரிசையில் பயணப்பட்டு சந்திக்கிறதோ அதையே மந்திர சித்தி என்கிறோம். யட்சனிகளுக்கான அவர்களை பார்க்கும், வசியப்படுத்துவதற்கான தனித்தனி மந்திரங்கள் உண்டு. அந்த மந்திரங்களை முறைப்படி உருவேற்றினால் குறிப்பிட்ட யட்சனியின் சந்த லயத்தோடு நமது மந்திர அதிர்வு இணையும் போது யட்சனிகளின் தரிசனத்தை பெறமுடிகிறது.

பார்ப்பது மட்டுமல்ல, அவற்றோடு பேசவும் நம்மால் முடியும். நம்முடைய அருகாமையும், அன்பும் அவைகளுக்கு பிடித்து விட்டால் எப்போதும் நம்மோடு இருப்பதாகவும், நமக்கு ஒத்தாசை செய்வதாகவும் சத்திய பிரமாணம் செய்து கொடுக்கும். அதை தான் யட்சனிகளின் வசியம் என்று சொல்கிறோம். ஒவ்வொரு யட்சனிக்கும் தனித்தனி மந்திரங்கள் உண்டு. தனித்தனி பிரயோக முறைகளும் உண்டு. அவற்றை முறைப்படி செய்தால் ஆர்வம் உள்ள எவருக்கும் வெற்றி கிடைக்கும்.


உங்களிடம் யட்சனிகள் வசப்பட்டது உண்டா? அதற்கான மந்திரங்கள் தெரியுமா?

யட்சனிகளை வசப்படுத்தவில்லை என்றால் அவர்களை பற்றிய விபரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. நான் இதுவரை கூறி வந்த யட்சனி பற்றிய தகவல் அனைத்தும் புத்தகங்களில் படித்தோ, குருமார்களிடம் கேட்டறிந்ததோ அல்ல. யட்சனிகளிடம் தானாக பெற்ற அனுபவத்தின் விளைவுகளே. மந்திரங்கள் தெரியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். மந்திரங்கள் தெரியாமல் அவற்றை வசப்படுத்தவும் முடியாது. அந்த மந்திரங்களை பிறருக்கு உபதேசிக்கவும் முடியாது. நானும் நிறைய பேருக்கு அவற்றை உபதேசித்து இருக்கிறேன்.


உங்களிடம் மந்திர தீட்சை எடுத்துக்கொண்ட அனைவரும் யட்சனி வசியத்தில் வெற்றி பெற்றார்களா?

அனைவரும் வென்றார்கள் என்று என்னால் கூற முடியாது. ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வந்து பாதியில் விட்டவர்களும் உண்டு. மன ஒருநிலைப்பாடு இல்லாமல் பலவருடங்கள் செய்தும் வெற்றி பெறாமல் போனவர்களும் உண்டு. இந்தமாதிரி வித்தைகளை கற்றுக்கொள்ள வெறும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. நிதானம் வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அருளால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வேண்டும். அப்படி வென்றவர்கள் பலரும் என் மாணவர்களாக இன்றும் இருந்து வருகிறார்கள்.

நீங்கள் கூறுவதை வைத்துப்பார்த்தால் யட்சனிகள் என்பது பெண்தெய்வ சக்திகள் என்பது புரிகிறது. இவர்களை வசியப்படுத்தும் மந்திரங்களை, ஆண்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? அதாவது மனித ஜாதியில் உள்ள பெண்கள், யட்சனி மந்திரங்களை பயன்படுத்த முடியாதா? யட்சனிகளை வசப்படுத்தி வைத்து கொண்டால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறப்படுகிறதே அதுவும் உண்மையா?

யட்சனிகள் என்பது பெண்தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் ஒருபடி தெளிவாக கூறுவது என்றால், சிவபெருமானுக்கு எப்படி பூதகணங்கள் சேவை செய்கின்றதோ அதே போன்றே யட்சனிகள் அம்பாளுக்கு சேவை செய்யும் சக்திகள். இந்த சக்திகளை ஆண்கள் மட்டும் தான் மந்திர ஜபம் செய்து சித்தி படுத்தலாம் பெண்களால் அது இயலாது என்று எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் தீட்டு காலம் என்பது மந்திர ஜபம் செய்ய சற்று இடைஞ்சலாக வரும். அதாவது ஒரு மண்டலகாலம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால் அதில் ஐந்து நாட்கள் தெய்வ காரியங்களை விலக்கி வைக்கவேண்டிய நிலை பெண்களுக்கு உண்டு.

