Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தைபேறு தரும் மந்திரம் !



பாசம் மிகுந்த குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் அக்காவிற்கு திருமணமாகி பத்துவருடங்கள் முடிந்துவிட்டது. அக்காவின் உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. அவள் கணவனின் உடல்நிலையிலும் எந்த குறையும் இல்லை. இருந்தாலும், இருவருக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்கள் உடம்பில் எந்த சிக்கலும் இல்லை. பொறுமையாக காத்திருங்கள் அல்லது செயற்கைமுறை கருத்தரிப்புக்கான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் தத்து எடுப்பது தான் ஒரே வழி என்கிறார்கள்.

இதனால் மனமுடைந்து என் சகோதரி மிகவும் சோகமாக இருக்கிறாள். நீங்கள் கொடுக்கும் அமிர்ததாரா மகா மந்திர தீட்சை நினைத்ததை கொடுக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என் அக்காவின் பிரச்சனைக்கு அது தீர்வாக அமையுமா? அவளும், அவளது கணவரும் தீட்சை எடுத்து கொள்ளலாமா? தயவு செய்து வழி காட்டவும்.

இப்படிக்கு,
ஜகதீஸ்வரி,
புதுடெல்லி




ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு இரண்டு வருடமாக ஒவ்வாமை காரணமாக உடம்பில் அரிப்பு இருக்கிறது. ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஓரளவு பலனும் தெரிகிறது. என் ஜாதகப்படி ஆறாம் இடத்தில் ராகு இருப்பதனால், ஆரோக்கிய குறைவு, அடிக்கடி ஏற்படும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதற்கு ராகுவின் கொடுமையை குறைக்க கூடிய சரியான பரிகாரம் செய்யவேண்டும் என்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் அமிர்ததாரா மஹாமந்திர தீட்சை கிரக தோஷங்களை விலக்கும் என்று எழுதியிருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் நான் அந்த தீட்சை எடுத்து கொள்ளலாமா? எனக்கு பலன் கிடைக்குமா? தயவு செய்து பதில் கூறவும்.

இப்படிக்கு,
நாகராஜன்,
கோவை.



குருஜி அவர்களின் திருப்பாதங்களுக்கு, அனந்தகோடி நமஸ்காரம். என் பூர்வீகம் மதுரை என்றாலும், நான் தற்போது மும்பையில் வாழ்கிறேன். எனக்கு ஒரே மகள், இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுமார் அவளது ஜாதகப்படி, புதனும், கேதுவும் நல்ல நிலையில் இல்லாததால் அவ்வளாவாக படிப்பு வராது என்று கூறுகிறார்கள். எனது ஒரே மகளுக்கு நான் கொடுக்கும் அழியாத சொத்து கல்வி மட்டும் தான் என்று நினைக்கிறேன். அதுவும் குறைந்துவிட்டால், வருங்காலத்தில் என் மகள் சொந்த காலில் நிற்க முடியாத நிலையில் இருப்பாள். எனவே அந்த நிலையை தடுக்க அமிர்ததரா மஹாமந்திர தீட்சை அவள் எடுத்து கொள்ளலாமா நல்ல பதிலை தாருங்கள்.

இப்படிக்கு,
நெடுஞ்செழியன்,
மும்பை







ந்திர தீட்சை என்பது மேஜிக் செய்வது போல் நமது வாழ்க்கையை நிமிட நேரத்தில் மாற்றிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகளிலிருந்து, உடனடியாக விடுபடவேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில், ஆனந்தமான வாழ்வை பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அதீதமான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இதை தவறு என்று நேராக சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை என்றாலும், அப்படி எதிர்பார்ப்பது யதார்த்தத்தை மறந்துவிட்ட நிலையாகும் என்பதை உணர்த்த வேண்டும்.

நோய் வருகிறது என்றால் அதற்கு மருந்து உண்ணுகிறோம் என்றால், அந்த மருந்து உடம்பில் சென்று இரத்தத்தோடு கலந்து, நாடி நரம்புகளில் பாய்ந்து, குறிப்பிட்ட நோயை தாக்கி நம்மை சுகப்படுத்துவதற்கு சற்று நேரமாவது நாம் பொறுத்திருக்க வேண்டும். ஒரு மருந்து எப்படி உடம்பிற்குள் வேலை செய்கிறதோ? அதே போலதான் மந்திரம் என்பதும் நமக்குள் வேலை செய்கிறது.

நேற்றுவரை சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனதை பிடித்து இழுத்து, கால்மணி நேரமாவது, அங்கே இங்கே ஓடாமல் கட்டி போடுகிறோம். அப்படி கட்டும் போது, அது உடனடியாக வசப்பட்டு வராது. முரண்டு பிடிக்கும். மிரண்டும் ஓடும். சில நாட்கள் செல்ல செல்ல, மனது நிலை பட்டு மந்திரத்தின் அதிர்வுகளை உள்வாங்க துவங்கும். இதற்கு எப்படியும் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஆகும். அதுவரை மனம் சலிக்காமல், முயற்சியை கைவிடாமல், சோர்வுக்கு இடம் கொடுக்காமல், தொடர்ந்து மந்திரத்தை உருவேற்ற வேண்டும்.

