உங்கள் பசு என்ன நிறம் ?
நிலத்தில் கலந்து விட்ட விஷத்தன்மையை போக்கி இயற்கையான ஜீவிதத் தன்மையை உருவாக்க, ஒரு முறை பல பசுக்களை தங்க வைத்து கோமியம் சாணம் போன்றவைகள் கிடைக்க ஆஸ்ரமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
பசுக்களை ஓட்டி வந்த இரண்டு பேர் சில நாட்கள் ஆஸ்ரமத்திலேயே தங்கி இருந்தனர். ஓய்வான நேரங்களில் குருஜி அவர்களிடம் பேச்சுக் கொடுப்பார், அப்படி பேசிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் குருஜியிடம் " மற்ற மிருகங்களின் பாலை விட பசும்பாலை மட்டும் மனிதன் விரும்பி சாப்பிடுவதேன்? இதில் அப்படி என்ன சிறப்பிருக்குசாமி?" என்று கேட்டான்,
அதற்கு குருஜி,
கிருஷ்ணாயா கோ பவேத்துக்தம்
வாத ஹாநி குணாதிகம்
பீதாய ஹரதே பித்தம்
ததா வாத ஹரம் பவேத்
சிலேஷ்மனம் குரு சுக்லாயா
நக்தா சித்தி ராசவாத ஹ்ருத்
என்று நம்ம பெரியவர்கள் சொல்கிறார்கள். அதாவது கருப்பு நிறத்தில் உள்ள பசுவின் பால் மிகவும் சிறப்பு தன்மையுடையது, இதில் மனிதன் உடம்பில் வாய்வு குறைபாடுகளால் வருகின்ற வியாதியை அகற்றும் சக்தி உள்ளது, இது மட்டுமில்லை ரத்தத்தில் கலந்திருக்கும் விஷசத்துக்களை முறியடித்து பிராண சத்தை அதிகப்படுத்தும்.
உடம்பு மட்டுமில்லாமல் கொம்பு கூட கருப்பாக சில பசுக்கள் இருக்கும் இன வகைகளைத்தான் காரம் பசு என்று அழைப்பார்கள். வடமொழியில் இதற்கு கபிலா என்று பெயர், இந்த பசுவின் பால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு மிகவும் ஏற்றது, இந்த பாலால் அபிஷேகம் செய்தால் வேண்டுதல்கள் உடனடியாக நடக்குமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன, மேலும் கபிலா பசுவினிடத்தில் கிடைக்கும் நெய் ஹோமம் செய்ய ஏற்றது.
மஞ்சள் நிற பசுவின் பால் உடம்பில் உள்ள பித்தத்தையும் வாதத்தையும் கண்டிக்கும், வெண்மையான பசு
குருத்தன்மை கொண்டது, ஒவ்வொரு மனுஷனுக்கும் குரு கிரகஹத்தின் ஆகர்ஷணத்தையும் மஹான்களின் அருளையும் அபரிதமாக ஈர்த்து தருவது.
சிவந்த நிறப்பசு அதாவது நாட்டு வழக்கில் செவலைப் பசு என்போமே அதனுடைய பால் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். பல வண்ணமும் கலந்த பசு இருக்கிறதே அது சிலேத்துமம் அதாவது நீரால் ஏற்படும் வியாதியை போக்கும் என்கிறார்கள்.
இவையெல்லாம் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பலன்களே தவிர சீமை மாடுகளுக்கு இது பொருந்தாது, மேலும் எந்த மாடாய் இருந்தாலும் கன்று ஈன்ற பதினைந்து நாட்களுக்கு பிறகு தான் அதன் பாலை பயன்படுத்த வேண்டும். அதைப் போல கன்றை இழந்த பசுவின் பாலை பயன்படுத்தவே கூடாது, அதில் தாய்மையின் துயரம் ஊறிக் கிடப்பதால் நம் உடம்பில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்" என்று விளக்கம் சொன்னார்.
பசுவின் நிறத்தின் சிறப்பையும், அதன் பாலில் உள்ள மகத்துவத்தையும் குருஜி சொல்ல, கேட்ட அவர்கள் மலைத்துப் போனார்கள் ஒரு வேளை நாம் மாடுகளை மட்டும்தான் மேய்க்கிறோம், குருஜி மனித மனம் என்ற அடங்காத மாடுகளையும் மேய்ப்பதனால் இந்த மாடுகளை பற்றிய சங்கதிகளையும் அறிந்து வைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டார்களோ என்னவோ!
குருஐி