அதனால் தான் பலர் பெண்கள் தீட்டு பருவம் கடந்த பிறகு மந்திரதீட்சை பெறவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆர்வம் உள்ள பல பெண்கள் இதன் மூலம் அதிகமான பாதிப்பை சந்திக்கிறார்கள். ஒரு காலத்திற்கு பிறகு தான் ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் எனும் போது தேவையற்ற கால விரயம் ஏற்படும், மனநிலையில் மாறுதல் வரும், வாழ்க்கை சூழல் கூட மாறிவிடலாம். பிறகு காலம் முழுவதும் நினைத்ததை செய்ய முடியாமலே போய்விடும் என்று பல பெண்கள் கருதுகிறார்கள் என்னை பொறுத்தவரை இது தேவையற்ற எண்ணம் என்று நான் கூறுவேன் ஐந்து நாட்கள் அவர்கள் செய்யக்கூடாது என்றால் அந்த ஐந்து நாட்கள் பொறுத்திருந்துவிட்டு விட்டு ஆறாவது நாள் செய்யலாமே ஐந்து நாட்கள் மட்டும் தானே கூடும். ஆகவே யட்சனி பயிற்சிகள் மட்டுமல்ல வேறு எந்த பயிற்சியையும் தடையில்லாமல் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவை சேர்ந்த பெண்களுக்கே மந்திரங்களை கற்றுக்கொள்ள ஆயிரம் தடைகளை நாம் போடுகிறோம். அவர்களுக்குரிய உடல் உபாதைகளை காரணம் காட்டி வாய்ப்புகளை தட்டி பறிக்கிறோம். நிச்சயம் இது சாஸ்திர விரோதமான காரியம். மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஒரு பெண்மணி மந்திர தீட்சை எடுத்து கொள்ள என்னிடம் வந்தார் அப்போது அவர் என்னிடம் பெண்கள் மந்திரங்களை கற்கலாமா? குறிப்பாக வெள்ளைக்கார பெண்களுக்கு கற்று கொடுப்பீர்களா? என்று கேட்டார். ஆண்களை போன்று பெண்களும் மனித இனம் தானே அவர்கள் கற்றுக்கொள்வதற்கு என்ன தடை இருக்கிறது என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன். நான் அதற்காக கேட்கவில்லை. எனக்கு மந்திர தீட்சை தருவதற்கு அரைமனதோடு சம்மதித்தீர்களா முழுமனதோடு சம்மதித்தீர்களா என்பதை அறிந்து கொள்ளவே கேட்டேன் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறி என்னிடம் தீட்சை பெற்று சென்றார். இன்று யட்சனி வசியத்தில் வெற்றி பெற்று கர்ண யட்சனி என்ற சக்தியோடு வெற்றிகரமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்.


உங்கள் அடுத்த கேள்வி யட்சனிகளை வசியப்படுத்துவதனால் குடும்பம் கெட்டு விடுமா? குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கைத்தரமும் கீழ்நிலைக்கு போய்விடுமா? என்பது தானே?

யட்சனிகளை வசியப்படுத்தினாலும் சரி, வேறு எந்த தெய்வ சக்திகளை வசியப்படுத்தினாலும் அவைகளை வைத்து நல்ல காரியம் செய்தால் பத்து பேருக்கு உதவி ஒத்தாசையாக இருந்தால் வழி தெரியாதவனுக்கு வழிகாட்டினால் என்றுமே கெடுதி வராது. மாறாக மற்றவர்களிடம் இல்லாத சக்தி என்னிடம் இருக்கிறது என்ற ஆணவத்தில் அநியாயம் செய்தால் அநீதிக்கு துணைபோனால் கண்டிப்பாக யார் தடுத்தாலும் கெடுதி வந்தே தீரும். இதில் மாற்றம் இல்லை.

யட்சனிகளை வசப்படுத்துவதனால் என்ன பயனை பெறலாம்

மனிதப்பிறவியின் மிக முக்கிய நோக்கமே இறைவனின் பாதங்களில் ஐக்கியம் அடைவது தான். அப்படி ஐக்கியம் அடைய பல ரகசிய முறைகள் உண்டு. அவற்றை நல்ல யட்சனிகளின் மூலம் கற்றுக்கொள்ளலாம். யட்சனிகளின் துணை கொண்டு குறி சொல்லலாம் என்பது கடைசி தரம். அவைகள் நமது எதிர்காலத்தையும் குறிப்பிடும். மற்றவர்களின் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் வழிகளையும் கூறும். மிக குறைந்தபட்சமாக ஒரு தொழிலை நாம் துவங்கி நடத்தி கொண்டிருக்கும் போது அதில் நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக்கொள்ளும் மார்க்கத்தை யட்சனிகள் முன்கூட்டியே காட்டி விடும். தொழில், பங்காளிகளில் நல்லவர்கள் யார்? கெட்டவர் யார்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒன்றில் முதலீடு செய்வதற்கு முன்பு லாபம் வருமா? நஷ்டம் வருமா? என்பதையும் அறிந்து கொள்ளலாம். பங்கு சந்தை முதலீட்டில் யட்சனிகளின் வழிகாட்டுதல்கள் இருந்தால் கோடிகோடியாக சம்பாதிக்கிறோமோ இல்லையோ முதலீட்டை இழக்காமல் பார்த்து கொள்ளலாம். யட்சனி வசியத்தை முறைப்படி கற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் எந்த காலத்திலும் பணத்தட்டுப்பாட்டோடு வாழ்ந்ததை நான் பார்த்தது இல்லை இப்படி எத்தனையோ உபயோகங்கள் மனித குலத்திற்கு யட்சனிகள் செய்கின்றன. அதை நாம் தான் சரிவர பயன்படுத்தி கொள்வது கிடையாது.

Contact Form

Name

Email *

Message *