இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுவது அவரது பலவீனத்தையா காட்டுகிறது...?
என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு சேவியர் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.
சேவியரின் பதில் இதோ
ஏசு தெய்வ தன்மை நிறைவாக இருந்த மனித அவதாரம். அவர் மனித உருவில் இருந்ததால் அவரிடம் மனிதனின் குணங்கள் வெளிப்பட்டது. அவருக்கு பசி எடுத்து சாப்பிட எதாவது உணவு உள்ளதா என கேட்டார். கோவிலில் வியாபாரம் நடப்பதை பார்த்த நேரத்திலும், அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிய நேரத்திலும் கோபம் கொண்டார். அவர் தாம் சிலுவையில் அறையப்பட போவதை நன்றாக அறிந்து இருந்ததாலும் மேலும் மனித அவதாரத்தில் இருந்ததாலும் தான் இறைவனிடம், இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும் என வேண்டினர். ஆனாலும் அந்த சிலுவையை முழு மனதுடன் அவர் ஏற்று கொண்டார், சிலுவையில் இருந்த நேரத்தில், துன்பம் மிகுதியாக இருந்ததால் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என கேட்டார். இதை ஒரு பிள்ளை தந்தையிடம் கேட்ட மாதிரி எடுத்து கொள்ளலாம். இதில் பலமும் இல்லை பலவீனமும் இல்லை. ஏசு சிலுவையில் இருந்த நேரத்தில் தெய்வ தன்மையையும், மனித தன்மையையும் சேர்த்தே வெளி டுத்தினார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக தந்தையே இவர்களே மன்னியும் என்றார். அந்த நேரத்திலும் தன்னை ஈட்டியால் குத்தியவனே குணப்படுத்தினார். ஆகவே 'தேவனே ஏன் என்னை கை விட்டீர்' என சொன்னது அவர் இருந்த அந்த அவதாரத்தின் தன்மையே ஆகும்.
இப்படிக்கு
சேவியர் , சென்னை
|