Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூஜைக்கு தாம்பூலம் அவசியமா?




ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் தினசரி பூஜை செய்து வருகிறேன். சில நாள் பூஜையில் வெற்றிலை பாக்கு வைக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் பூஜை தவறாகி விடுமா? கண்டிப்பாக வெற்றிலை பாக்கு வைத்து தான் பூஜை செய்ய வேண்டுமா? 


இப்படிக்கு,
சுந்தரேசன்,
அரியலூர்.



தாம்பூலம் இல்லாத விருந்து அரை விருந்து என்று கூறுவார்கள். மனிதர்களாகிய நமக்கு வைக்கும் விருந்தே பரிபூரணம் அடைய தாம்பூலம் வேண்டுமென்றால், இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம் தாம்பூலம் இல்லாமல் எப்படி பூரணமாகும். எனவே பூஜையில் வெற்றிலை, பாக்கு அவசியம் தேவை. இருந்தாலும் அது கிடைக்காத நேரத்தில், கிடைக்காத இடத்தில் பூஜை செய்யாமல் இருக்க முடியுமா? எனவே இறைவன் குறைகளை பெரிதுபடுத்த மாட்டார். அறியாமல் செய்த தவறுகளையும், வேறு வழி இல்லாமல் செய்த குறைகளையும் கடவுள் மன்னிப்பார். அதற்காக மன்னிப்பையே உரிமையாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து தவறுகள் செய்யக் கூடாது.









Contact Form

Name

Email *

Message *