மந்திர அதிர்வு என்பது, நமது உடம்பில் சேர சேர இதுவரையில் உடம்பிற்குள் இருந்த எதிர்மறையான அதிர்வுகள் வெளியேற துவங்கி, நல்ல சக்திகள் உள்ளுக்குள் உற்பத்தியாகும். அப்படி உருவாகும் மந்திரத்தின் சக்தியானது, நமது ஆத்மாவில் நமது விதியில் பதிவாகி இருக்கும் தீய இயல்புகளை, துயரமான பாதிப்புகளை துணியின் மீது பதிந்திருக்கும் அழுக்கை, சோப்பு எப்படி சிறிது சிறிதாக கரைத்து சுத்தமானதாக மாற்றுமோ அதே போல நாம் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகளை, வலிமை குறைத்து மெலியதாக மாற்றி, ஒரு நேரத்தில் இல்லாததாக ஆக்கி நமக்கு நன்மை செய்ய துவங்குகிறது.

மனிதன் கடவுளை பற்றி, அவரது உறவை பற்றி, அவரது கருணையை பற்றி, அதிகம் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு அவனது சொந்த பிரச்சனைகளே காரணமாகும். அமிர்ததாரா மகாமந்திரம் என்பது, மனிதனை சொந்த சிக்கலிலிருந்து விடுவித்து, அதாவது அந்த சிக்கல் விதி வழி வந்திருந்தாலும், மதி வழி வந்திருந்தாலும், கிரகங்களின் கோளாறுகளால் வந்திருந்தாலும், அவைகளை விலக்கி நம்மை இறைவன் என்ற ராஜபாட்டையில் அழைத்து செல்ல துவங்கும்.

அப்படி என்றால், நமது பெரும் துயரங்கள் என்று எது இருக்கிறதோ அதாவது குழந்தையின்மை, ஆரோக்கியமின்மை, செல்வமின்மை, வாழ்க்கையின்மை ஆகிய இல்லாமைகளை முதலில் நீக்க துவங்கும். அதன் பிறகு, நமக்கு தேவையான பற்றின்மையை, அதாவது நிரந்தரமான மன அமைதியை கொடுத்து, இறைவனின் அருளை பெற உதவி செய்யும். அதன் அடிப்படையில், இங்கே வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும், அமிர்ததாரா மகா மந்திர தீட்சை, கண்டிப்பான பலனை தரும்.

மந்திரம் சொல்வதில், ஏற்படும் மனச்சோர்வு எதிர்பாராத தடைகள் போன்றவற்றால், அடையவேண்டிய பலன் சிறிது காலம் கடந்து கிடைக்குமே தவிர, ஒருபோதும் கிடைக்காமல் போவது இல்லை. நமது ஆர்வமும், வேகமும் மந்திரத்தின் மேல் இருந்தால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உடனே கிடைக்கும். ஐயோ சோகம் நம்மை சுமை தூக்க முடியாமல் தடுக்குதே, தள்ளாட வைக்கிறதே என்று சுய பச்சாதாபத்தில் மந்திரம் சொல்வதில் சுணக்கம் காட்டினால் பலனும் சுணங்கும் என்பது இயற்கை.

பல புகழ்பெற்ற மலையாள திரைப்படங்களை இயக்கிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளருக்கும் மற்றவர்களுக்கும் நடந்த பனிப்போரினால் பாதிக்கப்பட்டு படவாய்ப்புகள் இல்லாமல், சில வருடங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். அவர் அமிர்ததரா மஹாமந்திர தீட்சை எடுத்த பிறகு, முழு மூச்சாக உண்ணும் நேரம், உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மந்திரத்தை உருவேற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். இரண்டே மாதத்தில், பிரச்சனை ஏற்படுத்திய தயாரிப்பாளரே நேரில் வந்து புதுபடம் ஒன்றை இயக்குவதற்கு இவருக்கு அட்வான்சும் கொடுத்துள்ளார்.

இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், மகாமந்திரம் என்பது மிக சுலபமாக உங்களுக்கு கிடைத்தாலும், இது பிரம்மாஸ்திரதிற்கு இணையானது. ராமன் கையில் உள்ள வில், எப்படி இலங்கையின் தலைவிதியையே மாற்றியதோ, அதே போன்று அமிர்ததாரா மகாமந்திரம், உங்கள் தலையெழுத்தை மாற்ற வல்லது. மூர்த்தி சிறியது என்றாலும், கீர்த்தி பெரியது. எனவே துயரங்களை கண்டு துவண்டு போவதை விட்டு விட்டு, புதிய வாழ்க்கை நமக்கிருக்கிறது என்று நம்பிக்கையோடு வாருங்கள் நாராயணன் துணை செய்வான்.






Contact Form

Name

Email *

Message *